ஆன்டனி ஜானி
07-11-2010, 03:18 PM
. இங்கிலாந்தின் அரசராக 1936ம் ஆண்டு எட்டாம் எட்வர்ட் இருந்தார். தன்னுடைய பாட்டியான, புகழ்பெற்ற விக்டோரியா மகாராணியின் குணங்களை நன்கு அறிந்தவர்.
அவர் சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவரது ஆசிரியர் ஒரு நாள், ""சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகவே கருதப்படுவர்,'' என்றார்.
அதற்கு எட்வர்ட், ""ஐயா! சொர்க்கத்தில் என்னுடைய பாட்டி விக்டோரியா மகாராணி கூடவா, எல்லாருடனும் ஒன்றாகக் கருதப்படுவார்?'' என்று கேட்டான்.
""ஆமாம்! சொர்க்கத்தில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமில்லை. அரசனாக இருந்தாலும் சரி, அடிமையாக இருந்தாலும் சரி, ஒன்றாகவே கருதப்படுவர்!'' என்று சற்று விளக்கமாகக் கூறினார் ஆசிரியர். அதைக்கேட்ட சிறுவன் எட்வர்ட்டிற்குக் கோபம் வந்தது.
""என் பாட்டியை யாரென்று நினைத்துக் கொண்டீர்கள்? பிரிட்டனுக்கே மகாராணியாக இருந்தவர். அவரை மற்றவர்களுக்குச் சமமாக நடத்தினால் அது அவருக்குப் பிடிக்காது. ஆகவே, அவர் சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்!'' என்று சொன்னார்.
அதைக்கேட்டதும் விக்டோரியா மகாராணிக்கே சிரிப்பு வந்துவிட்டது. இந்த கதையில் நாம் புரிந்து கொல்லவேன்டியது சொர்க்கத்தில் உயர்ந்தவன்,தாழ்ந்தவன் பாகுபாடு கிடையாது............ ஒரே குலம்,ஒருவனே தேவன்
அவர் சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவரது ஆசிரியர் ஒரு நாள், ""சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகவே கருதப்படுவர்,'' என்றார்.
அதற்கு எட்வர்ட், ""ஐயா! சொர்க்கத்தில் என்னுடைய பாட்டி விக்டோரியா மகாராணி கூடவா, எல்லாருடனும் ஒன்றாகக் கருதப்படுவார்?'' என்று கேட்டான்.
""ஆமாம்! சொர்க்கத்தில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமில்லை. அரசனாக இருந்தாலும் சரி, அடிமையாக இருந்தாலும் சரி, ஒன்றாகவே கருதப்படுவர்!'' என்று சற்று விளக்கமாகக் கூறினார் ஆசிரியர். அதைக்கேட்ட சிறுவன் எட்வர்ட்டிற்குக் கோபம் வந்தது.
""என் பாட்டியை யாரென்று நினைத்துக் கொண்டீர்கள்? பிரிட்டனுக்கே மகாராணியாக இருந்தவர். அவரை மற்றவர்களுக்குச் சமமாக நடத்தினால் அது அவருக்குப் பிடிக்காது. ஆகவே, அவர் சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்!'' என்று சொன்னார்.
அதைக்கேட்டதும் விக்டோரியா மகாராணிக்கே சிரிப்பு வந்துவிட்டது. இந்த கதையில் நாம் புரிந்து கொல்லவேன்டியது சொர்க்கத்தில் உயர்ந்தவன்,தாழ்ந்தவன் பாகுபாடு கிடையாது............ ஒரே குலம்,ஒருவனே தேவன்