inban
04-11-2010, 06:07 PM
அப்போதெல்லாம்
ஏரிபோலவே
எல்லோர்க்கும்
நிறைந்த மனதிருந்தது.
மதகு வழியே
துள்ளிப் பாய்ந்த
தண்ணீர்தான் என்னை
பட்டணத்துக் கல்லூரிவரை
படி ஏற வைத்தது.
நண்டு வலையென நம்பி
நீட்டிய கரத்திலே
நெளிந்த நீர் பாம்பு...
துலவிய சேற்றிலே துள்ளி
அரைக்கால் சட்டைக்குள் புகுந்து
அட்டகாசம் செய்த
விரால் மீன்...
மதகுச் சந்திலே மறைந்தபடி
மாமா மகளுக்கு வைத்த
முதல் முத்தம் - என
அன்னையப்போல
அடைக்கலமருளிய
இந்த ஏரிக்குத்தான் சொந்தம்
எனது இளமைப் பருவத்து
எல்லா இலச்சினைகளும்.
கார்த்திகையில்
கரு வைத்து
சித்திரை வரைக்கும்
சர்வ வளத்தோடு
சிங்காரம் பூணும்
இந்த ஏரிதான்
தொழு நோயாளிபோல்
தனது உறுப்புக்களை
எல்லாம்
இழந்து கிடக்கிறது
பட்டினி
வறட்சி
வெறுமை
இழப்பு-என
ஏரி போலவேதான் இருக்கிறது
இங்கே
எல்லோருடைய வாழ்க்கையும்.
ஏரிபோலவே
எல்லோர்க்கும்
நிறைந்த மனதிருந்தது.
மதகு வழியே
துள்ளிப் பாய்ந்த
தண்ணீர்தான் என்னை
பட்டணத்துக் கல்லூரிவரை
படி ஏற வைத்தது.
நண்டு வலையென நம்பி
நீட்டிய கரத்திலே
நெளிந்த நீர் பாம்பு...
துலவிய சேற்றிலே துள்ளி
அரைக்கால் சட்டைக்குள் புகுந்து
அட்டகாசம் செய்த
விரால் மீன்...
மதகுச் சந்திலே மறைந்தபடி
மாமா மகளுக்கு வைத்த
முதல் முத்தம் - என
அன்னையப்போல
அடைக்கலமருளிய
இந்த ஏரிக்குத்தான் சொந்தம்
எனது இளமைப் பருவத்து
எல்லா இலச்சினைகளும்.
கார்த்திகையில்
கரு வைத்து
சித்திரை வரைக்கும்
சர்வ வளத்தோடு
சிங்காரம் பூணும்
இந்த ஏரிதான்
தொழு நோயாளிபோல்
தனது உறுப்புக்களை
எல்லாம்
இழந்து கிடக்கிறது
பட்டினி
வறட்சி
வெறுமை
இழப்பு-என
ஏரி போலவேதான் இருக்கிறது
இங்கே
எல்லோருடைய வாழ்க்கையும்.