inban
02-11-2010, 03:02 PM
ருசித்துப் பருகும்
ஒரு மிடறு தேநீர்
அறுந்து விழும்
ஒருதுளி கண்ணீர்
கோலமிடும்
ஒரு சொட்டு வியர்வை
காற்றில் கரையும்
ஒரு குயிலின் கீதம்
உரக்க ஏட்டில் படியும்
ஒரு இரவின் கனவு
மனசினை மலர்த்தும்
ஒரு மழலையின் சிரிப்பு
ஊர்வலத்தில் சிதறும்
ஒரு வாக்கியத்தின் ஒலி
மயக்கத்தில் ஆடும்
ஒரு மரத்தின் கிளை
சிதறித் தெறிக்கும்
ஒரு துளி விந்து
உதறிப்போகும்
ஒரு மேகத்தின் திவலை
இவைகளில்
ஏதேனும் ஒன்றில்தான்
ஒளிந்திருக்கிறது
எனது
அடுத்த கவிதைக்கான கரு.
ஒரு மிடறு தேநீர்
அறுந்து விழும்
ஒருதுளி கண்ணீர்
கோலமிடும்
ஒரு சொட்டு வியர்வை
காற்றில் கரையும்
ஒரு குயிலின் கீதம்
உரக்க ஏட்டில் படியும்
ஒரு இரவின் கனவு
மனசினை மலர்த்தும்
ஒரு மழலையின் சிரிப்பு
ஊர்வலத்தில் சிதறும்
ஒரு வாக்கியத்தின் ஒலி
மயக்கத்தில் ஆடும்
ஒரு மரத்தின் கிளை
சிதறித் தெறிக்கும்
ஒரு துளி விந்து
உதறிப்போகும்
ஒரு மேகத்தின் திவலை
இவைகளில்
ஏதேனும் ஒன்றில்தான்
ஒளிந்திருக்கிறது
எனது
அடுத்த கவிதைக்கான கரு.