M.Rishan Shareef
01-11-2010, 05:23 AM
ஏமாற்றங்களின் அத்திவாரம் (http://mrishanshareef.blogspot.com/2010/10/blog-post_11.html)
ஏமாற்றங்களின் அத்திவாரம்
மிகப் பலம் வாய்ந்தது
வாழ்நாள் முழுவதற்குமான
ஏமாற்றச்சுமையைத் தாங்கிக் கொள்ளும்படியாக
சிறுவயது முதலே இடப்படுமது
ஒரு விதையைப் போல நடப்படுவது
காலங்களை உறிஞ்சி வளரும்
அத்திவார மரம் எப்பொழுதும்
ஏமாற்றத்தின் பூக்கள் கொண்டே சிரிக்கிறது
எனினும்
நிழலில் அமர்ந்தே ஏமாற்றுபவர்களின்
தலையில் விழும்படியான காய்களெதையும்
இறப்புவரையிலும் தராதபடியால்
ஏமாற்றத்தின் வேர்கள் உறுதியாக ஊடுருவுகின்றன
ஒட்டுண்ணித் தாவரம் போல
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
20091216
நன்றி
# கலைமுகம் இதழ் 50 - ஒக்டோபர் 2010
# உயிர்மை
# திண்ணை
# தமிழ் எழுத்தாளர்கள்
ஏமாற்றங்களின் அத்திவாரம்
மிகப் பலம் வாய்ந்தது
வாழ்நாள் முழுவதற்குமான
ஏமாற்றச்சுமையைத் தாங்கிக் கொள்ளும்படியாக
சிறுவயது முதலே இடப்படுமது
ஒரு விதையைப் போல நடப்படுவது
காலங்களை உறிஞ்சி வளரும்
அத்திவார மரம் எப்பொழுதும்
ஏமாற்றத்தின் பூக்கள் கொண்டே சிரிக்கிறது
எனினும்
நிழலில் அமர்ந்தே ஏமாற்றுபவர்களின்
தலையில் விழும்படியான காய்களெதையும்
இறப்புவரையிலும் தராதபடியால்
ஏமாற்றத்தின் வேர்கள் உறுதியாக ஊடுருவுகின்றன
ஒட்டுண்ணித் தாவரம் போல
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
20091216
நன்றி
# கலைமுகம் இதழ் 50 - ஒக்டோபர் 2010
# உயிர்மை
# திண்ணை
# தமிழ் எழுத்தாளர்கள்