அமரன்
29-10-2010, 10:58 PM
தினமும் இரவில்
முற்றத்தில் கூடும் நட்சத்திரங்களின் நடுவில்
நிலவென அமர்ந்து
கதைகள் சொல்வாள் அவள்..
வெவ்வேறு வேசம் பூண்டு
கோரக் குணம் கொண்டு
கதைகளில் வரும் தீய சக்தி
அழிக்கப்பட்ட பிறகும்
பயமறுக்க மறுத்து விடும் குழந்தைகள்
அவளுடன் ஒட்டிக் கொள்ளும்..
ஏதேதோ சொல்லிச் சமாளித்து
தூங்க வைத்து பின்பு
கட்டிலில் விழுந்தவளுக்குள்
எழுந்து கொள்ளும்
பாட்டி சொன்ன வீட்டுக் கதைகளின் பய மிச்சங்கள்...
முற்றத்தில் கூடும் நட்சத்திரங்களின் நடுவில்
நிலவென அமர்ந்து
கதைகள் சொல்வாள் அவள்..
வெவ்வேறு வேசம் பூண்டு
கோரக் குணம் கொண்டு
கதைகளில் வரும் தீய சக்தி
அழிக்கப்பட்ட பிறகும்
பயமறுக்க மறுத்து விடும் குழந்தைகள்
அவளுடன் ஒட்டிக் கொள்ளும்..
ஏதேதோ சொல்லிச் சமாளித்து
தூங்க வைத்து பின்பு
கட்டிலில் விழுந்தவளுக்குள்
எழுந்து கொள்ளும்
பாட்டி சொன்ன வீட்டுக் கதைகளின் பய மிச்சங்கள்...