View Full Version : காதலாகி....
inban
27-10-2010, 05:49 PM
கொடுத்த முத்தங்களைத்தானே
கேட்கிறேன் என்கிறேன்
எப்போது கொடுத்தீர்!?
-என்கிறாய் குழப்பத்துடன்
'நேற்றைய இரவில்
நான் கண்ட கனவில்'
சற்று மௌனத்துக்குப் பிற்பாடு
'போ நானும்
கனவிலேயே தந்து விடுகிறேன்'
-எனச் சொல்லி அப்பாலே நகர்கிறாய்.
ஆன்டனி ஜானி
27-10-2010, 06:33 PM
காதலன் என்று நினைது கனவில் மாற்றி முட்தம் கொடுகாதிர்கள் :209:
அமரன்
27-10-2010, 07:18 PM
பொருத்தமோ பொருத்தம்..:)
பென்ஸ்
27-10-2010, 07:24 PM
நேரில் கொடுக்கவில்லை என்ற கோபமாயிருக்கும்...
சிவா.ஜி
27-10-2010, 09:18 PM
கனவில் முத்தம் கொடுத்தக் காதலனுக்கு நிஜத்தில் அவளிடம் இப்படிக்கேட்க உரிமை இருக்கிறதா....நீ யாரென்றே தெரியாது....நான் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்குமுன் போய்விடு இங்கிருந்து எனச் சொல்லவும் வாய்ப்பிருக்கிறதே.....
அமரன்
27-10-2010, 09:21 PM
நேரில் கொடுக்கவில்லை என்ற
கோபமாயிருக்கும்...
அடடே.. இப்படியுமிருக்குமோ!!!:)
கண்மணி
28-10-2010, 04:37 AM
அடடே.. இப்படியுமிருக்குமோ!!!:)
அனுபவமின்மை வெளிப்பட்டு விட்டது!!! :eek::eek::eek:
ஓவியன்
28-10-2010, 04:43 AM
கொடுத்த முத்தங்களைத்தானே
கேட்கிறேன் என்கிறேன்....
அட, இதுக்கு கூடவா கணக்கு பார்பீர்கள் சரியான மெட்ரிக்ஸ் மண்டை போலிருக்கு...!!! :D:D:D
கோச்சுக்காதிங்க இன்பன், எந்திரன் பார்த்த பாதிப்பு அது வேறொண்ணும் இல்லை.
பிரேம்
28-10-2010, 06:45 AM
நீங்களா வாங்கி கொள்வதை விட்டு... கேட்டு kondu இருகீங்களே..
govindh
28-10-2010, 09:23 AM
காதலாகி....
'போ நானும்
கனவிலேயே தந்து விடுகிறேன்'
நல் ஒப்பந்தம்...!
வாழ்த்துக்கள் இன்பன்.
பூங்குழலி
28-10-2010, 09:30 AM
கனவில் கொடுத்ததை கனவில் தான் வாங்கிக் கொள்ள வேண்டும். நன்று.
கொடுத்த முத்தங்களைத்தானே
கேட்கிறேன் என்கிறேன்
எப்போது கொடுத்தீர்!?
-என்கிறாய் குழப்பத்துடன்
'நேற்றைய இரவில்
நான் கண்ட கனவில்'
சற்று மௌனத்துக்குப் பிற்பாடு
'போ நானும்
கனவிலேயே தந்து விடுகிறேன்'
-எனச் சொல்லி அப்பாலே நகர்கிறாய்.
நேரில் கொடுக்கவில்லை என்ற கோபமாயிருக்கும்...
வாவ்.. சபாஷ்
கவிதை & பெஞ்சு அண்ணாவின் இரண்டு வரி விடை!!
இந்த ஊடலை நினைத்தேன் இன்பன்..... முன்பு எப்போதோ நிகழ்ந்தமாதிரி இருக்கிறது!!
அழகான காட்சிகளை முன்னே காண்பிக்கிறீர்கள்!
தொடர்ந்து எழுதுங்கள்!