கீதம்
27-10-2010, 03:25 AM
"அம்மு...நீ பெரியவளானதும் என்னவேலைக்குப் போவே?"
"டீ…….ச்சர் வேலைக்கு!"
"அப்படியாடி? என் செல்லத்துக்கு பாடம் நடத்துறது அவ்வளவு இஷ்டமா?"
"இல்ல பாட்டி, அப்பதானே எல்லாரையும் அடிக்கமுடியும்? எங்க மோகனா டீச்சரப் பாத்தாலே எல்லாரும் நடுங்குவோம். அதுமாதிரி எல்லாரும் என்னப் பாத்து பயப்படணும்"
"எனக்கு இப்பவே பயமா இருக்கே... அம்மு டீச்சர் வராங்க....அம்மு டீச்சர் வராங்க..."
பயந்து நடுங்குவதுபோல் திலகவதி பாவனை செய்ய மகிழ்ச்சியில் துள்ளினாள் சஞ்சிதா.
"பாட்டீ.... நான் அம்மு டீச்சர் இல்ல.... சஞ்சிதா டிச்சர்!"
சொல்லிவிட்டு, தன் பச்சரிசிப் பற்கள் தெரியச் சிரித்தாள்.
"ம்! எல்லாரும் உக்காருங்க. க்ளாஸ் ஆரம்பிச்சிடுச்சி. ஷ்ஷ்...... யாரும் சத்தம்போடக்கூடாது. சத்தம் போட்டீங்க.... ஒரே அடிதான்.”
கையிலிருந்த ஸ்கேலால் தன் குட்டி மேசையைத் தட்டினாள். சஞ்சிதாவின் வகுப்பறை, பொம்மை மாணவர்களால் நிறைந்திருந்தது. மாணவர்களில் ஒருத்தியாக திலகவதியும் அமர்ந்திருந்தாள். தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கைகட்டி வாய்ப்பொத்தியிருந்தாள்.
“சத்தம் போட மாட்டோம் டீச்சர்!"
"சரி, எல்லாரும் சொல்லுங்க. ஏ....”
"ஏ...."
"பீ"..."
"பீ...."
“சீ....”
“சீ...”
"அம்மா.... கீர வேணுமா....?"
வாசலிலிருந்து கீரைக்காரி அழைப்பு விடுக்க.... திலகவதி பேத்தியைக் கெஞ்சினாள்,
"அம்மு... கொஞ்சம் பர்மிஷன் குடுடா.... நான் போய் கீர வாங்கிட்டு வந்து பாடம் படிக்கிறேன்"
"என் பேரு அம்மு கெடையாது. சஞ்சிதா. நான் இப்ப டீச்சர். அதனால.... எக்ஸ்க்யூஸ்மீ டீச்சர்னு கேட்டுட்டு போங்க.....ஸாரி...ஸாரி.....போ....திலகவதி!"
"எக்ஸ்யூஸ்மீ டீச்சர்……தாங்க்யூ டீச்சர்."
திலகவதி விட்டால் போதுமென்று வாசல்நோக்கி ஓடினாள்.
"ஏம்மா..... மருமவ இல்லையா?"
கீரைக்காரி கேட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. வாசுகி வந்தால் கொடுத்ததை வாய்பேசாமல் வாங்கிச்செல்வாள். இந்தம்மாள் என்றால் எல்லாவற்றிலும் சொத்தை சொள்ளை என்று சொல்லி போட்டுப் புரட்டி எடுத்துவிடும். இன்னும் நாலு தெரு போகவேண்டிய கீரை. அதற்குள் கைபட்டு வாடி வதங்கிவிடும்.
"ஏண்டியம்மா.... மருமவ கையாலதான் போணி பண்ணுவீங்களோ?"
"அட... போணியெல்லாம் ஆயிப்போச்சிம்மா... சும்மா கேட்டேன்."
"பாரு, மணி பத்தாவுது! மகாராணி இப்பதான் குளிக்கப்போயிருக்கா. வீடான வீட்டுல ஒரு கட்டுக்கழுத்தி குளிக்கிற நேரத்தப் பாரு.... அந்தக்காலத்தில என்னை நாலு மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு பச்சத்தண்ணியில குளிக்கச் சொல்லுவாங்க என் மாமியாரு. இவ எல்லாம் என் மாமியார்கிட்ட இருந்திருக்கணும், இவ பண்ற கூத்துக்கு நாறடிச்சிடுவாங்க."
‘ம்க்கூம், இங்க மட்டும் என்ன வாழுதாம். மருமக குளிக்கிறத ஊருக்கே தம்பட்டம் போட்டு நாறடிக்கலையாக்கும்... இது என்னமோ யோக்கியம் மாதிரி பேசுது....' முணுமுணுத்துக்கொண்டாள் கீரைக்காரி.
"என்னடி முணுமுணுப்பு?"
"ஒண்ணுமில்லம்மா.... காசு தரியா....கணக்கு வச்சிக்கவா?"
"கணக்கு வச்சிக்கோ.... அடுத்தவாரம் தீத்திடறேன்"
கையில் இரண்டு கட்டு முளைக்கீரையுடன் உள்ளே வந்தவளை சஞ்சிதா பிடித்துக்கொண்டாள்.
"பாட்டீ... வாங்க... வெளையாடலாம்"
"பாட்டி இந்தக் கீரையை ஆஞ்சு வச்சிட்டு வரேன், அதுவரைக்கும் நீ வேற வெளையாட்டு வெளையாடுவியாம். என் செல்லமில்ல....."
"முடியாது... வந்துதான் ஆவணும்..."
"ஏன்டி உனக்கு இன்னைக்கு லீவு வுட்டுத் தொலைச்சாங்க?"
"உங்க கூட வெளையாடதான்." நமட்டுச்சிரிப்புடன் சொன்னவளைப் பார்க்க திலகவதிக்கும் சிரிப்பு வந்தது.
"என் செல்லக்குட்டி பாட்டி சொன்னாக் கேக்குமாம். பாட்டிக்கு இப்ப இன்டெர்வல். கொஞ்சநேரம் கழிச்சி பாட்டி வந்து கிளாஸ்ல உக்காந்துக்குவேன். அதுவரைக்கும் டீச்சர் வேற வேல பாப்பீங்களாம். சரியா?"
"சரி..." ஏமாற்றத்தை முகம் அப்பட்டமாய்க் காட்ட அங்கிருந்து அரைமனதுடன் போனாள்.
"நான் வந்திட்டேன், அத்தே.... நீங்க போங்க.... நான் பாத்துக்கறேன்..."
குளித்துமுடித்து புதுமலரென வந்துநின்ற வாசுகியைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி,
"இந்தப்பொடவ எப்ப எடுத்தது?" என்றாள்.
"போனதடவ அம்மாவீட்டுக்குப் போனப்ப அம்மா எடுத்துக்கொடுத்தாங்கன்னு சொல்லி ரெண்டு பொடவ காட்டினேனே, அத்தே.... ஞாபகம் இல்ல... அதில ஒண்ணு இது!"
"என்னமோ சொல்ற! எதக் கேட்டாலும் அம்மா எடுத்துக்குடுத்தது.... அப்பா எடுத்துக்குடுத்ததுங்கறே... உண்மயிலேயே அதையெல்லாம் அவுங்கதான் எடுத்துக்குடுத்தாங்களாங்குறது அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்."
வாசுகிக்கு உதடு துடித்தது.
‘சரியான அம்மாகோண்டுவைப் பெத்துவச்சிகிட்டு சந்தேகத்தப்பாரேன். இதுவரைக்கும் எனக்கு அவரா ஒரு புடவ எடுத்துக்கொடுத்திருக்காரா? தீபாவளி பொங்கல்னா கூட இவங்கதான் செலக்ட் பண்ணுவாங்க. இந்த லட்சணத்தில பிள்ளை ரகசியமா எடுத்துக்கொடுத்திருப்பானோன்னு சந்தேகம் வேற... நல்ல ஆளுதான்’
மனதுக்குள் குமைந்தபடியே சமையலைப் பார்க்கப்போனாள்.
***********************************
"என்னடி ரசம் இது? உப்புசப்பு இல்லாம இருக்கு"
"நல்லாதான அத்தே இருக்கு? பாப்பாவுக்கு பிசையும்போது ஒருவாய் போட்டுப்பாத்தேனே! சரியாதானே இருந்துது?"
"நல்லா வாயாடு. எட்டு வருஷம் ஆயிப்போச்சு, இன்னும் ஒரு ரசம் வக்கத் துப்பில்ல. என்னத்ததான் உங்கம்மா உனக்கு கத்துக்குடுத்தாங்களோ....."
வாசுகி எதுவும் சொல்லாமல் மெளனமாய் நின்றாள். என்ன சொல்வது? அவர்கள் வாய்க்கு நன்றாக இல்லைபோலிருக்கிறது. அதற்கு தான் என்ன பண்ணமுடியும்?
மருமகளின் மெளனம் தன்னை அலட்சியப்படுத்துவதுபோல் தோன்ற, திலகவதிக்கு கோபம் இன்னும் ஏறியது.
"ஊமக்கோட்டன் மாதிரி நில்லு. வாயத்தொறந்து பதில் பேசுடி"
"என்னை என்ன சொல்லச் சொல்றீங்க? பதில் சொன்னா வாயாடுறேன்னு சொல்றீங்க. பதில் சொல்லாம இருந்தா திமிரா இருக்கேங்கறீங்க. எதைச் செய்தாலும் குத்தம்னா நான் என்னதான் பண்ண?" கழிவிரக்கத்தால் கண்களில் சட்டென்று குளம் கட்டியது.
"அம்மா தாயே...இப்ப உன்ன என்ன பண்ணிட்டேன்? இப்படி ஆர்ப்பாட்டம் பண்றே? நீயெல்லாம் என் மாமியார்கிட்ட இருக்கணும். புள்ளத்தாச்சியா இருக்கும்போது ஒரு தடவ வத்தக்கொழம்பு வச்சேன். புளி கொஞ்சம் கூடுதலாப் போட்டுட்டேன் போல. என் மாமியாருக்கு வந்துச்சே கோவம். ஏண்டி உனக்கு மசக்கையா... வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் மசக்கையா? புளிப்பு வாயில வக்கமுடியலன்னு சொல்லி அப்படியே சட்டியோட கீழ கவுத்தாங்கபாரு... என்னால் ஜென்மத்துக்கும் மறக்கமுடியாது. அன்னைக்கெல்லாம் எப்படி கதறிக் கதறி அழுதேன் தெரியுமா? உன்னையெல்லாம் அப்படியாடி படுத்தறேன்? ஒரு ரசம் வக்கத் தெரியலையேன்னு கேட்டா கண்ணீர் வடிச்சி மாய்மாலம் பண்றே?"
"பாட்டீ, ஏன் பாட்டி அம்மாவ அழவக்கிறீங்க?" இடுப்பில் கைவைத்தபடி பெரியமனுஷிபோல் கேள்வி கேட்கும் சஞ்சிதாவைப் பார்க்கப் பற்றிக்கொண்டு வந்தது.
"ஆமாம்டி, ஆமாம், உங்கம்மாவ நான் தான் அழவுடுறேன். முணுக்குன்னா கண்ணால கொட்டுறா. யாராச்சும் பாத்தாங்கன்னா நான் தான் இவள படாதபாடு படுத்தறேன்னு நினைப்பாங்க. நீ ஒருத்தி சாட்சி போதும். வர சனிக்கெழமை உங்கப்பன் வருவான், அவன்கிட்டயும் சொல்லு... பாட்டி படு பாதகி, ராட்சசி, அம்மாவப் போட்டு படுத்தறான்னு. அவனும் என்ன வீட்ட விட்டு தொரத்திடுவான். நீங்க எல்லாரும் சந்தோஷமா இருங்க."
"இப்ப எதுக்கு குழந்தைகிட்ட இந்தப்பேச்செல்லாம் பேசுறீங்க? அப்படியே நானோ குழந்தையோ உங்களைப்பத்தி எதுவும் சொன்னாலும் உங்க பிள்ள என்னைதான் திட்டுவாரு, அம்மாகிட்ட ஒழுங்கா நடந்துக்க தெரியலைன்னு. அவர் வரதே வாரத்தில் ரெண்டுநாள். அதிலயும் பிரச்சனை அது இதுன்னா இந்தப்பக்கமே வரமாட்டார்."
"புரிஞ்சி நடந்தா சரி."
"பாட்டி...வாங்க...டீச்சர் விளையாட்டு விளையாடலாம்."
"கெடக்கிறது கெடக்கட்டும், கெழவனத் தூக்கி மனயில வையிங்கறமாதிரி இவ ஒருத்தி....! போடி...போய் சொப்புவச்சி வெளயாடு. அப்புறமா டீச்சர் வெளயாட்டு வெளயாடலாம்."
"போங்க பாட்டி... நீங்க நல்லா பொய் சொல்லுறீங்க... இனிமே உங்க கூட வெளயாடவே மாட்டேன்."
************************************
மறுநாள் மாலை அழுதுவீங்கிய கண்களுடன் வேனை விட்டிறங்கிய சஞ்சிதாவைப் பார்த்து அதிர்ந்துபோயினர் திலகவதியும், வாசுகியும்.
"என்னம்மா....என்னாச்சு?" பதறினாள் திலகவதி.
"பாட்டீ..... நான் பேசவே இல்ல பாட்டி, மத்தவங்க பேசினதுக்கு எனக்கும் சேத்து அடி கொடுத்திட்டாங்க, மோகனா டீச்சர்."
"நான் பேசலைன்னு நீ சொல்லவேண்டியதுதானடா..."
"அதச் சொன்னதுக்குதான் இன்னும் ஒரு அடி கூட போட்டாங்க..."
சிவந்த ரோஜாவின் இதழ்வடியும் பனிநீரைப்போல் சஞ்சிதாவின் கன்னத்தில் நீர் முத்துகள் உருண்டு சிதறின.
"ஏ....வாசுகி, என்ன சும்மா பாத்துகிட்டு நிக்கிற... ஸ்கூல் ஹெச். எம்முக்கு போனப் போடு.... அந்த ராட்சசிய உண்டு இல்லன்னு பண்ணிடறேன்"
"வேண்டாம் அத்தே... போன்ல பேசினா பிரச்சனையாயிடும். நாளைக்கு நானே நேரில் போய்ப் பாத்துப் பேசுறேன். எந்த இடத்திலடா அடிச்சாங்க?"
சஞ்சிதா சாக்ஸை அவிழ்த்துக் காண்பிக்க, கெண்டைக்காலில் சிவந்து தடித்த வரிகள் மோகனா டீச்சரின் ஆக்ரோஷத்தை பறைசாற்றின.
வாசுகி மருந்திட்டாள். திலகவதி ஆத்திரம் அடங்காதவளாக, அந்த மோகனாங்கியோட கையை முறிச்சி அடுப்பில வக்க... அவ வீட்டில இடிவிழ... என்று சரமாரியாக சபித்துக்கொண்டிருந்தாள்.
"பாட்டீ..... நான்…… டீச்சராயீ....." முடிக்குமுன் திலகவதி இடைமறித்துச் சொன்னாள்.
"நீ டீச்சராயீ…….. எல்லாரையும் நீயும் நல்லா அடிக்கலாம், கவலப்படாதடா கண்ணு..."
"இல்ல பாட்டீ.... நான் டீச்சராயி யாரையும் அடிக்கமாட்டேன் பாட்டி. எனக்கு ஒருத்தங்க கஷ்டம் குடுத்தாங்கன்னா அதே கஷ்டத்த நானும் மத்தவங்களுக்கு குடுக்கலாமா? அது தப்புதானே பாட்டீ? நான் கட்டாயம் டீச்சராவேன், ஆனா எங்க மோகனா டீச்சர் மாதிரியில்ல, பக்கத்து கிளாஸ் கிரிஜா டீச்சர் மாதிரி. யாருமே அவங்களப் பாத்து பயப்படமாட்டாங்க. எல்லாருக்கும் அவங்கள ரொம்பப்பிடிக்கும். எங்க டீச்சர் பண்ணின தப்ப நான் என் ஸ்டூடன்ஸுக்கு பண்ணவே மாட்டேன். நான் சொல்றது சரிதானே பாட்டி?"
பதில் சொல்லமுடியாமல் திணறிய மாமியாரைப் பரிதாபமாகவும், பாட்டியிடமிருந்து பதில் வராது எனத்தெரியாமல் ஆர்வத்துடன் காத்திருக்கும் தன் சின்னஞ்சிறு மகளைப் பெருமையாகவும் பார்த்துப் புன்னகைத்தாள் வாசுகி.
"டீ…….ச்சர் வேலைக்கு!"
"அப்படியாடி? என் செல்லத்துக்கு பாடம் நடத்துறது அவ்வளவு இஷ்டமா?"
"இல்ல பாட்டி, அப்பதானே எல்லாரையும் அடிக்கமுடியும்? எங்க மோகனா டீச்சரப் பாத்தாலே எல்லாரும் நடுங்குவோம். அதுமாதிரி எல்லாரும் என்னப் பாத்து பயப்படணும்"
"எனக்கு இப்பவே பயமா இருக்கே... அம்மு டீச்சர் வராங்க....அம்மு டீச்சர் வராங்க..."
பயந்து நடுங்குவதுபோல் திலகவதி பாவனை செய்ய மகிழ்ச்சியில் துள்ளினாள் சஞ்சிதா.
"பாட்டீ.... நான் அம்மு டீச்சர் இல்ல.... சஞ்சிதா டிச்சர்!"
சொல்லிவிட்டு, தன் பச்சரிசிப் பற்கள் தெரியச் சிரித்தாள்.
"ம்! எல்லாரும் உக்காருங்க. க்ளாஸ் ஆரம்பிச்சிடுச்சி. ஷ்ஷ்...... யாரும் சத்தம்போடக்கூடாது. சத்தம் போட்டீங்க.... ஒரே அடிதான்.”
கையிலிருந்த ஸ்கேலால் தன் குட்டி மேசையைத் தட்டினாள். சஞ்சிதாவின் வகுப்பறை, பொம்மை மாணவர்களால் நிறைந்திருந்தது. மாணவர்களில் ஒருத்தியாக திலகவதியும் அமர்ந்திருந்தாள். தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கைகட்டி வாய்ப்பொத்தியிருந்தாள்.
“சத்தம் போட மாட்டோம் டீச்சர்!"
"சரி, எல்லாரும் சொல்லுங்க. ஏ....”
"ஏ...."
"பீ"..."
"பீ...."
“சீ....”
“சீ...”
"அம்மா.... கீர வேணுமா....?"
வாசலிலிருந்து கீரைக்காரி அழைப்பு விடுக்க.... திலகவதி பேத்தியைக் கெஞ்சினாள்,
"அம்மு... கொஞ்சம் பர்மிஷன் குடுடா.... நான் போய் கீர வாங்கிட்டு வந்து பாடம் படிக்கிறேன்"
"என் பேரு அம்மு கெடையாது. சஞ்சிதா. நான் இப்ப டீச்சர். அதனால.... எக்ஸ்க்யூஸ்மீ டீச்சர்னு கேட்டுட்டு போங்க.....ஸாரி...ஸாரி.....போ....திலகவதி!"
"எக்ஸ்யூஸ்மீ டீச்சர்……தாங்க்யூ டீச்சர்."
திலகவதி விட்டால் போதுமென்று வாசல்நோக்கி ஓடினாள்.
"ஏம்மா..... மருமவ இல்லையா?"
கீரைக்காரி கேட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. வாசுகி வந்தால் கொடுத்ததை வாய்பேசாமல் வாங்கிச்செல்வாள். இந்தம்மாள் என்றால் எல்லாவற்றிலும் சொத்தை சொள்ளை என்று சொல்லி போட்டுப் புரட்டி எடுத்துவிடும். இன்னும் நாலு தெரு போகவேண்டிய கீரை. அதற்குள் கைபட்டு வாடி வதங்கிவிடும்.
"ஏண்டியம்மா.... மருமவ கையாலதான் போணி பண்ணுவீங்களோ?"
"அட... போணியெல்லாம் ஆயிப்போச்சிம்மா... சும்மா கேட்டேன்."
"பாரு, மணி பத்தாவுது! மகாராணி இப்பதான் குளிக்கப்போயிருக்கா. வீடான வீட்டுல ஒரு கட்டுக்கழுத்தி குளிக்கிற நேரத்தப் பாரு.... அந்தக்காலத்தில என்னை நாலு மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு பச்சத்தண்ணியில குளிக்கச் சொல்லுவாங்க என் மாமியாரு. இவ எல்லாம் என் மாமியார்கிட்ட இருந்திருக்கணும், இவ பண்ற கூத்துக்கு நாறடிச்சிடுவாங்க."
‘ம்க்கூம், இங்க மட்டும் என்ன வாழுதாம். மருமக குளிக்கிறத ஊருக்கே தம்பட்டம் போட்டு நாறடிக்கலையாக்கும்... இது என்னமோ யோக்கியம் மாதிரி பேசுது....' முணுமுணுத்துக்கொண்டாள் கீரைக்காரி.
"என்னடி முணுமுணுப்பு?"
"ஒண்ணுமில்லம்மா.... காசு தரியா....கணக்கு வச்சிக்கவா?"
"கணக்கு வச்சிக்கோ.... அடுத்தவாரம் தீத்திடறேன்"
கையில் இரண்டு கட்டு முளைக்கீரையுடன் உள்ளே வந்தவளை சஞ்சிதா பிடித்துக்கொண்டாள்.
"பாட்டீ... வாங்க... வெளையாடலாம்"
"பாட்டி இந்தக் கீரையை ஆஞ்சு வச்சிட்டு வரேன், அதுவரைக்கும் நீ வேற வெளையாட்டு வெளையாடுவியாம். என் செல்லமில்ல....."
"முடியாது... வந்துதான் ஆவணும்..."
"ஏன்டி உனக்கு இன்னைக்கு லீவு வுட்டுத் தொலைச்சாங்க?"
"உங்க கூட வெளையாடதான்." நமட்டுச்சிரிப்புடன் சொன்னவளைப் பார்க்க திலகவதிக்கும் சிரிப்பு வந்தது.
"என் செல்லக்குட்டி பாட்டி சொன்னாக் கேக்குமாம். பாட்டிக்கு இப்ப இன்டெர்வல். கொஞ்சநேரம் கழிச்சி பாட்டி வந்து கிளாஸ்ல உக்காந்துக்குவேன். அதுவரைக்கும் டீச்சர் வேற வேல பாப்பீங்களாம். சரியா?"
"சரி..." ஏமாற்றத்தை முகம் அப்பட்டமாய்க் காட்ட அங்கிருந்து அரைமனதுடன் போனாள்.
"நான் வந்திட்டேன், அத்தே.... நீங்க போங்க.... நான் பாத்துக்கறேன்..."
குளித்துமுடித்து புதுமலரென வந்துநின்ற வாசுகியைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி,
"இந்தப்பொடவ எப்ப எடுத்தது?" என்றாள்.
"போனதடவ அம்மாவீட்டுக்குப் போனப்ப அம்மா எடுத்துக்கொடுத்தாங்கன்னு சொல்லி ரெண்டு பொடவ காட்டினேனே, அத்தே.... ஞாபகம் இல்ல... அதில ஒண்ணு இது!"
"என்னமோ சொல்ற! எதக் கேட்டாலும் அம்மா எடுத்துக்குடுத்தது.... அப்பா எடுத்துக்குடுத்ததுங்கறே... உண்மயிலேயே அதையெல்லாம் அவுங்கதான் எடுத்துக்குடுத்தாங்களாங்குறது அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்."
வாசுகிக்கு உதடு துடித்தது.
‘சரியான அம்மாகோண்டுவைப் பெத்துவச்சிகிட்டு சந்தேகத்தப்பாரேன். இதுவரைக்கும் எனக்கு அவரா ஒரு புடவ எடுத்துக்கொடுத்திருக்காரா? தீபாவளி பொங்கல்னா கூட இவங்கதான் செலக்ட் பண்ணுவாங்க. இந்த லட்சணத்தில பிள்ளை ரகசியமா எடுத்துக்கொடுத்திருப்பானோன்னு சந்தேகம் வேற... நல்ல ஆளுதான்’
மனதுக்குள் குமைந்தபடியே சமையலைப் பார்க்கப்போனாள்.
***********************************
"என்னடி ரசம் இது? உப்புசப்பு இல்லாம இருக்கு"
"நல்லாதான அத்தே இருக்கு? பாப்பாவுக்கு பிசையும்போது ஒருவாய் போட்டுப்பாத்தேனே! சரியாதானே இருந்துது?"
"நல்லா வாயாடு. எட்டு வருஷம் ஆயிப்போச்சு, இன்னும் ஒரு ரசம் வக்கத் துப்பில்ல. என்னத்ததான் உங்கம்மா உனக்கு கத்துக்குடுத்தாங்களோ....."
வாசுகி எதுவும் சொல்லாமல் மெளனமாய் நின்றாள். என்ன சொல்வது? அவர்கள் வாய்க்கு நன்றாக இல்லைபோலிருக்கிறது. அதற்கு தான் என்ன பண்ணமுடியும்?
மருமகளின் மெளனம் தன்னை அலட்சியப்படுத்துவதுபோல் தோன்ற, திலகவதிக்கு கோபம் இன்னும் ஏறியது.
"ஊமக்கோட்டன் மாதிரி நில்லு. வாயத்தொறந்து பதில் பேசுடி"
"என்னை என்ன சொல்லச் சொல்றீங்க? பதில் சொன்னா வாயாடுறேன்னு சொல்றீங்க. பதில் சொல்லாம இருந்தா திமிரா இருக்கேங்கறீங்க. எதைச் செய்தாலும் குத்தம்னா நான் என்னதான் பண்ண?" கழிவிரக்கத்தால் கண்களில் சட்டென்று குளம் கட்டியது.
"அம்மா தாயே...இப்ப உன்ன என்ன பண்ணிட்டேன்? இப்படி ஆர்ப்பாட்டம் பண்றே? நீயெல்லாம் என் மாமியார்கிட்ட இருக்கணும். புள்ளத்தாச்சியா இருக்கும்போது ஒரு தடவ வத்தக்கொழம்பு வச்சேன். புளி கொஞ்சம் கூடுதலாப் போட்டுட்டேன் போல. என் மாமியாருக்கு வந்துச்சே கோவம். ஏண்டி உனக்கு மசக்கையா... வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் மசக்கையா? புளிப்பு வாயில வக்கமுடியலன்னு சொல்லி அப்படியே சட்டியோட கீழ கவுத்தாங்கபாரு... என்னால் ஜென்மத்துக்கும் மறக்கமுடியாது. அன்னைக்கெல்லாம் எப்படி கதறிக் கதறி அழுதேன் தெரியுமா? உன்னையெல்லாம் அப்படியாடி படுத்தறேன்? ஒரு ரசம் வக்கத் தெரியலையேன்னு கேட்டா கண்ணீர் வடிச்சி மாய்மாலம் பண்றே?"
"பாட்டீ, ஏன் பாட்டி அம்மாவ அழவக்கிறீங்க?" இடுப்பில் கைவைத்தபடி பெரியமனுஷிபோல் கேள்வி கேட்கும் சஞ்சிதாவைப் பார்க்கப் பற்றிக்கொண்டு வந்தது.
"ஆமாம்டி, ஆமாம், உங்கம்மாவ நான் தான் அழவுடுறேன். முணுக்குன்னா கண்ணால கொட்டுறா. யாராச்சும் பாத்தாங்கன்னா நான் தான் இவள படாதபாடு படுத்தறேன்னு நினைப்பாங்க. நீ ஒருத்தி சாட்சி போதும். வர சனிக்கெழமை உங்கப்பன் வருவான், அவன்கிட்டயும் சொல்லு... பாட்டி படு பாதகி, ராட்சசி, அம்மாவப் போட்டு படுத்தறான்னு. அவனும் என்ன வீட்ட விட்டு தொரத்திடுவான். நீங்க எல்லாரும் சந்தோஷமா இருங்க."
"இப்ப எதுக்கு குழந்தைகிட்ட இந்தப்பேச்செல்லாம் பேசுறீங்க? அப்படியே நானோ குழந்தையோ உங்களைப்பத்தி எதுவும் சொன்னாலும் உங்க பிள்ள என்னைதான் திட்டுவாரு, அம்மாகிட்ட ஒழுங்கா நடந்துக்க தெரியலைன்னு. அவர் வரதே வாரத்தில் ரெண்டுநாள். அதிலயும் பிரச்சனை அது இதுன்னா இந்தப்பக்கமே வரமாட்டார்."
"புரிஞ்சி நடந்தா சரி."
"பாட்டி...வாங்க...டீச்சர் விளையாட்டு விளையாடலாம்."
"கெடக்கிறது கெடக்கட்டும், கெழவனத் தூக்கி மனயில வையிங்கறமாதிரி இவ ஒருத்தி....! போடி...போய் சொப்புவச்சி வெளயாடு. அப்புறமா டீச்சர் வெளயாட்டு வெளயாடலாம்."
"போங்க பாட்டி... நீங்க நல்லா பொய் சொல்லுறீங்க... இனிமே உங்க கூட வெளயாடவே மாட்டேன்."
************************************
மறுநாள் மாலை அழுதுவீங்கிய கண்களுடன் வேனை விட்டிறங்கிய சஞ்சிதாவைப் பார்த்து அதிர்ந்துபோயினர் திலகவதியும், வாசுகியும்.
"என்னம்மா....என்னாச்சு?" பதறினாள் திலகவதி.
"பாட்டீ..... நான் பேசவே இல்ல பாட்டி, மத்தவங்க பேசினதுக்கு எனக்கும் சேத்து அடி கொடுத்திட்டாங்க, மோகனா டீச்சர்."
"நான் பேசலைன்னு நீ சொல்லவேண்டியதுதானடா..."
"அதச் சொன்னதுக்குதான் இன்னும் ஒரு அடி கூட போட்டாங்க..."
சிவந்த ரோஜாவின் இதழ்வடியும் பனிநீரைப்போல் சஞ்சிதாவின் கன்னத்தில் நீர் முத்துகள் உருண்டு சிதறின.
"ஏ....வாசுகி, என்ன சும்மா பாத்துகிட்டு நிக்கிற... ஸ்கூல் ஹெச். எம்முக்கு போனப் போடு.... அந்த ராட்சசிய உண்டு இல்லன்னு பண்ணிடறேன்"
"வேண்டாம் அத்தே... போன்ல பேசினா பிரச்சனையாயிடும். நாளைக்கு நானே நேரில் போய்ப் பாத்துப் பேசுறேன். எந்த இடத்திலடா அடிச்சாங்க?"
சஞ்சிதா சாக்ஸை அவிழ்த்துக் காண்பிக்க, கெண்டைக்காலில் சிவந்து தடித்த வரிகள் மோகனா டீச்சரின் ஆக்ரோஷத்தை பறைசாற்றின.
வாசுகி மருந்திட்டாள். திலகவதி ஆத்திரம் அடங்காதவளாக, அந்த மோகனாங்கியோட கையை முறிச்சி அடுப்பில வக்க... அவ வீட்டில இடிவிழ... என்று சரமாரியாக சபித்துக்கொண்டிருந்தாள்.
"பாட்டீ..... நான்…… டீச்சராயீ....." முடிக்குமுன் திலகவதி இடைமறித்துச் சொன்னாள்.
"நீ டீச்சராயீ…….. எல்லாரையும் நீயும் நல்லா அடிக்கலாம், கவலப்படாதடா கண்ணு..."
"இல்ல பாட்டீ.... நான் டீச்சராயி யாரையும் அடிக்கமாட்டேன் பாட்டி. எனக்கு ஒருத்தங்க கஷ்டம் குடுத்தாங்கன்னா அதே கஷ்டத்த நானும் மத்தவங்களுக்கு குடுக்கலாமா? அது தப்புதானே பாட்டீ? நான் கட்டாயம் டீச்சராவேன், ஆனா எங்க மோகனா டீச்சர் மாதிரியில்ல, பக்கத்து கிளாஸ் கிரிஜா டீச்சர் மாதிரி. யாருமே அவங்களப் பாத்து பயப்படமாட்டாங்க. எல்லாருக்கும் அவங்கள ரொம்பப்பிடிக்கும். எங்க டீச்சர் பண்ணின தப்ப நான் என் ஸ்டூடன்ஸுக்கு பண்ணவே மாட்டேன். நான் சொல்றது சரிதானே பாட்டி?"
பதில் சொல்லமுடியாமல் திணறிய மாமியாரைப் பரிதாபமாகவும், பாட்டியிடமிருந்து பதில் வராது எனத்தெரியாமல் ஆர்வத்துடன் காத்திருக்கும் தன் சின்னஞ்சிறு மகளைப் பெருமையாகவும் பார்த்துப் புன்னகைத்தாள் வாசுகி.