PDA

View Full Version : நப்பாசை



inban
26-10-2010, 04:20 PM
நேற்றைய இரவில்
நான் கண்ட கனவில்
பூக்கள் யாவும் ஒன்றுகூடி
ஒரு தீர்மானம் நிறைவேற்றின.
''விதவைகளும்
நமைச் சுடும் வரை
இனி யாரும்
மலரக் கூடாதென''

சிவா.ஜி
26-10-2010, 04:48 PM
நல்ல கற்பனை...வரவேற்கப்படவேண்டிய தீர்மானம். வாழ்த்துக்கள் இன்பன்.


(சுடும் வரையா....சூடும்வரையா?)

அமரன்
26-10-2010, 06:37 PM
இரவில்தான் வர முடிகிறது
கனவுகளால்..!!!!

கனவு மெய்ப்படட்டும்.

பென்ஸ்
27-10-2010, 01:24 AM
"நப்பாசை" என்று சொல்லுவது சரிபடவில்லையோ என்று தோன்றுகிறது...
விதவையாகினும் ஒன்றொ இரண்டோ பேர் பூவும் பொட்டுமாக வருவதை பார்க்கிறேன்...
காலம் மாறுகிறது...

M.Jagadeesan
27-10-2010, 01:46 AM
"நப்பாசை" என்று சொல்லுவது சரிபடவில்லையோ என்று தோன்றுகிறது...
விதவையாகினும் ஒன்றொ இரண்டோ பேர் பூவும் பொட்டுமாக வருவதை பார்க்கிறேன்...
காலம் மாறுகிறது...

அதில் தவறேதும் இல்லை.பூவும் பொட்டும் பெண்களின் உடன் பிறந்தது.. தாலி மட்டும் அணியாமல் இருந்தால் போதுமானது.

கண்மணி
27-10-2010, 04:05 AM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=363986&postcount=299

ஒருவேளை இந்தக் கவிதையின் காரணமாத்தான் மாநாடு போட்டுச்சோ பூக்கள்?

கற்றை குழலினும்
கருப்பாய் வாழ்வு
நெற்றி பொட்டை
நீங்கிய கைம்பெண்டீர்
குழலை தழுவாததால்
குப்பைதான் இவைகள்..
-----------------------------------ஆதன்!!!