Nanban
17-11-2003, 01:50 PM
காத்திருத்தல்.........
சுவராஸ்யமானது - காத்திருத்தல்.
சுகமானதும் கூட.
சமயத்தில்
பிரசவிப்பதைப் போன்ற
வேதனையையும் தரக்கூடும்.
வாழ்வை
சுவராஸ்யமாக்குவது கூட
காத்திருத்தல் தான்........
எனது முதல் காத்திருத்தலை
நான் இன்னமும் மறக்கவில்லை....
காக்கிப் புறாவின்
சைக்கிள் மணி ஒலிக்கு
காத்திருந்த தவத்தை.......
காத்திருத்தல் ஒரு தவம்.
காத்திருத்தல் ஒரு முயற்சி.
புதிய புதிய தவங்கள்
புதிய புதிய முயற்சிகள்
இன்றும் உண்டு.
புதிய புதிய உலகங்களில்
ஓடி ஜெயிக்க
புதிய முயற்சிகள்
காத்திருக்கின்றன.
நீண்டு கொண்டே போகும்
எனது காத்திருத்தல்கள்......
'ஏதோ வண்டி ஓடுது '
காத்திருத்தலைப் புரியாத
சோம்பேறிகளின் வாழ்க்கை
அசுவராஸ்யமாய்
தூங்கிக் கொண்டிருக்கையில்,
வண்டி ஓடுவதாக
அவர்களது கணக்கு...
காத்திருந்து போராடிய
ஒன்று கிடைத்ததும் -
காத்திருத்தலை மறந்து
வெற்றிடத்தில் வீழ்ந்தால்,
மெளனங்கள் கூட
இரைச்சலாகிப் போகும் -
ஓய்வு கூட
சோம்பல் நோயாகிப் போகும்.
காத்திருங்கள் -
இரைக்காகக் காத்திருக்கும்
மிருகமாய் காத்திருங்கள்.
வனவிலங்கு அறியும்,
பசியின் காத்திருத்தலில் தோற்றால்
நிச்சய மரணம் தானென்று.
நானும் காத்திருக்கிறேன் -
ஜெயிப்பதற்கு
எதுவுமே இல்லையென்றால்,
அட,
குறைந்த பட்சம்
ஒரு நல்ல மரணத்திற்காவது....
என் வண்டி
சுவராஸ்யமாகத் தான்
ஓடிக் கொண்டிருக்கிறது........
சுவராஸ்யமானது - காத்திருத்தல்.
சுகமானதும் கூட.
சமயத்தில்
பிரசவிப்பதைப் போன்ற
வேதனையையும் தரக்கூடும்.
வாழ்வை
சுவராஸ்யமாக்குவது கூட
காத்திருத்தல் தான்........
எனது முதல் காத்திருத்தலை
நான் இன்னமும் மறக்கவில்லை....
காக்கிப் புறாவின்
சைக்கிள் மணி ஒலிக்கு
காத்திருந்த தவத்தை.......
காத்திருத்தல் ஒரு தவம்.
காத்திருத்தல் ஒரு முயற்சி.
புதிய புதிய தவங்கள்
புதிய புதிய முயற்சிகள்
இன்றும் உண்டு.
புதிய புதிய உலகங்களில்
ஓடி ஜெயிக்க
புதிய முயற்சிகள்
காத்திருக்கின்றன.
நீண்டு கொண்டே போகும்
எனது காத்திருத்தல்கள்......
'ஏதோ வண்டி ஓடுது '
காத்திருத்தலைப் புரியாத
சோம்பேறிகளின் வாழ்க்கை
அசுவராஸ்யமாய்
தூங்கிக் கொண்டிருக்கையில்,
வண்டி ஓடுவதாக
அவர்களது கணக்கு...
காத்திருந்து போராடிய
ஒன்று கிடைத்ததும் -
காத்திருத்தலை மறந்து
வெற்றிடத்தில் வீழ்ந்தால்,
மெளனங்கள் கூட
இரைச்சலாகிப் போகும் -
ஓய்வு கூட
சோம்பல் நோயாகிப் போகும்.
காத்திருங்கள் -
இரைக்காகக் காத்திருக்கும்
மிருகமாய் காத்திருங்கள்.
வனவிலங்கு அறியும்,
பசியின் காத்திருத்தலில் தோற்றால்
நிச்சய மரணம் தானென்று.
நானும் காத்திருக்கிறேன் -
ஜெயிப்பதற்கு
எதுவுமே இல்லையென்றால்,
அட,
குறைந்த பட்சம்
ஒரு நல்ல மரணத்திற்காவது....
என் வண்டி
சுவராஸ்யமாகத் தான்
ஓடிக் கொண்டிருக்கிறது........