PDA

View Full Version : ச்சும்மா!!!!!!



அகத்தியன்
25-10-2010, 02:46 PM
கதவில்லா இடங்களில்
அதிஸ்டம்
எதைத் தட்டும்??

M.Jagadeesan
25-10-2010, 03:14 PM
கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்.

பென்ஸ்
25-10-2010, 03:29 PM
கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்.

நினைத்தேன் சொல்லிட்டிங்க...:D:D

பாரதி
25-10-2010, 03:38 PM
நண்பரே,
அபுதாபியில் உள்ள என் நண்பர் ஒருவரின் பெயர் அதிர்ஷ்டம். அவருடைய முழுப்பெயரும் அதுதான். அவர் இந்த திரியை படிச்சா....:lachen001:

அகத்தியன்
25-10-2010, 04:51 PM
நண்பரே,
அபுதாபியில் உள்ள என் நண்பர் ஒருவரின் பெயர் அதிர்ஷ்டம். அவருடைய முழுப்பெயரும் அதுதான். அவர் இந்த திரியை படிச்சா....:lachen001:

அப்படியா!!!!!!!!! நீங்களும் அபுதாபியிலா இருக்கின்றீர்கள் பாரதி?

அமரன்
25-10-2010, 07:59 PM
வறுத்தெடுக்கும் வறுமையை வடித்தமை அருமை அகத்தியன்..

கீதம்
25-10-2010, 10:07 PM
கதவில்லா இடங்களில்
அதிஸ்டம்
எதைத் தட்டும்??

உள்ளேநுழைந்து,
உறங்குபவனின்
தோளைத்தட்டும்.

கவி கற்பனை நன்று. பாராட்டுகள் அகத்தியன் அவர்களே.

சிவா.ஜி
25-10-2010, 10:20 PM
கதவில்லா இடம்ன்னா....ஃப்ளாட்பாரம்தான்.....ஆனா அதையே தங்களோட அதிர்ஷ்டமா நினைக்கிறவங்கதானே லட்ச லட்சமா சேக்கறாங்க.

உண்மையிலேயே....உளுத்துப்போன கதவுகளுக்குப் பின்னால் தன் தொலையத்தயாரான மானத்தைக் காக்கப் போராடும் கீழ்நடுத்தரக் குடும்பங்கள்தான் பாவமானவை.

அகத்தியன்
26-10-2010, 05:02 AM
கதவில்லா இடம்ன்னா....ஃப்ளாட்பாரம்தான்.....ஆனா அதையே தங்களோட அதிர்ஷ்டமா நினைக்கிறவங்கதானே லட்ச லட்சமா சேக்கறாங்க.

உண்மையிலேயே....உளுத்துப்போன கதவுகளுக்குப் பின்னால் தன் தொலையத்தயாரான மானத்தைக் காக்கப் போராடும் கீழ்நடுத்தரக் குடும்பங்கள்தான் பாவமானவை.

அருமையான வரிகள் சிவா .. நிதர்சனமும் அதுதானே!

அகத்தியன்
26-10-2010, 05:04 AM
உள்ளேநுழைந்து,
உறங்குபவனின்
தோளைத்தட்டும்.

கவி கற்பனை நன்று. பாராட்டுகள் அகத்தியன் அவர்களே.

அருமை கீதம்.. இன்னும் கொஞ்சம் நீட்டினால் அருமையான கவி ஒன்று பிறக்கும் போல் உள்ளதே!!!

அமரா இன்னும் ஏதாவது............

govindh
26-10-2010, 08:35 AM
கற்பனை நன்று...
பாராட்டுக்கள்.

பிரேம்
26-10-2010, 09:11 AM
தன்னை
நம்பி இருப்பவனின் தலையை தட்டும்..
கதவு வைக்கச்சொல்லி..

நல்ல இருக்கு தல...இன்னும் எதிர்பார்கிறோம்..!!

அகத்தியன்
26-10-2010, 12:12 PM
நன்றி கோவிந்த்... ப்ரேமின் வரிகள் அருமை... உங்களிடமிருந்து இன்னும் எதிர்ப்பார்க்கலாம் தல ;);)

Ravee
26-10-2010, 12:53 PM
கதவில்லா இடங்களில்
அதிஸ்டம்
எதைத் தட்டும்??

வலியவனின் கைகளை கொண்டு
வறியவனின் வயிற்றில் தட்டும் :icon_p:

ஓவியன்
26-10-2010, 01:19 PM
கதவில்லா இடங்களில்
அதிஸ்டம்
எதைத் தட்டும்??

வேறென்ன ஜன்னலைத்தான்.........!! :D:D:D