View Full Version : சுயவிமர்சனம்
inban
25-10-2010, 02:32 PM
மறுமணம் குறித்து
மாநாடு நடக்கிறது
வீட்டில்.
தாலி தரித்த பாரத்தோடு
அரசமரம் சுற்றுகிறாய் நீ
புகையின் கொடுநாக்கில்
வெந்துபோன
உயிரணுக்களோடு நான்.
பென்ஸ்
25-10-2010, 03:40 PM
சுடும் கவிதை...
அவன் வாயில் இன்னும் சிகிரெட் இருக்கிறதா என்ன...??
வீட்டார் வாயும் இவள் மனதும் படபடக்காமல் இருக்க வைக்கலாமே...
முதுகெலும்புமா இல்லை...???
அமரன்
25-10-2010, 08:44 PM
உண்மைதான்..அவன்
ஆண்மை இல்லாதவன்தான்..
சிவா.ஜி
25-10-2010, 09:21 PM
கணவனா......வீணனா.....??
காட்டமானக் கவிதை இன்பன்..ஆனால்....காந்த வேண்டியவர்களுக்கு காந்துமா....?
வாழ்த்துக்கள்.
பூமகள்
26-10-2010, 08:08 AM
தன்னியல் அறிந்தவன்..
தன்னில் புதைக்கும் நிஜம்..
அறிவிக்காமலே
அரங்கேறும் அவலம்..
தடுக்கப்பட்டதா?
முடுக்கப்பட்டதா??
அனைத்தையும் கவனித்தும் சரியாக்க முனையா அவன்.. செயலற்ற உயிரணுவினும் சிறிதே....
--
சுறுக்கென்று இருக்கிறது.. பாராட்டுகள் பலப்பல.