PDA

View Full Version : இருத்தலின்பொருள்



inban
20-10-2010, 05:14 PM
'எழுது
எதையாகிலும் எழுது'வென
எப்போதும்
இம்சித்தபடி இருக்கிறாய்.

'முதலில் வீட்டுக்கு விளக்கேற்று
அப்புறம்பார்
வீதி ஒளிபெற்றுகிளர்வதை '
என்கிறாய்

நண்பா!
வேர் அழுகி
வீழ்ந்து கொண்டிருக்கும் போது
கனிக்கு எப்படியடா காவல்போடுவது?

ஒப்பாரியில் எப்படியடா
வசந்தம் வாசிப்பது?

கோடித்துணிக்கு எங்கனமடா
வாழ்த்துக்கவிபடிப்பது?

நண்பா!
கணை கிளர்ந்து வரும்போது
கண்மூடி இருத்தல்
மடமையடா.

தீய்ந்த தென்னங்கீற்றுக்கள்,
வற்றிய வயற்றுத் தசைகள்,
காலியாகிப்போன குடிசைகள்,
மானுடச் சுவடுகளை
மறந்துகொண்டிருக்கும்
ஒற்றையடிப்பாதைகள்.....
............................
............................
.....................

கூடாதடா!
நண்பா
தீயே என் பிணத்தை
தின்னாதடா!!