Mano.G.
18-10-2010, 04:49 AM
நான் மலேசிய மண்ணில் தமிழ் நாட்டிலிருந்து
புலம் பெயர்ந்த இரு தமிழ் குடும்பத்தின் மூன்றாவது
தலைமுறையை மேலும் கொண்டு செல்ல பிறந்தவன்,
நான் வளர்ந்தது படித்தது பணிபுரிவது எல்லாம் மலேசிய
மண்ணில். இங்கே திருமணமும் ஆகி மூன்று பிள்ளைகளுக்கு
தந்தையும் ஆகினேன்.
ஆனால் ஊர் , தமிழகம், இந்தியா இம்மூன்று சொற்களும்
சிலகாலங்களுக்கு முன்புவரை எனக்கு ஒவ்வாத ஒன்றாக இருந்து வந்தன.அதற்கு சில காரணங்களும் உள்ளன.
கடந்த 2003 ம் ஆண்டு ஜுலை 13ம் நாள் இரவு 10.35 மணிக்கு
சென்னை அண்ணா அனைத்துலக வானூர்தி நிலையத்தில் முதல்
காலடி வைத்த வரையே.
அந்த தமிழ் மண்ணில் முதல் காலடி வைத்த சம்பவம் மன்ற உறவுகளுக்கு சிலருக்கு தெரியும்.
ஆனால் தற்பொழுது எனது உணர்வுகளும் எனது ஈடுபாடும்
மாறிவருவதை நானே உணருகின்றேன்.
http://www.youtube.com/watch?v=TImOBenn3XY
http://www.youtube.com/watch?v=77i8kH-Iw8Q&feature=related
http://www.youtube.com/watch?v=ubvhzYRbKBY
இம்மூன்று தேசபக்தி பாடல்களையோ இல்லை இசையயை கேட்கும்
பட்சத்தில் இனம்புரியா உணர்வு , உடலிலுள்ள உரோமங்களில்
அவ்வுணர்வினால் ஏற்படும் மாறுபாடு, இதய துடிப்பு , சுவாசத்தில்
மாற்றம்.அண்மையில் நடந்த காமல்வெல்த் போட்டி விளையாட்டுகள்
வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் அணிவிப்பில்
ஒவ்வொரு முறையும் இந்திய நாட்டின் தேசிய பண் இசைக்கும் பொழுது ஏற்பட்ட இந்த மாறுதல்கள் தான்
என்னை இந்த திரி துவக்க தூண்டியது.
ஏன் ???
எனக்கு இந்த இனம்புரியா உணர்வு ????
விட்டகுறையோ இல்லை தொட்டகுறையோ.
மனோ.ஜி
புலம் பெயர்ந்த இரு தமிழ் குடும்பத்தின் மூன்றாவது
தலைமுறையை மேலும் கொண்டு செல்ல பிறந்தவன்,
நான் வளர்ந்தது படித்தது பணிபுரிவது எல்லாம் மலேசிய
மண்ணில். இங்கே திருமணமும் ஆகி மூன்று பிள்ளைகளுக்கு
தந்தையும் ஆகினேன்.
ஆனால் ஊர் , தமிழகம், இந்தியா இம்மூன்று சொற்களும்
சிலகாலங்களுக்கு முன்புவரை எனக்கு ஒவ்வாத ஒன்றாக இருந்து வந்தன.அதற்கு சில காரணங்களும் உள்ளன.
கடந்த 2003 ம் ஆண்டு ஜுலை 13ம் நாள் இரவு 10.35 மணிக்கு
சென்னை அண்ணா அனைத்துலக வானூர்தி நிலையத்தில் முதல்
காலடி வைத்த வரையே.
அந்த தமிழ் மண்ணில் முதல் காலடி வைத்த சம்பவம் மன்ற உறவுகளுக்கு சிலருக்கு தெரியும்.
ஆனால் தற்பொழுது எனது உணர்வுகளும் எனது ஈடுபாடும்
மாறிவருவதை நானே உணருகின்றேன்.
http://www.youtube.com/watch?v=TImOBenn3XY
http://www.youtube.com/watch?v=77i8kH-Iw8Q&feature=related
http://www.youtube.com/watch?v=ubvhzYRbKBY
இம்மூன்று தேசபக்தி பாடல்களையோ இல்லை இசையயை கேட்கும்
பட்சத்தில் இனம்புரியா உணர்வு , உடலிலுள்ள உரோமங்களில்
அவ்வுணர்வினால் ஏற்படும் மாறுபாடு, இதய துடிப்பு , சுவாசத்தில்
மாற்றம்.அண்மையில் நடந்த காமல்வெல்த் போட்டி விளையாட்டுகள்
வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் அணிவிப்பில்
ஒவ்வொரு முறையும் இந்திய நாட்டின் தேசிய பண் இசைக்கும் பொழுது ஏற்பட்ட இந்த மாறுதல்கள் தான்
என்னை இந்த திரி துவக்க தூண்டியது.
ஏன் ???
எனக்கு இந்த இனம்புரியா உணர்வு ????
விட்டகுறையோ இல்லை தொட்டகுறையோ.
மனோ.ஜி