inban
15-10-2010, 01:36 AM
நீ போனதும்
உன்னோடேபோய்விட்டது
என் கவிதையும்.
நீ சிரிக்கும் போதெலாம்
வார்த்தைகள் என்னை
வட்டமிட்டபடி இருக்கும்.
உன்னோடு நடந்திடும்
ஒவ்வொருஅந்தியிலேயும்
உன் வதன வெளிச்சத்திலே
ஒரு கவியரங்கு
களைகட்டும்.
சினுங்கிடும்
உன் கால்கொளுசுக்கு
சந்ததங்கள் எல்லாம்
சேவை செய்ய ஓடும்.
நம் உறவின்
முதற் பிள்ளையாக
கவிதை என்னை
செல்லமாய் உதைக்கும்.
என் கனவுச்சோலையின் பூக்களைக் கொய்து...
என் வதன உலகினை நிர்மூலமாக்கி...
என் வாழ்வுப் படகிலே உளிகொண்டு தாக்கி...
குங்குமம் ஏந்தி நீ
குடித்தனம் போனபின்னால்,
தீயோடு சேர்ந்த தேகம் போல
உன்னோடே
ஓடிப்போய் விட்டது
என் கவிதையும்.
உன்னோடேபோய்விட்டது
என் கவிதையும்.
நீ சிரிக்கும் போதெலாம்
வார்த்தைகள் என்னை
வட்டமிட்டபடி இருக்கும்.
உன்னோடு நடந்திடும்
ஒவ்வொருஅந்தியிலேயும்
உன் வதன வெளிச்சத்திலே
ஒரு கவியரங்கு
களைகட்டும்.
சினுங்கிடும்
உன் கால்கொளுசுக்கு
சந்ததங்கள் எல்லாம்
சேவை செய்ய ஓடும்.
நம் உறவின்
முதற் பிள்ளையாக
கவிதை என்னை
செல்லமாய் உதைக்கும்.
என் கனவுச்சோலையின் பூக்களைக் கொய்து...
என் வதன உலகினை நிர்மூலமாக்கி...
என் வாழ்வுப் படகிலே உளிகொண்டு தாக்கி...
குங்குமம் ஏந்தி நீ
குடித்தனம் போனபின்னால்,
தீயோடு சேர்ந்த தேகம் போல
உன்னோடே
ஓடிப்போய் விட்டது
என் கவிதையும்.