PDA

View Full Version : உன் மலர் முகத்தை..!



vasanth111193
14-10-2010, 04:09 AM
நிலவைக் கண்டு மலரும்
அல்லி மலர் போல...
உன் மலர் முகத்தைக்
கண்டால்தான்...
என் மனசு மலருவேன் என்கிறது..!
என் இதய நிலவே...
அதற்காகவேனும் விரைந்து வா..!

ஆதவா
14-10-2010, 05:06 AM
முகநக நட்பது நட்பல்ல என்ற குறளில்... முகம் பார்த்து வருவதில்லை நட்பு என்று சொல்லுகிறார் வள்ளுவர். காதலுக்கும் நட்புக்கும் இடையேயுள்ள வேறுபாடு உடல் பகிர்தல் மட்டும்தான். மனம் பகிர்தல் நட்பிலும் உண்டு. ஒரு நட்புக்கே முகம் பார்த்து பழகாதீர்கள் என்று சொல்லுகிறாரெனில் காதல் மட்டும் முகம் பார்த்து வரலாமா?

நிலவைக் கண்டு மலரும் அல்லி - இது உண்மையா என்று தெரியாது. ஆனால் கவர்ச்சி என்று சொல்லுகிறீர்கள் இல்லையா? நிலவைக் கவர்ந்து மலரும் அல்லி....
உன் மலர் முகத்தைக் கவர்ந்து வரும் மனசு...

மொத்தத்தில் ஒரு கவர்ச்சிக் காதல்தான் கண்ணுக்குத் தெரிகிறது வசந்த் உண்மையான காதலைத் தேடவேண்டியிருக்கு!!

பூமகள்
14-10-2010, 05:34 PM
கவிதை இடமாறியதால்
உங்களிடம் வர மறுக்கிறதோ
அவள் இதயம்..??!!


கவிதைகளை அதற்கான இடத்தில் பதியுங்கள் வசந்த் சகோதரரே.

கவிதைகள், பாடல்கள் (http://tamilmantram.com/vb/forumdisplay.php?f=48)- பகுதி அதற்காகவே இருக்கிறதே. பொறுப்பாளர்கள் இத்திரியை தகுந்த இடத்துக்கு நகர்த்த உங்களுக்கு உதவுவார்கள்.:)

அமரன்
14-10-2010, 09:55 PM
அல்லி இங்கே மலரும் என நினைக்கவில்லை.

இன்னும் எழுதுங்க வசந்த்..

கவிதைகளைப் பொருத்தமான இடத்தில் பதியுங்கள் என்று மீண்டும் ஒரு தடவை கேட்டுக்கொள்கிறேன்.

பண்பட்டவராக நீங்கள் மன்ற வலம் வருவதைக் காண எனக்கும் ஆவல்.