எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-10-2010, 08:20 PM
பெறாத் தாயின் நிறைப் பருமனாய்
உப்பிக் கிடந்தது ஓர் வரலாற்றேடு!
உண்டு கொலுத்த வல்லூறுகளின்
கூரிய நகங்கள் பற்றியான துதி பாடல்களும்,
நா நுனியில் சமாதானம் பாடிக் கொண்டே
கக்கங்களில் ஆயுதங்கள் நீண்ட
சில காவியுடையர்களைப் போற்றியவைகளும்,
ஓசைகளற்றுக் கழிந்த அந்நிலவுக்கு கீழான
புறவையின் கிறீச்சிடல்களற்ற சில பாலைப் பொழுதுகளையும்,
மக்கியொடிந்து கிடப்பிலிடப்பட்ட வாள் பாகங்களின்
பழம் பெரும் புராதனப் புதினங்களும
பக்கங்களெங்கும் பெருகிக் கிடந்தன;
ஈரப் பொழுதுகளுக்கு முன்னாலான செழுந்த மண் வாசனைகளும்
செந்நாய்கள் கூடி மிச்சமிட்ட சில மாமிசக் கவுச்சைகளும்
ஒழுகிக் கிடந்தன அதன் அட்டைகள் வழியே
எவர் வரலாற்றை எவரும் எழுதலாம்!
எவர் நிலத்தை எவரும் எவருக்கும் பங்கிடலாம்!
நேரிய பிழைக்காய் உங்களை வினவுவதற்கில்லை
அகமறிந்த காலமும் கடவுளும்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.
உப்பிக் கிடந்தது ஓர் வரலாற்றேடு!
உண்டு கொலுத்த வல்லூறுகளின்
கூரிய நகங்கள் பற்றியான துதி பாடல்களும்,
நா நுனியில் சமாதானம் பாடிக் கொண்டே
கக்கங்களில் ஆயுதங்கள் நீண்ட
சில காவியுடையர்களைப் போற்றியவைகளும்,
ஓசைகளற்றுக் கழிந்த அந்நிலவுக்கு கீழான
புறவையின் கிறீச்சிடல்களற்ற சில பாலைப் பொழுதுகளையும்,
மக்கியொடிந்து கிடப்பிலிடப்பட்ட வாள் பாகங்களின்
பழம் பெரும் புராதனப் புதினங்களும
பக்கங்களெங்கும் பெருகிக் கிடந்தன;
ஈரப் பொழுதுகளுக்கு முன்னாலான செழுந்த மண் வாசனைகளும்
செந்நாய்கள் கூடி மிச்சமிட்ட சில மாமிசக் கவுச்சைகளும்
ஒழுகிக் கிடந்தன அதன் அட்டைகள் வழியே
எவர் வரலாற்றை எவரும் எழுதலாம்!
எவர் நிலத்தை எவரும் எவருக்கும் பங்கிடலாம்!
நேரிய பிழைக்காய் உங்களை வினவுவதற்கில்லை
அகமறிந்த காலமும் கடவுளும்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.