PDA

View Full Version : *****திருமணம்*****



gopikrishnan.r
12-10-2010, 01:11 PM
ஜாதி மதம்
குலம் கோத்திரம் பார்த்து
உற்றார் உறவினர் கூடி நடத்தும்
எல்லா திருமணங்களும் ஜெயிப்பதுமில்லை...

ஜாதி மத பேதமின்றி
மன ஒற்றுமையையே
வாழ்க்கையாக அமைத்துக் கொண்டு செய்யும்
காதல் திருமணங்கள்
எல்லாம் தோற்பதுமில்லை...!

சிவா.ஜி
12-10-2010, 04:26 PM
உண்மைதான். ஆனா இப்பல்லாம் உருகி உருகிக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினவங்கதான் அதிகமா கோர்ட் வாசல்ல நிக்கறாங்க.

ஆக....

பத்துப்பொருத்தம் பார்த்து
செய்துவைத்த திருமணமும் ஜெயிப்பதில்லை

ஒத்தைப் பொருத்தமும் பார்க்காமல்
செய்துகொண்ட காதல் திருமணங்களும் ஜெயிப்பதில்லை

உள்ளப்பொருத்தத்தை ஒவ்வொரு நொடியும்
புதுப்பித்துக்கொண்டு தொடரும்
இல்வாழ்க்கையில் தோல்வியுமில்லை ஜெயமுமில்லை
நல்ல வாழ்க்கை மட்டுமே உண்டு....

வாழ்த்துக்கள் கோபி.

gopikrishnan.r
13-10-2010, 06:26 AM
உண்மைதான். ஆனா இப்பல்லாம் உருகி உருகிக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினவங்கதான் அதிகமா கோர்ட் வாசல்ல நிக்கறாங்க.

ஆக....

பத்துப்பொருத்தம் பார்த்து
செய்துவைத்த திருமணமும் ஜெயிப்பதில்லை

ஒத்தைப் பொருத்தமும் பார்க்காமல்
செய்துகொண்ட காதல் திருமணங்களும் ஜெயிப்பதில்லை

உள்ளப்பொருத்தத்தை ஒவ்வொரு நொடியும்
புதுப்பித்துக்கொண்டு தொடரும்
இல்வாழ்க்கையில் தோல்வியுமில்லை ஜெயமுமில்லை
நல்ல வாழ்க்கை மட்டுமே உண்டு....

வாழ்த்துக்கள் கோபி.

ஊக்கத்திற்கு நன்றி சிவா...
காதல் திருமணமாயினும்
நிச்சயித்த திருமணமாயினும்
எல்லா திருமணங்களுமே ஜெயிப்பதில்லை
என்பதையே கூறியுள்ளேன்.....
இன்றைய சூழ்நிலையில் பரஸ்பர புரிதல் இல்லாத எந்த திருமணமும் ஜெயிப்பதில்லை....

பிரேம்
13-10-2010, 10:11 AM
இருந்தாலும்..லவ் மேரேஜில இருக்கிற..சந்தோஷம் வேற எதுலயும்..வராது..

முன்ன பின்ன அறியாத ஒரு பெண்ணை காட்டினா எப்டி சார் கல்யாணம் பண்ணிக்க முடியும்..??

nambi
13-10-2010, 11:55 AM
பெண்ணை நிச்சயம் பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணுகிறவரையுள்ள இடைப்பட்ட காலத்தில் காதலியுங்கள் (திருமண தேதிவரையுள்ள)......காதலித்த மாதிரியும் ஆயிடுச்சு....பெற்றவங்க பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணியது மாதிரியும் ஆயிற்று....திருமணத்திற்கு முன்பே அறிமுகம் ஆனது மாதிரியும் ஆயிற்று......பரஸ்பரம் பகிர்ந்து கொண்டது மாதிரியும் ஆச்சு...ஒரே கல்லுல....நிறைய...இப்ப இந்த மாதிரிதான்....(டிரன்ட்):D

பிரேம்
14-10-2010, 08:18 AM
இந்த பெண்ணைத்தான் நீ காதலிக்கனும்னு காட்டுவீங்க...அவங்கள நாங்க காதலிக்கணுமா..?

அதெல்லாம் தானா வரணும் சார்..