த.ஜார்ஜ்
11-10-2010, 04:02 PM
அல்போன்ஸ்க்கு கல்யாணம் ஆனபோது ‘சாகப் போற வயசில இவனுக்கு இது தேவையா?’ என்றுதான் அலுவலகத்தில் பேச்சு அடிபட்டது.
மனுசனுக்கு ஐம்பது வயதிருக்கும். தலையில் முக்கால் வழுக்கை. பின் மண்டையிலிருந்து முடியையிழுத்து முன்னுக்கு கொண்டு வந்திருப்பார். குட்டை கத்தரிக்காய் மாதிரி இருப்பார். அதிகாரிகளிடம் பணிவு காட்ட இன்னும் குனிவார். எழுத்து படிக்க தடித்த லென்ஸ் கண்ணாடி போட்டிருப்பார்.
ஊரிலுள்ள புறம்போக்கு நிலத்தையெல்லாம் வளைத்துப் போட்டு கள்ளிச் செடியை நட்டு வேலி உண்டாக்கி சில நாள் விடுவார். பிரச்சனை எதுவும் இல்லை என்றதும் அதில் மரச்சீனி நட்டு போடுவார். பிறகு அங்கே மறைவாய் ஒரு குடிசை போடுவார். பின்னொரு நாளில் யாராவது ஒரு பெண்ணுடன் அங்கே வந்து சல்லாபிப்பார்.
அப்படிப் பட்ட மனுசனுக்கு கல்யாணம் என்றால்....
“அது கல்யாணம் இல்லப்பா.. போய் மாட்டிகிட்டது. ஊர்காரனுக மிரட்டி கட்டி வச்சதாம்ல. ” பிரான்சிஸ் விசயத்தைப் போட்டு உடைத்தான். ஆக மனுசன் குடும்பஸ்தன் ஆனது சில நாள் நகைச்சுவையாய் கிசுகிசுக்கும் செய்தியாகிப் பொனது அலுவலகத்தில்..
கோயில் திருவிழா சமயத்தில் மனைவியுடன் வீட்டுக்கு வந்திருந்தார். கேட்டில் வந்து நின்ற போது எனக்கு அடையாளமே தெரியவில்லை. முழுக்க மொட்டை போட்டு மீசை மழித்திருந்தார். யாரோ பிச்சைக்காரன் என்றுதான் நினைத்தேன்.
பெயர் சொல்லிக் கூப்பிட்டதும்தான் உற்றுப் பார்த்தேன்.. கிட்டே போனபோது குடித்திருக்கிற வாசம் வீசியது.
“கோயிலுக்கு வந்தேன். அப்படியே பார்த்திட்டு போலாம்னு....”
உள்ளே அமர வைத்தேன். அவர் மனைவியும் இவரை மாதிரியே குட்டையாக இருந்தாள். இவர் சொன்ன இடத்தில் உட்கார்ந்தாள். தொடைக்கிடையே கையைச் செருகிக்கொண்டு சிரித்தபடியே இருந்தாள்.
குளிர் பானம் குடித்து விட்டு எழுந்து உள்ளே போக எத்தனித்தவளை இழுத்து முன்னறைக்கு கொண்டு வந்து உட்கார வைத்தார். இவர் முறைப்புக்கு, அவள் மேலும் சிரித்தாள்.
‘சரி கிளம்புறோம்’ என்றபடி சட்டென்று புறப்பட்டார்.
அடுத்த சில தினத்தில் மாரடைப்பில் ஆள் போயே விட்டார்..
ஆறேழு மாதங்களுக்குப் பின் ஒரு நாள் அவர் மனைவி அலுவலகம் வந்தாள். என் முன்னால் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார்.
‘என்ன’ என்றேன்.
‘என் வீட்டுக்காரரை பாக்கணும்’ என்றாள்.
எனக்கு திகைப்பாயிருந்தது.
‘அவரு ஒழுங்கா வேலைக்கு வராரா. வந்தா வீட்டுக்கு வரச் சொல்லுங்க.’
கையில் பிளாஸ்டிக் பை வைத்திருந்தாள். பழைய துணிகள், காகிதங்கள் என்று அதில் நிரம்பியிருந்தன.
‘பணமெல்லாம் இங்க வச்சிருக்காருன்னு சொன்னார் ..எடுத்திட்டு வரச் சொல்லுங்க. நான் வரட்டா?’
பதிலை எதிர்பாராமல் பையை தூக்கிகொண்டு விறுவிறுவென நடந்து போனாள்..
மனுசனுக்கு ஐம்பது வயதிருக்கும். தலையில் முக்கால் வழுக்கை. பின் மண்டையிலிருந்து முடியையிழுத்து முன்னுக்கு கொண்டு வந்திருப்பார். குட்டை கத்தரிக்காய் மாதிரி இருப்பார். அதிகாரிகளிடம் பணிவு காட்ட இன்னும் குனிவார். எழுத்து படிக்க தடித்த லென்ஸ் கண்ணாடி போட்டிருப்பார்.
ஊரிலுள்ள புறம்போக்கு நிலத்தையெல்லாம் வளைத்துப் போட்டு கள்ளிச் செடியை நட்டு வேலி உண்டாக்கி சில நாள் விடுவார். பிரச்சனை எதுவும் இல்லை என்றதும் அதில் மரச்சீனி நட்டு போடுவார். பிறகு அங்கே மறைவாய் ஒரு குடிசை போடுவார். பின்னொரு நாளில் யாராவது ஒரு பெண்ணுடன் அங்கே வந்து சல்லாபிப்பார்.
அப்படிப் பட்ட மனுசனுக்கு கல்யாணம் என்றால்....
“அது கல்யாணம் இல்லப்பா.. போய் மாட்டிகிட்டது. ஊர்காரனுக மிரட்டி கட்டி வச்சதாம்ல. ” பிரான்சிஸ் விசயத்தைப் போட்டு உடைத்தான். ஆக மனுசன் குடும்பஸ்தன் ஆனது சில நாள் நகைச்சுவையாய் கிசுகிசுக்கும் செய்தியாகிப் பொனது அலுவலகத்தில்..
கோயில் திருவிழா சமயத்தில் மனைவியுடன் வீட்டுக்கு வந்திருந்தார். கேட்டில் வந்து நின்ற போது எனக்கு அடையாளமே தெரியவில்லை. முழுக்க மொட்டை போட்டு மீசை மழித்திருந்தார். யாரோ பிச்சைக்காரன் என்றுதான் நினைத்தேன்.
பெயர் சொல்லிக் கூப்பிட்டதும்தான் உற்றுப் பார்த்தேன்.. கிட்டே போனபோது குடித்திருக்கிற வாசம் வீசியது.
“கோயிலுக்கு வந்தேன். அப்படியே பார்த்திட்டு போலாம்னு....”
உள்ளே அமர வைத்தேன். அவர் மனைவியும் இவரை மாதிரியே குட்டையாக இருந்தாள். இவர் சொன்ன இடத்தில் உட்கார்ந்தாள். தொடைக்கிடையே கையைச் செருகிக்கொண்டு சிரித்தபடியே இருந்தாள்.
குளிர் பானம் குடித்து விட்டு எழுந்து உள்ளே போக எத்தனித்தவளை இழுத்து முன்னறைக்கு கொண்டு வந்து உட்கார வைத்தார். இவர் முறைப்புக்கு, அவள் மேலும் சிரித்தாள்.
‘சரி கிளம்புறோம்’ என்றபடி சட்டென்று புறப்பட்டார்.
அடுத்த சில தினத்தில் மாரடைப்பில் ஆள் போயே விட்டார்..
ஆறேழு மாதங்களுக்குப் பின் ஒரு நாள் அவர் மனைவி அலுவலகம் வந்தாள். என் முன்னால் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார்.
‘என்ன’ என்றேன்.
‘என் வீட்டுக்காரரை பாக்கணும்’ என்றாள்.
எனக்கு திகைப்பாயிருந்தது.
‘அவரு ஒழுங்கா வேலைக்கு வராரா. வந்தா வீட்டுக்கு வரச் சொல்லுங்க.’
கையில் பிளாஸ்டிக் பை வைத்திருந்தாள். பழைய துணிகள், காகிதங்கள் என்று அதில் நிரம்பியிருந்தன.
‘பணமெல்லாம் இங்க வச்சிருக்காருன்னு சொன்னார் ..எடுத்திட்டு வரச் சொல்லுங்க. நான் வரட்டா?’
பதிலை எதிர்பாராமல் பையை தூக்கிகொண்டு விறுவிறுவென நடந்து போனாள்..