View Full Version : பத்து... :)
செல்வா
08-10-2010, 08:46 AM
நேற்று அறிமுகமான பெண்ணின்
ஜலதோஷம் பற்றி பத்தாவது முறை விசாரிக்க
கைபேசியில் ஹலோ சொன்னபடி வெளியேறினான்.
பத்து நாட்களாக இருமிக்கொண்டிருக்கும்
பாட்டியின் இருமல் ஓலித்
தொல்லையைத் தவிர்க்க…!
Ravee
08-10-2010, 08:56 AM
செல்வா இது உங்க அனுபவமா ... நாகர்கோவில் வந்தால் பா(ர்)ட்டியை பார்க்கலாமா :lachen001: :lachen001: :lachen001:
கண்மணி
08-10-2010, 09:18 AM
பாட்டியை வெளிய போய்த் தொலைன்னு சொல்லலியே!! அது வரைக்கும் சந்தோஷம்...
போன கவிதையில் மழை..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24685
இந்தக் கவிதையில் ஜலதோஷம்..
ம்ம்ம்ம்... கூடிய சீக்கிரத்தில் ஆவி பிடிக்கப் போறீங்கன்னு தெரியுது....:eek::eek::eek:
நேற்று அறிமுகமான பெண்ணின்
ஜலதோஷம் பற்றி பத்தாவது முறை விசாரிக்க
கைபேசியில் ஹலோ சொன்னபடி வெளியேறினான்.
பத்து நாட்களாக இருமிக்கொண்டிருக்கும்
பாட்டியின் இருமல் ஓலித்
தொல்லையைத் தவிர்க்க…!
னான் க்குப் பதில் னேன் போட்டிருந்தால் கவிதை இன்னும் ஜம்மென்று இருக்கும்!!! :icon_tongue:
கண்மணி
08-10-2010, 10:41 AM
னான் க்குப் பதில் னேன் போட்டிருந்தால் கவிதை இன்னும் ஜம்மென்று இருக்கும்!!! :icon_tongue:
தெலுங்குல நேனு என்பதை தமிழ்ல நான் அப்படின்னு சொல்லுவாங்கல்ல..:lachen001::lachen001::lachen001::lachen001:
ம்ம்ம்ம்... கூடிய சீக்கிரத்தில் ஆவி பிடிக்கப் போறீங்கன்னு தெரியுது....:eek::eek::eek:
அல்ரெடி பிடிச்சாச்சு...
Ravee
08-10-2010, 12:17 PM
அல்ரெடி பிடிச்சாச்சு...
செல்வாவை ஆவி பிடிச்சதா இல்லை ஆவியை செல்வா பிடிச்சாரா ஹா ஹா ஹா :lachen001: :lachen001: :lachen001:
பாரதி
08-10-2010, 12:38 PM
எப்போதும் "ஒன் மினிட்.. ஆன் கால்.." என்று சொல்வதற்கான காரணம் இப்போது புரிந்தது:lachen001:. (அதுக்குப்பின்னாடி ஒரு மணி நேரம் ஆளைக்காணோம் என்பது வேறு.) அது சரி... என்ன 'பத்து' போடச் சொன்னீங்க செல்வா..?
சிவா.ஜி
08-10-2010, 04:31 PM
ஏனுங்க செல்வாவை இப்படி எல்லாரும் ஓட்டறீங்க.....அவருக்குத்தான் கொள்ளிமலை ட்ரிப்லேயே...போட்டோ வந்துடிச்சே....ஓக்கேவும் ஆகிடிச்சே...
கவிதை லேசா ஆரம்பிச்சு...கனமா முடிஞ்சிருக்கு....பார்ட்டி புதுக்கவர்ச்சி....பாட்டி பழந்தொல்லை....அதான் பையனோட அக்கறையில்லா வெளிநடப்பு.
நல்லாருக்கு செல்வா.
பூமகள்
08-10-2010, 05:15 PM
என்னமோ நடக்குது... :icon_ush::icon_ush:
மழைங்கறாங்க.. பத்து போடனும்ங்கறாங்க.. :p;)
யாருக்குங்க செல்வாண்ணா ஜுரம்... உங்களுக்கா இல்ல.... உங்களோட மழைல நனைஞ்சவங்களுக்கா??!! :cool::cool:
யாருங்க அது??!!:eek::eek: ஆவி பிடிச்சிடுச்சிங்களா??:sprachlos020::sprachlos020: சொல்லவே இல்ல...!!:)
அமரன்
08-10-2010, 05:33 PM
எதிர்காலத்துல போடப்போற பல பத்துகளுக்கு இந்தப் பத்து முன்னோடி.
அப்ப தெரியும் பாட்டியின் அருமை.
அமரன்
08-10-2010, 05:34 PM
ஏனுங்க செல்வாவை இப்படி எல்லாரும் ஓட்டறீங்க........
இனிமேல் ஆளைப் பிடிக்கலாமோ தெரியலையே.. அதான்..
Ravee
08-10-2010, 10:10 PM
ஆவியே பிடிச்சாலும் ( பிடிச்சதினாலே தானே ஓகே சொன்னீர் ) செல்வா மரியாதையா நீர் ... ஆவி நீராவின்னுதான் சொல்வார் அப்படித்தானே .... செல்வா சௌராஷ்டிர மொழியில் ஆவி என்றால் பிரியாமல் கூடவே வா என்று அர்த்தம் ... எனவே செல்வா அந்த ஆவியுடன் ஆவியாய் போய்க்கிட்டே இருங்கள்...:lachen001: ஹா ஹா ஹா :D
கண்மணி
09-10-2010, 03:34 AM
ஏனுங்க செல்வாவை இப்படி எல்லாரும் ஓட்டறீங்க.....அவருக்குத்தான் கொள்ளிமலை ட்ரிப்லேயே...போட்டோ வந்துடிச்சே....ஓக்கேவும் ஆகிடிச்சே...
கவிதை லேசா ஆரம்பிச்சு...கனமா முடிஞ்சிருக்கு....பார்ட்டி புதுக்கவர்ச்சி....பாட்டி பழந்தொல்லை....அதான் பையனோட அக்கறையில்லா வெளிநடப்பு.
நல்லாருக்கு செல்வா.
அண்ணா அந்த ஃபோட்டோ வேறயாம். இந்தப் பொண்ணு வேறயாம்.
பட்சி சொல்லுது..
செல்வா படு ஸ்பீடு.. மதி மாதிரி இல்ல...:icon_rollout:
ஹாஹா... நல்லாருக்கு கவித... எல்லோரும் அலாய்சி காய போட்டபிறகு நானென்ன சொல்ல... டிக்கட் புக் பண்ணனும்.. தேதி சொன்னா நல்லாருக்கும்.. :D:D:D
அனுபவஸ்தர்கள் இனி நிறைய சொல்லுவாங்க.. கேட்டுக்கோங்க...!!!:D
அண்ணா அந்த ஃபோட்டோ வேறயாம். இந்தப் பொண்ணு வேறயாம்.
பட்சி சொல்லுது..
செல்வா படு ஸ்பீடு.. மதி மாதிரி இல்ல...:icon_rollout:
அட... எனக்கு கல்யாணமாகி குழந்தைக்கு எல்.கே.ஜி அட்மிஷன் தேடிட்டு இருக்கேன்..
ஒருபேச்சுக்கு கல்யாணமாகாத சின்னப்பையன்னு சொன்னா.. அதையே பிடிச்சுக்கிட்டு...
என் பொண்டாட்டி புள்ள இதைப்படிச்சா... கோச்சுக்கப்போறாங்க.. :icon_b::icon_b:
ஓவியன்
09-10-2010, 06:34 AM
அண்மையில் என் நண்பர் ஒருவரின் கூகிள் Buzz ல் பின்வரும் ஸ்டஸ் மெசேச்சுகள் (!) இருந்தது.... :cool:
பேச ஆரம்பிச்சாலே cough வந்து Off பண்ணிடுது....
Cold பிடிச்சா Hot (Fever) வருது.... என்ன ஒரு முரண்.
Cold + Hot = Tablet + Injection
இவற்றுக்கும் இந்தக் கவிதைக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கானு தெரியலை...!! :D:D:D
அண்மையில் என் நண்பர் ஒருவரின் கூகிள் Buzz ல் பின்வரும் ஸ்டஸ் மெசேச்சுகள் (!) இருந்தது.... :cool:
இவற்றுக்கும் இந்தக் கவிதைக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கானு தெரியலை...!! :D:D:D
நீங்களும் கவனிச்சிட்டீங்களா??? :icon_b:
சிவா.ஜி
09-10-2010, 04:46 PM
அண்ணா அந்த ஃபோட்டோ வேறயாம். இந்தப் பொண்ணு வேறயாம்.
பட்சி சொல்லுது..
செல்வா படு ஸ்பீடு.. மதி மாதிரி இல்ல...:icon_rollout:
இது வேறயா....
செல்வா.....கள்வா...என்ன நடக்குதுன்னு
சொல்வா....
யாரு யாருக்கு கொடுத்தது அல்வா...??
த.ஜார்ஜ்
09-10-2010, 04:53 PM
உங்க பாட்டி ஊருலதான், அந்த ஆவி இருக்காமே?
த.ஜார்ஜ்
09-10-2010, 05:01 PM
இது வேறயா....
செல்வா.....கள்வா...என்ன நடக்குதுன்னு
சொல்வா....
யாரு யாருக்கு கொடுத்தது அல்வா...??
சிவா.ஜி..
அல்வா ரொம்ப நல்லாயிருக்கு.[ஓ.கவிதையா அது?]
என் பொண்டாட்டி புள்ள இதைப்படிச்சா... கோச்சுக்கப்போறாங்க.. :icon_b::icon_b:
நாப்பது வருஷம் கழிச்சு Archive ஐத் தேடி படிக்கவா போறாங்க.... விடுங்க பாஸ்.
அனுராகவன்
09-10-2010, 06:55 PM
கவியே கவி...என்ன இந்த கவி படித்து என் மேல் உள்ள ஆனந்தம் என்ன செய்யும் உன்னை.....
ஆகா ..ஆகா..என்ன இப்படி சொன்ன விட்டு விடுவோமா...