குணமதி
05-10-2010, 11:47 AM
வழுவமைதி (தொடர்ச்சி)
வினா
வினாவாவது, அறியக் கருதியதை வெளிப்படுத்துவதாம்
உயிர் எத்தன்மையது? - வினா வழாநிலை.
கறக்கின்ற எருமை சினையோ? என்பது வினா வழு.
வினா, அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல், என அறுவகைப்படும்.
எடுத்துக்காட்டு
1. மாணவன் ஆசிரியரிடம், ஐயா, இந்த வெண்பாவிற்குப் பொருள் என்ன? என்று கேட்பது அறியா வினா.
2. அங்கு தெரிவது குச்சியோ கிழவரோ? என்று கேட்பது ஐய வினா.
3. ஆசிரியர், மாணவனிடம், இந் நூற்பாவிற்குப் பொருள் யாது? என்று கேட்பது அறிவினா.
4. காராமணிப்ப பயறுண்டோ கடைக்காரரே? என்று கேட்பது கொளல் வினா
5. செழியனுக்கு ஆடையில்லையா? என்று கேட்பது கொடை வினா
6. கதிர்! சாப்பிட்டாயா? என்று கேட்பது ஏவல் வினா.
விடை
விடையாவது, வினா ஆகிய பொருளை அறிவிப்பதாம்.
உயிர் உணர்தல் தன்மையது - விடை வழாநிலை.
தில்லைக்கு வழி எது? என்று கேட்டால் சிவப்புக்காளை
முப்பது ஆயிரம் உருபாய் என்பது விடைவழு.
விடை, சுட்டு, எதிர்மறை உடன்பாடு, ஏவல், வினா எதிர் வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி என, எட்டு வகைப்படும்.
எடுத்துக்காட்டு
1. சென்னைக்கு வழி யாது? என்று வினவினால் இது என்பது சுட்டு
2.. இது செய்வாயா? என்பதற்குச் செய்யேன் என்பது எதிர்மறை
3. இது செய்வாயா? என்பதற்குச் செய்வேன் என்பது உடன்பாடு
4. இது செய்வாயா? என்பதற்கு நீ செய் என்பது ஏவல்
5. இது செய்வாயா? என்பதற்குச் செய்யேனோ? என்பது வினாவெதிர் வினாதல்
6. இது செய்வாயா? என்பதற்கு உடம்பு வலிக்கிறது எனபது உற்றது உரைத்தல்
7. இது செய்வாயா? என்பதற்கு உடம்பு வலிக்கும் என்பது உறுவது கூறல்
8. இது செய்வாயா? என்பதற்கு மற்றையது செய்வேன் என்பது இனமொழி விடை.
(மரபு வழுவமைதியுடன் தொடர் முடியும்)
வினா
வினாவாவது, அறியக் கருதியதை வெளிப்படுத்துவதாம்
உயிர் எத்தன்மையது? - வினா வழாநிலை.
கறக்கின்ற எருமை சினையோ? என்பது வினா வழு.
வினா, அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல், என அறுவகைப்படும்.
எடுத்துக்காட்டு
1. மாணவன் ஆசிரியரிடம், ஐயா, இந்த வெண்பாவிற்குப் பொருள் என்ன? என்று கேட்பது அறியா வினா.
2. அங்கு தெரிவது குச்சியோ கிழவரோ? என்று கேட்பது ஐய வினா.
3. ஆசிரியர், மாணவனிடம், இந் நூற்பாவிற்குப் பொருள் யாது? என்று கேட்பது அறிவினா.
4. காராமணிப்ப பயறுண்டோ கடைக்காரரே? என்று கேட்பது கொளல் வினா
5. செழியனுக்கு ஆடையில்லையா? என்று கேட்பது கொடை வினா
6. கதிர்! சாப்பிட்டாயா? என்று கேட்பது ஏவல் வினா.
விடை
விடையாவது, வினா ஆகிய பொருளை அறிவிப்பதாம்.
உயிர் உணர்தல் தன்மையது - விடை வழாநிலை.
தில்லைக்கு வழி எது? என்று கேட்டால் சிவப்புக்காளை
முப்பது ஆயிரம் உருபாய் என்பது விடைவழு.
விடை, சுட்டு, எதிர்மறை உடன்பாடு, ஏவல், வினா எதிர் வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி என, எட்டு வகைப்படும்.
எடுத்துக்காட்டு
1. சென்னைக்கு வழி யாது? என்று வினவினால் இது என்பது சுட்டு
2.. இது செய்வாயா? என்பதற்குச் செய்யேன் என்பது எதிர்மறை
3. இது செய்வாயா? என்பதற்குச் செய்வேன் என்பது உடன்பாடு
4. இது செய்வாயா? என்பதற்கு நீ செய் என்பது ஏவல்
5. இது செய்வாயா? என்பதற்குச் செய்யேனோ? என்பது வினாவெதிர் வினாதல்
6. இது செய்வாயா? என்பதற்கு உடம்பு வலிக்கிறது எனபது உற்றது உரைத்தல்
7. இது செய்வாயா? என்பதற்கு உடம்பு வலிக்கும் என்பது உறுவது கூறல்
8. இது செய்வாயா? என்பதற்கு மற்றையது செய்வேன் என்பது இனமொழி விடை.
(மரபு வழுவமைதியுடன் தொடர் முடியும்)