M.Jagadeesan
04-10-2010, 10:06 AM
முற்றும் துறந்த நிலையே "துறவு" எனப்படும்.உடைமைகளை மட்டுமல்லாது தன் உடலின் மீதுள்ள பற்றுகளையும் துறந்தவன்தான் உண்மையான துறவி. இதையே வள்ளுவர்,
மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
என்றார்.பிறப்பு வேண்டாம் என்று எண்ணும் துறவிகளுக்கு அவர்களுடைய உடம்பே சுமை. இந்நிலையில் இவ்வுலகத் தொடர்பாடு எதற்காக? என்பது இக்குறளின் கருத்து.
"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே"-என்று செல்வத்தின் நிலையாமையை உணர்ந்த பட்டினத்தார், துறவறம் மேற்கொண்டார். ஊர் ஊராக அலைந்தார்,கிடைத்ததை உண்டு நினைத்த இடத்தில் படுத்து உறங்கினார்.ஆடையின்றி இடையில் ஒரு கோமணம் மட்டும் அணிந்திருந்தார்.
ஒருசமயம் களைப்பு மேலிட, ஒரு வயல்வெளியில் ,கட்டாந்தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.தன்னுடைய கையை மடித்துத் தலைக்குக் கீழே தலையணையாக வைத்துக் கொண்டிருந்தார்.
அவ்வழியே சென்ற இரு பெண்கள் அவரைப் பார்த்தனர்.அவர்களில் ஒருத்தி "ஐயோ பாவம், கல்லிலும், மண்ணிலும் படுத்து உறங்கும் இவர்தான் உண்மையான துறவி" என்றாள். அதற்கு மற்றவள், "உண்மையான துறவிக்கு சுகம் என்ன வேண்டிக்கிடக்கு? கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கலாமா?"-என்று கேட்டாள்.
இந்த உரையாடலைக் கேட்ட பட்டினத்தாருக்கு மனதில் "சுரீர்" என்று தைத்தது.உடனே கையை எடுத்துவிட்டுத் தலையைத் தரையில் வைத்து உறங்கிக்கொண்டிருந்தார்.சிறிது நேரம் கழித்து மீண்டும் அப்பெண்கள் அவ்வழியே வந்தனர்.
"இப்பொழுது என்ன சொல்கிறாய்? தலையணை கூட இல்லாமல் உறங்கும் இவர் உண்மையான துறவிதானே?'-என்று கேட்டாள். நாம் பேசியதை ஒட்டுக்கேட்ட பிறகுதானே தலையணை இல்லாமல் உறங்குகிறார்? துறவிக்கு ஒட்டுக்கேட்கும் பழக்கம் எதற்கு?'-என்று கேட்டாள்
துறவறம் எவ்வளவு கடுமையானது என்பதைப் பட்டினத்தார் தெரிந்துகொண்டார்.
மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
என்றார்.பிறப்பு வேண்டாம் என்று எண்ணும் துறவிகளுக்கு அவர்களுடைய உடம்பே சுமை. இந்நிலையில் இவ்வுலகத் தொடர்பாடு எதற்காக? என்பது இக்குறளின் கருத்து.
"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே"-என்று செல்வத்தின் நிலையாமையை உணர்ந்த பட்டினத்தார், துறவறம் மேற்கொண்டார். ஊர் ஊராக அலைந்தார்,கிடைத்ததை உண்டு நினைத்த இடத்தில் படுத்து உறங்கினார்.ஆடையின்றி இடையில் ஒரு கோமணம் மட்டும் அணிந்திருந்தார்.
ஒருசமயம் களைப்பு மேலிட, ஒரு வயல்வெளியில் ,கட்டாந்தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.தன்னுடைய கையை மடித்துத் தலைக்குக் கீழே தலையணையாக வைத்துக் கொண்டிருந்தார்.
அவ்வழியே சென்ற இரு பெண்கள் அவரைப் பார்த்தனர்.அவர்களில் ஒருத்தி "ஐயோ பாவம், கல்லிலும், மண்ணிலும் படுத்து உறங்கும் இவர்தான் உண்மையான துறவி" என்றாள். அதற்கு மற்றவள், "உண்மையான துறவிக்கு சுகம் என்ன வேண்டிக்கிடக்கு? கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கலாமா?"-என்று கேட்டாள்.
இந்த உரையாடலைக் கேட்ட பட்டினத்தாருக்கு மனதில் "சுரீர்" என்று தைத்தது.உடனே கையை எடுத்துவிட்டுத் தலையைத் தரையில் வைத்து உறங்கிக்கொண்டிருந்தார்.சிறிது நேரம் கழித்து மீண்டும் அப்பெண்கள் அவ்வழியே வந்தனர்.
"இப்பொழுது என்ன சொல்கிறாய்? தலையணை கூட இல்லாமல் உறங்கும் இவர் உண்மையான துறவிதானே?'-என்று கேட்டாள். நாம் பேசியதை ஒட்டுக்கேட்ட பிறகுதானே தலையணை இல்லாமல் உறங்குகிறார்? துறவிக்கு ஒட்டுக்கேட்கும் பழக்கம் எதற்கு?'-என்று கேட்டாள்
துறவறம் எவ்வளவு கடுமையானது என்பதைப் பட்டினத்தார் தெரிந்துகொண்டார்.