M.Jagadeesan
03-10-2010, 06:09 PM
மெத்தப்படித்த மேதைகள் கூட சிலசமயங்களில் அறிவிலிகளாக நடந்துகொள்வதுண்டு. சாதாரண மக்களுக்குப் புரிகின்ற உண்மைகள் கூட அவர்களுக்குப் புரிவதில்லை.இதைத்தான் வள்ளுவரும்.
அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
என்று கூறுகின்றார்." கற்றற்கு அறிய நூல்களைக் கற்றவர்களிடம் கூட சிலசமயங்களில் அறியாமை தோன்றும்" --என்பது இக்குறளின் பொருள்.
அமெரிக்காவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் மிகச்சிறந்த அறிவியல் அறிஞர் என்பதை நாம் அறிவோம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்.அவர் ஒருசமயம் பூனை ஒன்றை வளர்த்து வந்தார்.அது அவரிடம் செல்லமாக விளையாடும். எடிசன் ஆராய்ச்சியில் ஈடுபடும்பொழுது அறைக்கதவை மூடிவிடுவது வழக்கம்.அப்பொழுது பூனை வந்து போவதற்காக அறைக்கதவில் வட்டமாகத் துளையிட்டு வைத்தார். அந்த ஓட்டை வழியாக பூனை வந்து அவரிடம் சிறிது நேரம் விளையாடிவிட்டுப் பிறகு அதே ஓட்டை வழியாக வெளியே சென்றுவிடும். இது வழக்கமாக நடைபெற்று வந்தது.
சிலநாட்கள் கழித்து அப்பூனை இரண்டு குட்டிகளை ஈன்றது.அக்குட்டிகளும் தன்னுடைய அறைக்கு வந்து போவதற்காக கதவில் பெரிய ஓட்டைக்கு அருகில் இரண்டு சிறிய ஓட்டைகளைச் செய்து வைத்தார்.
ஒருநாள் எடிசனைப் பார்ப்பதற்காக அவர் நண்பர் ஒருவர் வந்தார். கதவிலே இருந்த ஓட்டைகளைப் பார்த்தார். அதன் காரணத்தைக் கேட்டார். அதற்கு எடிசன் "நான் ஒரு பூனையை வளர்த்து வருகிறேன். அது தற்சமயம் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.நான் ஆராய்ச்சியில் ஈடுபடும்பொழுது கதவை சாத்திவிடுவது வழக்கம். பூனைகள் மட்டும் வந்து போவதற்காக ஓட்டைகளைச் செய்துள்ளேன்" என்று சொன்னார். அதற்கு அவருடைய நண்பர் "எதற்காக மூன்று ஓட்டைகள்? " என்று கேட்டார்.அதற்கு எடிசன் "பெரிய பூனை வந்து போவதற்காக பெரிய ஓட்டை. குட்டிகள் வந்து போவதற்காக இரண்டு சிறிய ஓட்டைகள்." என்று சொன்னார். அதற்கு அவருடைய நண்பர் "பெரிய ஓட்டை வழியாகவே குட்டிகளும் வந்து போகலாமே'-என்று சொன்னார். சிறிது நேரம் பேசாமலிருந்த எடிசன் தன்னுடைய அறியாமையை எண்ணி வெட்கமடைந்தார்.
அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
என்று கூறுகின்றார்." கற்றற்கு அறிய நூல்களைக் கற்றவர்களிடம் கூட சிலசமயங்களில் அறியாமை தோன்றும்" --என்பது இக்குறளின் பொருள்.
அமெரிக்காவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் மிகச்சிறந்த அறிவியல் அறிஞர் என்பதை நாம் அறிவோம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்.அவர் ஒருசமயம் பூனை ஒன்றை வளர்த்து வந்தார்.அது அவரிடம் செல்லமாக விளையாடும். எடிசன் ஆராய்ச்சியில் ஈடுபடும்பொழுது அறைக்கதவை மூடிவிடுவது வழக்கம்.அப்பொழுது பூனை வந்து போவதற்காக அறைக்கதவில் வட்டமாகத் துளையிட்டு வைத்தார். அந்த ஓட்டை வழியாக பூனை வந்து அவரிடம் சிறிது நேரம் விளையாடிவிட்டுப் பிறகு அதே ஓட்டை வழியாக வெளியே சென்றுவிடும். இது வழக்கமாக நடைபெற்று வந்தது.
சிலநாட்கள் கழித்து அப்பூனை இரண்டு குட்டிகளை ஈன்றது.அக்குட்டிகளும் தன்னுடைய அறைக்கு வந்து போவதற்காக கதவில் பெரிய ஓட்டைக்கு அருகில் இரண்டு சிறிய ஓட்டைகளைச் செய்து வைத்தார்.
ஒருநாள் எடிசனைப் பார்ப்பதற்காக அவர் நண்பர் ஒருவர் வந்தார். கதவிலே இருந்த ஓட்டைகளைப் பார்த்தார். அதன் காரணத்தைக் கேட்டார். அதற்கு எடிசன் "நான் ஒரு பூனையை வளர்த்து வருகிறேன். அது தற்சமயம் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.நான் ஆராய்ச்சியில் ஈடுபடும்பொழுது கதவை சாத்திவிடுவது வழக்கம். பூனைகள் மட்டும் வந்து போவதற்காக ஓட்டைகளைச் செய்துள்ளேன்" என்று சொன்னார். அதற்கு அவருடைய நண்பர் "எதற்காக மூன்று ஓட்டைகள்? " என்று கேட்டார்.அதற்கு எடிசன் "பெரிய பூனை வந்து போவதற்காக பெரிய ஓட்டை. குட்டிகள் வந்து போவதற்காக இரண்டு சிறிய ஓட்டைகள்." என்று சொன்னார். அதற்கு அவருடைய நண்பர் "பெரிய ஓட்டை வழியாகவே குட்டிகளும் வந்து போகலாமே'-என்று சொன்னார். சிறிது நேரம் பேசாமலிருந்த எடிசன் தன்னுடைய அறியாமையை எண்ணி வெட்கமடைந்தார்.