rambal
14-11-2003, 06:36 AM
மௌனத்தின் சரத்துக்கள்..
தனிமையில்
மௌனத்தின் சரத்துக்களை
மொழி
வாசித்துக் கொண்டிருக்கிறது..
காலக்குதிரையேறி
பிரபஞ்ச எல்லை தாண்டி
பறந்து கொண்டிருந்தவனைப்
பற்றிய செய்தி
அதில் இருந்தது..
கடிவாளமில்லாத
காலக் குதிரையாய்
மனசு
அலை பாய்ந்து..
எழுதிவிட்டுப் போனக் குறிப்புகளும்
அதில் இருந்தது..
காலபூதம் அலைக்கழித்து
கரை தட்டி நின்றதில்
சந்தோசமடைந்தது
பற்றியும்
அதில் இருந்தது..
எழுதுவதற்கு மொழி தேடி
அலைந்து
கிடைக்காது போக..
லாயத்தில் கடிவாளத்தோடு
குதிரை கட்டப்பட்டு விட்டதோடு
குறிப்புகள் முடிந்து போயிருந்தது..
பிரிந்து போன மொழியோ
திரும்பி வந்து
மௌனத்தின் சரத்துக்களை
வாசித்துக் கொண்டிருக்கிறது...
தனிமையில்
மௌனத்தின் சரத்துக்களை
மொழி
வாசித்துக் கொண்டிருக்கிறது..
காலக்குதிரையேறி
பிரபஞ்ச எல்லை தாண்டி
பறந்து கொண்டிருந்தவனைப்
பற்றிய செய்தி
அதில் இருந்தது..
கடிவாளமில்லாத
காலக் குதிரையாய்
மனசு
அலை பாய்ந்து..
எழுதிவிட்டுப் போனக் குறிப்புகளும்
அதில் இருந்தது..
காலபூதம் அலைக்கழித்து
கரை தட்டி நின்றதில்
சந்தோசமடைந்தது
பற்றியும்
அதில் இருந்தது..
எழுதுவதற்கு மொழி தேடி
அலைந்து
கிடைக்காது போக..
லாயத்தில் கடிவாளத்தோடு
குதிரை கட்டப்பட்டு விட்டதோடு
குறிப்புகள் முடிந்து போயிருந்தது..
பிரிந்து போன மொழியோ
திரும்பி வந்து
மௌனத்தின் சரத்துக்களை
வாசித்துக் கொண்டிருக்கிறது...