rambal
14-11-2003, 06:28 AM
எங்கோ சென்ற கவிதைகள்...
முகவரி தவறிய
வழிப்போக்கனாய்
வழிதவறி
எங்காவது
அலைந்து கொண்டிருக்கலாம்...
குப்பைத்தொட்டி முதல்
கூலாங்கல் வரை
எழுதியதால்
சோர்ந்து போயிருக்கலாம்..
இப்பொழுதெல்லாம்
வானம் எப்போதும் மேகமூட்டமாய்
இருப்பதால்
எங்காவது
பதுங்கியிருக்கலாம்..
அல்லது மழையில்
நனைந்து
ஜலதோசம் ஏற்பட்டு
மருத்துவரைக் காண
சென்றிருக்கலாம்...
இப்படி ஏதேனும்
ஒரு காரணம் இருக்கலாம்..
கவிதைகள் வராமல் போனதற்கு?
நான் என் செய்வது?
என்னிடம் வந்து சேரா கவிதைகளுக்கு..
முகவரி தவறிய
வழிப்போக்கனாய்
வழிதவறி
எங்காவது
அலைந்து கொண்டிருக்கலாம்...
குப்பைத்தொட்டி முதல்
கூலாங்கல் வரை
எழுதியதால்
சோர்ந்து போயிருக்கலாம்..
இப்பொழுதெல்லாம்
வானம் எப்போதும் மேகமூட்டமாய்
இருப்பதால்
எங்காவது
பதுங்கியிருக்கலாம்..
அல்லது மழையில்
நனைந்து
ஜலதோசம் ஏற்பட்டு
மருத்துவரைக் காண
சென்றிருக்கலாம்...
இப்படி ஏதேனும்
ஒரு காரணம் இருக்கலாம்..
கவிதைகள் வராமல் போனதற்கு?
நான் என் செய்வது?
என்னிடம் வந்து சேரா கவிதைகளுக்கு..