ஆதவா
29-09-2010, 06:53 AM
மொழிகளற்ற நாட்டில் பிறந்தவன்
யாராலும் சுவைக்கமுடியாத எழுத்துக்களால்
கவிதை எழுதிவிட்டு மாண்டு போனான்
அவனது மரண ரகசியம் அறியும் பொருட்டு
ரகசியம் அறிபவர்களால் மிகச் சிரமங்களுக்கிடையே
வாசிக்கப்பட்டது அக்கவிதை
ஒருவர்பின் ஒருவராக ஏதாவதொரு வழியில்
இறந்து போனார்கள்.
கவிதைக்குப் பேய் பிடித்து விட்டதாக
நம்பப்பட்டது
சில வருடங்களுக்குப் பிறகு
பாவம் நீக்குபவர்கள் சிரமேற்கொண்டு வாசித்து
சாத்தானிடமிருந்து நீங்கப்பெற்றதாகக் கூறிவிட்டு
தற்கொலை செய்து கொண்டார்கள்
கவிதைக்கு இறைமை கிடைத்துவிட்டதாக
நம்பப்பட்டது
உலகமே அதனை வாசிக்க ஆர்வமாக
எல்லா மொழிகளிலும் அச்சிடப்பட்டது
வாசித்த எல்லாருமே விதவிதமாகச் செத்தார்கள்
கவிதை ஒரு உயிர்க்கொல்லி என்று
நம்பப்பட்டது
பயந்து போன மக்கள்
அதனைப் பூட்டி வசிக்க இயலாத இடத்தில் புதைத்து
சாவியை ஏழு கடலுக்கு அப்பால் வீசியெறிந்தார்கள்
கவிதை தீண்டத்தகாத கொடியநோய் என்று
நம்பப்பட்டது
யுகங்கள் கடந்த பிறகு
வாசிக்க ஆளேயில்லாத தனிமையில்
அது தன்னைத் தானே வாசித்து
திடீரென மறைந்து போனது
கவிதை இறைவனின் குறியீடு என்று நம்பப்பட்டு
இன்று எல்லோராலும் வணங்கப்படுகிறது...
யாராலும் சுவைக்கமுடியாத எழுத்துக்களால்
கவிதை எழுதிவிட்டு மாண்டு போனான்
அவனது மரண ரகசியம் அறியும் பொருட்டு
ரகசியம் அறிபவர்களால் மிகச் சிரமங்களுக்கிடையே
வாசிக்கப்பட்டது அக்கவிதை
ஒருவர்பின் ஒருவராக ஏதாவதொரு வழியில்
இறந்து போனார்கள்.
கவிதைக்குப் பேய் பிடித்து விட்டதாக
நம்பப்பட்டது
சில வருடங்களுக்குப் பிறகு
பாவம் நீக்குபவர்கள் சிரமேற்கொண்டு வாசித்து
சாத்தானிடமிருந்து நீங்கப்பெற்றதாகக் கூறிவிட்டு
தற்கொலை செய்து கொண்டார்கள்
கவிதைக்கு இறைமை கிடைத்துவிட்டதாக
நம்பப்பட்டது
உலகமே அதனை வாசிக்க ஆர்வமாக
எல்லா மொழிகளிலும் அச்சிடப்பட்டது
வாசித்த எல்லாருமே விதவிதமாகச் செத்தார்கள்
கவிதை ஒரு உயிர்க்கொல்லி என்று
நம்பப்பட்டது
பயந்து போன மக்கள்
அதனைப் பூட்டி வசிக்க இயலாத இடத்தில் புதைத்து
சாவியை ஏழு கடலுக்கு அப்பால் வீசியெறிந்தார்கள்
கவிதை தீண்டத்தகாத கொடியநோய் என்று
நம்பப்பட்டது
யுகங்கள் கடந்த பிறகு
வாசிக்க ஆளேயில்லாத தனிமையில்
அது தன்னைத் தானே வாசித்து
திடீரென மறைந்து போனது
கவிதை இறைவனின் குறியீடு என்று நம்பப்பட்டு
இன்று எல்லோராலும் வணங்கப்படுகிறது...