சசிதரன்
28-09-2010, 04:24 PM
சாலைகள் எப்பொழுதும் அவனுக்குப்
புதிராகவே இருந்தன.
அவன் வாசலிலிருந்து தொடங்கும் ஒரு சாலையைத்
தனக்கென உருவாக்கினான்.
யாதொரு இணைப்புமற்ற அந்த ஒரு சாலையை மட்டுமே
அவன் போவதற்கும் வருவதற்கும் பயன்படுத்தினான்.
அதன் இருபுறமும் கிடைப்பதற்கரிய
பூச்செடிகளைப் பதியமிட்டான்.
பூக்களின் சாலை தொடங்கும்
வாசல் கொண்டதானது அவன் வீடு.
நகரம் முழுக்க பரவத் தொடங்கியது
அப்பூக்களின் வாசம்.
மெல்ல மெல்ல அனைவரும்
அவ்வழியே கடக்கத் தொடங்கினர்.
அனைவரின் சாலைகளும்
அச்சாலையில் இணைக்கப்பட்டன.
அவன் தடுமாறத் தொடங்கினான்.
ஒவ்வொரு நாளும் சாலைகளின் எண்ணிக்கை
கூடிக் கொண்டே இருந்தது.
தன் வாசலை இணைக்கும் சாலையைக்
கண்டுபிடிக்க முடியாமல் அவன் தோற்ற ஓர் நாளில்
பூக்களின் சாலை தொடங்கும்
வாசல் கொண்ட வீடு
ஆளின்றிப் போனது.
புதிராகவே இருந்தன.
அவன் வாசலிலிருந்து தொடங்கும் ஒரு சாலையைத்
தனக்கென உருவாக்கினான்.
யாதொரு இணைப்புமற்ற அந்த ஒரு சாலையை மட்டுமே
அவன் போவதற்கும் வருவதற்கும் பயன்படுத்தினான்.
அதன் இருபுறமும் கிடைப்பதற்கரிய
பூச்செடிகளைப் பதியமிட்டான்.
பூக்களின் சாலை தொடங்கும்
வாசல் கொண்டதானது அவன் வீடு.
நகரம் முழுக்க பரவத் தொடங்கியது
அப்பூக்களின் வாசம்.
மெல்ல மெல்ல அனைவரும்
அவ்வழியே கடக்கத் தொடங்கினர்.
அனைவரின் சாலைகளும்
அச்சாலையில் இணைக்கப்பட்டன.
அவன் தடுமாறத் தொடங்கினான்.
ஒவ்வொரு நாளும் சாலைகளின் எண்ணிக்கை
கூடிக் கொண்டே இருந்தது.
தன் வாசலை இணைக்கும் சாலையைக்
கண்டுபிடிக்க முடியாமல் அவன் தோற்ற ஓர் நாளில்
பூக்களின் சாலை தொடங்கும்
வாசல் கொண்ட வீடு
ஆளின்றிப் போனது.