kulirthazhal
28-09-2010, 12:14 PM
பாதைமீது கவனமின்றி
நானும் நடந்துகொண்டிருந்தேன்
அவனோடு...
அங்கே
ஆசைகள்
சங்கீதம் இசைக்கவில்லை..,
பார்வைகள்
எதையும் ரசிக்கவில்லை..,
அவன் மொழிதனுக்கு
எவருக்கும்
அர்த்தம் விளங்கவில்லை...,
அவனின்
ராகங்களும்,
தேடலும்,
எவரையும் வசீகரிக்கவில்லை...,
அவன்
பாடிக்கொண்டே
நடந்தான்
எப்போதும் போல....,
குப்பைகளை பார்த்தபடி.
இன்று
ஏனோ தோன்றியது,
அவன்
உலக பைத்தியக்காரத்தனங்களை
சபித்துக்கொண்டிருக்கிறானென்று....
சில
தருணங்களுக்கு முன்
என்னை
புரிந்துகொள்ளாத கூட்டத்தை
பார்த்தேன்
மிக அருகாமையில்....
-குளிர்தழல்
நானும் நடந்துகொண்டிருந்தேன்
அவனோடு...
அங்கே
ஆசைகள்
சங்கீதம் இசைக்கவில்லை..,
பார்வைகள்
எதையும் ரசிக்கவில்லை..,
அவன் மொழிதனுக்கு
எவருக்கும்
அர்த்தம் விளங்கவில்லை...,
அவனின்
ராகங்களும்,
தேடலும்,
எவரையும் வசீகரிக்கவில்லை...,
அவன்
பாடிக்கொண்டே
நடந்தான்
எப்போதும் போல....,
குப்பைகளை பார்த்தபடி.
இன்று
ஏனோ தோன்றியது,
அவன்
உலக பைத்தியக்காரத்தனங்களை
சபித்துக்கொண்டிருக்கிறானென்று....
சில
தருணங்களுக்கு முன்
என்னை
புரிந்துகொள்ளாத கூட்டத்தை
பார்த்தேன்
மிக அருகாமையில்....
-குளிர்தழல்