சொ.ஞானசம்பந்தன்
27-09-2010, 10:54 AM
புதிய அக்கறைகள் உருவாகும்போது மொழி வழக்கும் அதற்கேற்ப மாறுபடுகின்றது.எடுத்துக்காட்டாகப் பெண்களையும் மாற்றுத்திறனாளிகளையும் குறிப்பிட்ட சாதிகளையும் இழிவுபடுத்தும் பழமொழிகளையும் மரபு தொடர்களையும் இன்று நாம் தவிர்க்கிறோம்.இத் தகைய மாற்றம் அப் புதிய அக்கறைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பரவ உதவுகின்றது. அது போலவே விலங்குகளையும் பறவைகளையும் காட்டையும் பற்றிப் பேசும்போதும் கவனமாக இருக்கின்றோமா? ஊடகங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் சொற்றொடர்கள் காட்டுயிர் பேணலுக்கு இயைந்து இருக்கின்றனவா? காட்டு தர்பார், நரி புத்தி, ஆமை புகுநத வீடு,கொடிய விலங்குகள் முதலிய பதங்களை இன்னமும் பயன்படுத்தலாமா?ஊடக மொழியை வடிகட்டிப் புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஏர்க்காட்டிற்குள் ஒரு காப்பித் தோட்டத்துக்கு அருகே இரு யானைகள் வந்ததைப் பற்றிப் பல நாளிதழ்கள் “யானையின் அட்டகாசம்” என்று எழுதியபோது ஒரு சஞ்சிகை மட்டும் “வாழிடம் தேடும் யானைகள்” என்று தலைப்பிட்டுப் புதிய நோக்கை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.
காட்டுயிர் இதழாசிரியர் முகமது அலி நெருப்புக் குழியில் குருவி என்ற நூலில் இதழ்கள் மட்டுமல்ல பெருவாரியான தமிழ் எழுத்தாளர்களும் காட்டுயிர்களுக்கு எதிரான குரலிலேயே எழுதுகிறார்கள் என்கிறார். பல எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார். இன்றுங் கூட சில இதழ்களில் “கொடிய வன விலங்குகள்” என்ற சொற்றொடரைக் காணலாம்.அண்மையில் ஒரு அரசியல் தலைவர் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே சிறுத்தை ஒன்று சென்றதைத்” தலைவர் மயிரிழையில் உயிர் தப்பினார்” என்று தலைப்பிட்டு ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது, தப்பியது என்னவோ சிறுத்தைதான் என்றாலும்.
நூல்: இன்னும் பிறக்காத தலைமுறைக்காக.பக்-42.
ஆசிரியர்: சு.தியடோர் பாஸ்கரன்.
காட்டுயிர் இதழாசிரியர் முகமது அலி நெருப்புக் குழியில் குருவி என்ற நூலில் இதழ்கள் மட்டுமல்ல பெருவாரியான தமிழ் எழுத்தாளர்களும் காட்டுயிர்களுக்கு எதிரான குரலிலேயே எழுதுகிறார்கள் என்கிறார். பல எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார். இன்றுங் கூட சில இதழ்களில் “கொடிய வன விலங்குகள்” என்ற சொற்றொடரைக் காணலாம்.அண்மையில் ஒரு அரசியல் தலைவர் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே சிறுத்தை ஒன்று சென்றதைத்” தலைவர் மயிரிழையில் உயிர் தப்பினார்” என்று தலைப்பிட்டு ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது, தப்பியது என்னவோ சிறுத்தைதான் என்றாலும்.
நூல்: இன்னும் பிறக்காத தலைமுறைக்காக.பக்-42.
ஆசிரியர்: சு.தியடோர் பாஸ்கரன்.