சசிதரன்
24-09-2010, 04:34 PM
நிச்சயம் ஒரு நாள்
அந்த இரவு வரும்.
நட்சத்திரங்களை ரசிக்க பிடிக்காமல்
அதன் வெப்பத்தில் உடல் கருகும் ஓர் இரவு.
கனவின் போர்வையை கிழித்தெறிந்து
இருள் பருகி விழித்திருக்கும் ஓர் இரவு.
அத்தனை முகமூடிகளையும் கழற்றி வைத்து
சுயம் கரைய அழும் ஓர் இரவு.
அந்த ஒரு இரவு உங்களுக்கு தரலாம்...
நிச்சயமற்ற தருணங்களின் பிரமிப்பை..
உங்கள் முகமூடிகளின் எண்ணிக்கை குறித்த பயத்தை..
பருக பருக மயக்கம் தரும் இருளின் போதையை..
இல்லாதிருத்தல் குறித்த உணர்வை...
பின் ஒரு தருணத்தில்
விடியவே விடியாத ஓர் இரவாகவும்
அது மாறிவிடும் சாத்தியமுண்டு.
கவனமாக இருங்கள்...
அது இன்றைய இரவாகவும் இருக்கலாம்.
அந்த இரவு வரும்.
நட்சத்திரங்களை ரசிக்க பிடிக்காமல்
அதன் வெப்பத்தில் உடல் கருகும் ஓர் இரவு.
கனவின் போர்வையை கிழித்தெறிந்து
இருள் பருகி விழித்திருக்கும் ஓர் இரவு.
அத்தனை முகமூடிகளையும் கழற்றி வைத்து
சுயம் கரைய அழும் ஓர் இரவு.
அந்த ஒரு இரவு உங்களுக்கு தரலாம்...
நிச்சயமற்ற தருணங்களின் பிரமிப்பை..
உங்கள் முகமூடிகளின் எண்ணிக்கை குறித்த பயத்தை..
பருக பருக மயக்கம் தரும் இருளின் போதையை..
இல்லாதிருத்தல் குறித்த உணர்வை...
பின் ஒரு தருணத்தில்
விடியவே விடியாத ஓர் இரவாகவும்
அது மாறிவிடும் சாத்தியமுண்டு.
கவனமாக இருங்கள்...
அது இன்றைய இரவாகவும் இருக்கலாம்.