PDA

View Full Version : வாழ்க்கைப் பாதையில்



Nivas.T
24-09-2010, 08:14 AM
வாழ்க்கைப் பாதையில்
எத்தனையோ சுவாரசியம்
நொடிக்கு நொடி ஆச்சர்யம்
எத்தனைத் தோல்விகள்
எத்தனைத் தடைகள்
எத்தனை எத்தனை வெற்றிகள்
எவ்வளவு இழிச்சொற்கள்
எப்படிப்பட்ட கேவலப் பார்வைகள்
தூற்றல்கள்
வன்சொற்கள்

இவையனைத்தையும் கடந்த பிறகும்
தெளிந்த பிறகும்
அடர்ந்தக் காட்டில்
விழும் பூப்போல்
கடலில் விழும்
ஒருதுளி நீர் போல்
மனதில் எங்கோ
ஒரு மூலையில்
ஒரு சிறு அழுத்தம்
இல்லை வருத்தம்
இல்லை இல்லை குறை
இம்ஹும் அதுவுமில்லை
நிறைவேராத ஒரு ஆசை
இன்னும் சரியாகச் சொல்லமுடியவில்லை

பேனாமுனை பந்துபோல்
ஒரு சிறு உறுத்தல் இன்னும்
உருண்டுகொண்டுதான் இருக்கிறது.

வேலை பளுவா?
அது நமக்கு கைவந்தக் கலைதான்
அதையும் ஊதியகிவிட்டது.

காதலா?
மூன்றுவருடமாக மூடிவைத்ததை
துப்பியகிவிட்டது.
இன்னும் அந்த உறுத்தல்
மறைந்தபாடில்லை
அது என்னவென்றும்
நான் அறிந்தபாடில்லை.

என்ன செய்ய நான்
ஐயோ தலை வெடித்துவிடும் போல் உள்ளதே
ஒருவேளை
நண்பன் புது வண்டி வாங்கினானே?
அதுவா கிடையாது கிடையாது
பொறாமை படும் பழக்கம் நமக்கில்லை
அப்படி என்றால் வேறென்ன?

புது வீடு கட்டிவிட்டேன்
வங்கியில் பணம் தேவைக்கு உள்ளது
சேமித்து விட்டேன்
வழக்கமாய் வீட்டுக்கு அனுப்பும்
பணத்தையும் அனுப்பிவிட்டேன்
இல்லை இல்லை
இது எதுவும் இல்லை
அது வேறு, அது இவையெதுவும் இல்லை.

அந்த உறுத்தல் இன்னும்
என்னை விட்டபாடில்லை
ஐயோ எனக்கு
பைத்தியம் பிடித்துவிடும்போல் உள்ளதே
ஒன்றுமே புரியவில்லை
என்ன இது இப்படி
என்னை வதைக்கிறதே

ஆ..... கண்டுபிடித்துவிட்டேன்.......
கண்டுபிடித்துவிட்டேன்.....

மன்றத்தில் பதிப்பிட ஒன்றுமே கிடைக்கவில்லை........
அதுதான் இது

அப்பாடி................................

பிரேம்
24-09-2010, 10:55 AM
நலம்..

Nivas.T
24-09-2010, 04:34 PM
நன்றி பிரேம் :)

அனுராகவன்
25-09-2010, 06:37 PM
வாழ்க்கைப் பாதையில் ஆயிரம் இருக்கும்..
அதை தாண்டி செல்லனும்..
அருமை ..கிறுக்கினாலும் நல்லாதான் இருக்கு.
தொடருங்க..

Nivas.T
26-09-2010, 09:05 AM
வாழ்க்கைப் பாதையில் ஆயிரம் இருக்கும்..
அதை தாண்டி செல்லனும்..
அருமை ..கிறுக்கினாலும் நல்லாதான் இருக்கு.
தொடருங்க..


:D:D:D

பிரேம்
19-02-2011, 11:10 AM
"அந்த உறுத்தல் இன்னும்
என்னை விட்டபாடில்லை
ஐயோ எனக்கு
பைத்தியம் பிடித்துவிடும்போல் உள்ளதே
ஒன்றுமே புரியவில்லை
என்ன இது இப்படி
என்னை வதைக்கிறதே

ஆ..... கண்டுபிடித்துவிட்டேன்.......
கண்டுபிடித்துவிட்டேன்.....

உங்களை அடிக்க கையில் ஒன்றுமே கிடைக்கவில்லை........
அதுதான் இது..

:violent-smiley-010:

அப்பாடி................................

ராஜாராம்
19-02-2011, 11:30 AM
நல்லா இருக்கு நிவாஸ்,...இயல்பான ஒரு சங்கதித்தான்...ஆனால் அதை வெளிப்படுத்தியவிதம்,அருமை.

பிரேம் அடிக்கவந்தால் பயப்படாதீங்க...நிவாஸ்..
நாமெல்லாம் கைப்புள்ள பரம்பரை ....மன்னிக்கவும்...நாமெல்லாம் கட்டபொம்மன் பரம்பரை...

Nivas.T
19-02-2011, 11:44 AM
"அந்த உறுத்தல் இன்னும்
என்னை விட்டபாடில்லை
ஐயோ எனக்கு
பைத்தியம் பிடித்துவிடும்போல் உள்ளதே
ஒன்றுமே புரியவில்லை
என்ன இது இப்படி
என்னை வதைக்கிறதே

ஆ..... கண்டுபிடித்துவிட்டேன்.......
கண்டுபிடித்துவிட்டேன்.....

உங்களை அடிக்க கையில் ஒன்றுமே கிடைக்கவில்லை........
அதுதான் இது..

:violent-smiley-010:

அப்பாடி................................

ஹி..ஹி....இத இத இததான் எதிர்ப்பார்த்தேன் :lachen001::D:wuerg019:

Nivas.T
19-02-2011, 11:46 AM
நல்லா இருக்கு நிவாஸ்,...இயல்பான ஒரு சங்கதித்தான்...ஆனால் அதை வெளிப்படுத்தியவிதம்,அருமை.

பிரேம் அடிக்கவந்தால் பயப்படாதீங்க...நிவாஸ்..
நாமெல்லாம் கைப்புள்ள பரம்பரை ....மன்னிக்கவும்...நாமெல்லாம் கட்டபொம்மன் பரம்பரை...

நன்றி ராரா

எவ்வளவோ பாத்துட்டோம்
இதப் பாக்க மாட்டோமா

உமாமீனா
20-02-2011, 04:43 AM
அருமை


இப்படி எல்லாமா யோசிப்பிகே... :waffen093::violent-smiley-004:

ஜானகி
20-02-2011, 04:47 AM
கவிதைப் போட்டிக்குப் போகவேண்டிய கவிதை தவறாக இங்கே பதிவாகிவிட்டதோ..,?

Nivas.T
20-02-2011, 05:19 AM
அருமை


இப்படி எல்லாமா யோசிப்பிகே... :waffen093::violent-smiley-004:

மிக்க நன்றி
உமாமீனா

ஏன் இந்த கொலைவெறி..... :eek::eek::D

Nivas.T
20-02-2011, 05:22 AM
கவிதைப் போட்டிக்குப் போகவேண்டிய கவிதை தவறாக இங்கே பதிவாகிவிட்டதோ..,?

:sprachlos020::rolleyes: மிக்க நன்றி ஜானகி :D:D