அகத்தியன்
14-09-2010, 05:18 AM
தொலைபேசிகள் மௌனிக்கும் போது
எனக்குள் சில திணுக்கிடல்கள் ஏற்படுகின்றன.
கவலைகள் சூழ்கின்றன.
ஒரு குழந்தை போல அதை வெறித்தவாறு நிற்கின்றேன்.
இதோ எனக்கான அழைப்பு வருகின்றது என்ற பிரமையுடன்.
ஆனால் அது மௌனித்தவாறே இருக்கின்றது.
நீண்ட மௌனம் எனக்கும் என் தொலைபேசிக்கும்
அதன் வெற்றி பற்றி எப்போதும் கவலை கொள்கின்றேன்.
ஆனாலும் அது நிகழவில்லை.
அறையில் நானும் என் தொலைபேசியும் மௌனமும்
வேறு எந்த பிரசன்ன்ஙகளினையும் நாங்கள் விரும்பவில்லை.
என் காத்திருப்பு நீண்டே போகின்றது.
ஆனாலும் அது முடிவதாக இல்லை.
எனக்குள் சில திணுக்கிடல்கள் ஏற்படுகின்றன.
கவலைகள் சூழ்கின்றன.
ஒரு குழந்தை போல அதை வெறித்தவாறு நிற்கின்றேன்.
இதோ எனக்கான அழைப்பு வருகின்றது என்ற பிரமையுடன்.
ஆனால் அது மௌனித்தவாறே இருக்கின்றது.
நீண்ட மௌனம் எனக்கும் என் தொலைபேசிக்கும்
அதன் வெற்றி பற்றி எப்போதும் கவலை கொள்கின்றேன்.
ஆனாலும் அது நிகழவில்லை.
அறையில் நானும் என் தொலைபேசியும் மௌனமும்
வேறு எந்த பிரசன்ன்ஙகளினையும் நாங்கள் விரும்பவில்லை.
என் காத்திருப்பு நீண்டே போகின்றது.
ஆனாலும் அது முடிவதாக இல்லை.