PDA

View Full Version : நிழல்களின் இடைவெளியில்...



kulirthazhal
13-09-2010, 04:30 AM
தூரக்காதலின்
நிழல்கள்.,
இடைவேளிஎல்லாம்
பைத்திய சத்தம்.,
நிதானம் தொலைத்த
நொடியலைகள்....

நிறங்கள்.,
கருமை.,
வெளிச்சம்.,
சலனம்.,
விழிகள்
கலங்குவது எதனாலோ...

ஒவ்வொன்றாய்
தெரிகிறது
உன்னில்...
அழகான
பதட்டங்கள்.,
இயல்பான
தவறுகள்.,
மொழி மறந்த
வார்த்தைகள்.,
ஓய்வறுந்த
விழிஓட்டம்.,

தொலைவென்று ஏதுமில்லை
அறிவளந்த ஆதாரம்...
இயலாமை
மனம்மோதி
தலைசாயும் சோகம்,.
எதனாலோ! எதனாலோ!

விழிமூடி
வெளிச்சம் தொலைத்தும்.,
செவி மூடி
ஓசை மறைத்தும்.,
வீரம் தேக்கி
சுற்றம் மறந்தும்,.
வீணாய் போனதெல்லாம்.,
நீயே
எனக்கு துன்பம்...

இனியும் அழுத்த
இடமில்லை இதயத்தில்.,
அழகாய் அழுதும்,
அசடாய் சிரித்தும்,
மீண்டுவர ஏதுமில்லை..
சித்தம் சொல்ல
சிலது கேட்க,
மட்கிப்போனது வழக்கம்...

நான் என்ன செய்யட்டும்,
நீ
நெருங்குவதும் இல்லை,
தொலைவதும் இல்லை,

இறைவன் உந்தன்
கனவில் வரட்டும்.,
நெருங்கிப்பேச
வரங்கள் தரட்டும்,.
வேறெதுவும்
தோன்றவில்லை
வேண்டிக்கேட்க.........

-குளிர்தழல்.