கலையரசி
03-09-2010, 02:51 PM
உமாவிற்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் சேர்ந்த பிறகு, வீட்டின் நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது.
மனைவிக்கு ’மைல்ட் ஹார்ட் அட்டாக்’ என்று தெரிந்த போது ஆடித்தான் போய் விட்டான் எதற்கும் கலங்காத கணபதி.
குக்கரில் வேக வைத்த சாதம் அவனுக்குப் பிடிக்காது. கஞ்சி வடிக்கப்பட்ட சாதம் தான் வேண்டும். காலை நேர டென்ஷனில் சிலசமயம் கையில் கஞ்சிக் கொட்டிக் கொண்டு நின்ற மனைவியைப் பார்த்து ஒரு நாள் கூட அவன் பரிதாபப் பட்டதில்லை.
“சாதம் வடிக்கக் கூடத் தெரியலை; என்ன வளர்த்திருக்காங்க ஒங்க வீட்டுல?” என்பான் கேலியாக.
என்றாவது பதம் தவறி, சாதம் குழைந்து போனாலோ கோபம் தலைக்கேறிவிடும். மாவு அரைத்து பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது அவனது கண்டிப்பான உத்தரவு. தினந்தினம் புதிதாக அரைத்துத் தான் இட்லி ஊற்ற வேண்டும்.
குழந்தைகளைப் பாட்டு வகுப்புக்குக் கொண்டு விடச்சொல்லி மனைவி கேட்ட போது, “வண்டி ஓட்டக் கத்துக்கோ” என்று சொல்லி ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்து விட்டு அந்த வேலையிலிருந்து கழன்று கொண்டான்.
“வேலைக்கும் போய்க்கிட்டு வீட்டையும் கவனிக்க முடியல. கொஞ்சம் ஒத்தாசை பண்ணக் கூடாதா?” என்று அவள் புலம்பும் போதெல்லாம், “உன்னை யார் வேலைக்குப் போகச் சொன்னது? வெணுமின்னா வேலையை விட்டுடு,” என்பான் விட்டேற்றியாக.
குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லையென்றாலும் அவளுக்குத் தான் திட்டு விழும். குழந்தைங்க படிக்கிறதைக் கூடக் கவனிக்காம, அப்படி என்ன வெட்டி முறிக்கிறே?’ என்பான் கோபத்தோடு.
மனைவி படுத்த படுக்கையான பிறகு வேறு வழியின்றி சமையலைக் கற்றுக் கொள்ளத் துவங்கியவன், முதல் வேலையாக அரிசி குக்கர் வாங்கி வந்தான். கடையில் விற்கும் மாவு வாங்கி வந்து இட்லி ஊற்றினான்.
குழந்தைகளுக்கு டியூஷன் ஏற்பாடு பண்ணியவன், பெண் குழந்தையின் முடியைக் குறைத்து ‘பாப்’ வெட்டி விட்டான்.
படிக்க நேரமில்லாததால், பத்திரிக்கைகளை நிறுத்த வேண்டியதாயிற்று.
முதன் முறையாக ரசம் செய்து பரிமாறிய போது,
”சே! இது அம்மா வைக்கிற ரசம் மாதிரியில்ல” என்று கோபத்தோடு தட்டை நகர்த்தி விட்டான் பையன்.
“எவ்ளோ கொழுப்பு இருந்தா தட்டை நகர்த்தி விடுவே? ஒண்டியா கஷ்டப்பட்டு வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன். அவ்ளோ நாக்கு ருசி கேக்குதா?” என்றபடி பையன் கன்னத்தில் தன் விரல்கள் பதியும்படியாக அறை விட்டான் கணபதி.
“நீங்க மட்டும் எத்தினி நாள் சாப்பாடு சரியில்லேன்னு தட்டைத் தூக்கி அடிச்சிருக்கீங்க. அம்மா பாவம்.....உங்களால தான் ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டாங்க...”
மகன் தேம்பிக் கொண்டே சொன்ன வார்த்தைகளிலிருந்த உண்மை அவனை நெருப்பாய்ச் சுட்டது.
(20.07.2008 தினமணிக்கதிரில் ஒரு பக்கக் கதை பகுதியில் எழுதியது)
மனைவிக்கு ’மைல்ட் ஹார்ட் அட்டாக்’ என்று தெரிந்த போது ஆடித்தான் போய் விட்டான் எதற்கும் கலங்காத கணபதி.
குக்கரில் வேக வைத்த சாதம் அவனுக்குப் பிடிக்காது. கஞ்சி வடிக்கப்பட்ட சாதம் தான் வேண்டும். காலை நேர டென்ஷனில் சிலசமயம் கையில் கஞ்சிக் கொட்டிக் கொண்டு நின்ற மனைவியைப் பார்த்து ஒரு நாள் கூட அவன் பரிதாபப் பட்டதில்லை.
“சாதம் வடிக்கக் கூடத் தெரியலை; என்ன வளர்த்திருக்காங்க ஒங்க வீட்டுல?” என்பான் கேலியாக.
என்றாவது பதம் தவறி, சாதம் குழைந்து போனாலோ கோபம் தலைக்கேறிவிடும். மாவு அரைத்து பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது அவனது கண்டிப்பான உத்தரவு. தினந்தினம் புதிதாக அரைத்துத் தான் இட்லி ஊற்ற வேண்டும்.
குழந்தைகளைப் பாட்டு வகுப்புக்குக் கொண்டு விடச்சொல்லி மனைவி கேட்ட போது, “வண்டி ஓட்டக் கத்துக்கோ” என்று சொல்லி ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்து விட்டு அந்த வேலையிலிருந்து கழன்று கொண்டான்.
“வேலைக்கும் போய்க்கிட்டு வீட்டையும் கவனிக்க முடியல. கொஞ்சம் ஒத்தாசை பண்ணக் கூடாதா?” என்று அவள் புலம்பும் போதெல்லாம், “உன்னை யார் வேலைக்குப் போகச் சொன்னது? வெணுமின்னா வேலையை விட்டுடு,” என்பான் விட்டேற்றியாக.
குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லையென்றாலும் அவளுக்குத் தான் திட்டு விழும். குழந்தைங்க படிக்கிறதைக் கூடக் கவனிக்காம, அப்படி என்ன வெட்டி முறிக்கிறே?’ என்பான் கோபத்தோடு.
மனைவி படுத்த படுக்கையான பிறகு வேறு வழியின்றி சமையலைக் கற்றுக் கொள்ளத் துவங்கியவன், முதல் வேலையாக அரிசி குக்கர் வாங்கி வந்தான். கடையில் விற்கும் மாவு வாங்கி வந்து இட்லி ஊற்றினான்.
குழந்தைகளுக்கு டியூஷன் ஏற்பாடு பண்ணியவன், பெண் குழந்தையின் முடியைக் குறைத்து ‘பாப்’ வெட்டி விட்டான்.
படிக்க நேரமில்லாததால், பத்திரிக்கைகளை நிறுத்த வேண்டியதாயிற்று.
முதன் முறையாக ரசம் செய்து பரிமாறிய போது,
”சே! இது அம்மா வைக்கிற ரசம் மாதிரியில்ல” என்று கோபத்தோடு தட்டை நகர்த்தி விட்டான் பையன்.
“எவ்ளோ கொழுப்பு இருந்தா தட்டை நகர்த்தி விடுவே? ஒண்டியா கஷ்டப்பட்டு வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன். அவ்ளோ நாக்கு ருசி கேக்குதா?” என்றபடி பையன் கன்னத்தில் தன் விரல்கள் பதியும்படியாக அறை விட்டான் கணபதி.
“நீங்க மட்டும் எத்தினி நாள் சாப்பாடு சரியில்லேன்னு தட்டைத் தூக்கி அடிச்சிருக்கீங்க. அம்மா பாவம்.....உங்களால தான் ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டாங்க...”
மகன் தேம்பிக் கொண்டே சொன்ன வார்த்தைகளிலிருந்த உண்மை அவனை நெருப்பாய்ச் சுட்டது.
(20.07.2008 தினமணிக்கதிரில் ஒரு பக்கக் கதை பகுதியில் எழுதியது)