சிவா.ஜி
02-09-2010, 04:35 PM
இரவு இரண்டு மணிக்கு அந்த செய்தியை சொல்லக் கமலா வீட்டுக்கு வந்திருந்தார்கள்.மூன்று மைல் தூரத்தில் இருக்கும் கிராமத்திலிருந்து, இந்த டவுனுக்கு துக்க செய்தி கொண்டுவந்தவர்கள், அவர்களை தூக்கக்கலக்கத்தோடு ஏறிட்ட கமலாவுக்கு கொழுந்தன் மகன்கள்.
“நைனா இல்லியா பெரிம்மா..சின்னப் பாட்டி செத்துடிச்சி...”
பெரிதாக எந்த அதிர்ச்சியையும் காட்டாமல்..எதிர்பார்த்த செய்திதான்...இருந்தாலும் இந்த வேளைகெட்ட வேளையில் எதிர்பார்க்கவில்லையென்பதை மிகச் சிறிய எரிச்சலைக் காட்டிக்கொண்டே கேட்டாள்.
“எப்ப?”
“எப்போன்னு தெரியில....ராத்திரி ஏழு மணிக்கெல்லாம் களியத் திண்ணுட்டு நாகன் வூட்டுக்கு வெளியிலத்தான் படுத்திருக்கு...ராத்திரி கொல்லைக்குப் போறதுக்கு எழுந்த நாகன் வூட்டுக்காரி பாத்துட்டுதான் சொல்லியிருக்கா....அவன் நேரா எங்க வூட்டாண்ட வந்து உங்க பாட்டிய தூக்கினு போங்கடான்னு கத்துனான். நானும் வடிவேலனும்தான் போய் தூக்கினு வந்து வூட்டாண்ட போட்டுனுக்குறோம்...நீ வா பெரிம்மா...பொணத்த வூட்ல போட்டுக்குனு ஒண்டியா இருக்குறதுக்கு பயமாக்குது...போய் பெரிம்மாவ இட்னு வாங்கடான்னு அம்மாதான் சொல்லுச்சி...”
“என்னாடா ரோதனையாக்குது...இந்தக் கெளவிக்கு சாவுறதுக்கு நடுக்கூறுதான் கெடைச்சுதா..உங்க பெரிப்பா வேற டூட்டிக்கு போய்ட்டுக்குது....சரி ஒக்காருங்க வரன்.”
அவிழ்ந்த கூந்தலை முடித்துக்கொண்டே கூடத்தில் படுத்திருந்த தன் மகளை எழுப்பினாள்.
“சுதா...சுதா...எழ்றி...பொட்டப்புள்ள...தொட்டாலே பொசுக்குன்னு எழுந்துக்கத்தாவல...எப்புடி உன் மாமியாக்காரிக்கிட்ட...பேச்சு வாங்காம பொயப்பு நடத்தினுக்கீறியோ...புள்ளையப் பாரு...ஒடம்பு சரியில்லாத புள்ள, ஒண்ணுக்கு போய்ட்டு ஈரத்துலயே கெடக்குது..”
“யாம்மா...என்னாத்துக்கு இந்தக் கூசல் போடற...பொழுது விடிஞ்சிடுச்சா...?”
குழந்தையின் ஈரத்துணியை இழுத்துக்கொண்டேக் கேட்டாள்.
“விடிஞ்ச மாதிரிதான்...உங்க சின்னப்பாட்டி செத்துப்போயிட்டாளாம்...உங்க சித்தப்பன் வூட்லதான் போட்டு வெச்சிக்கிறாங்களாம்...நான் முருகன்கூட போறேன். காத்தால நைனா வந்ததும் சொல்லிக் கூட்டுக்குனு வா”
சுதாவின் நைனா...பக்கத்திலிருக்கும் பால்பண்ணையில் இரவுக்காவலாளியாக இருக்கிறார். முன்னாள் இராணுவவீரர். இறந்துப்போனதாக முருகன் சொன்ன சின்னப்பாட்டிக்கு குழந்தைகள் எதுவுமில்லாமல், முருகனின் அப்பாவைத்தான் தனக்குக் கொள்ளிபோட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு தனக்கிருந்த அரை ஏக்கர் நிலத்தை அவருக்கே எழுதிக் கொடுத்துவிட்டார்.ஆனால்..அவர் கையால் கொள்ளி வாங்க கொடுத்துவைக்காமல் இந்த 90 வயதுவரைக்கும் வாழ்ந்துகொண்டிருந்தார். சின்ன வயதிலேயே கணவர் இறந்துவிட்டார். அந்த கிராமத்திலிருந்த மாந்தோப்புகளுக்குக் காவல் இருந்துகொண்டு அங்கேயே சின்னக் குடிசை போட்டுக்கொண்டு இருந்தார். இருந்த சின்ன குடிசையும், மாந்தோப்புகள் வீட்டுமனைகளாக்கப்பட்டதும், இல்லாமல் போனது. பதினைந்து வருடங்களாக ஒவ்வொரு உறவினர் வீட்டிலும் கொஞ்சக் காலம் என்று வாழ்ந்து...இன்று அதையும் முடித்துக்கொண்டார்.
கமலா அங்கு போய் சேர்ந்தபோது, இன்னும் சில பெண்கள் வந்துவிட்டிருந்தார்கள். முருகனின் அப்பாவுடைய வேட்டியை ஒரு பாயின் மேல் விரித்து பாட்டியை கிடத்தியிருந்தார்கள். விடிய விடியவே அந்த வீடு சாவு வீட்டின் அரிதாரத்தை பூசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. பெரும்பாலும் உறவுக்காரர்களே அக்கம்பக்கத்தில் வசித்து வந்ததால்...செய்திக் கேட்டதும்...வீட்டுப்பெண்களெல்லாம் வரத்தொடங்கிவிட்டார்கள். கண்ணீரே வராத வெறும் அழுகைச் சத்தமும், சம்பிரதாய மூக்கு சிந்தல்களும் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. ஒரு அனாதைக் கிழவியின் பரிதாபச் சாவின் பரிமாணம் தெரியத்தொடங்கியது....
மாலையோடும், ஊதுபத்திகளோடும் வந்த கமலாவின் கணவர் பெருமாள், இரவுப்பணிக்குப் பிறகான இன்றைய தூக்கம் போன எரிச்சலில் கண்கள் சிவக்க, மாலையைப் போட்டுவிட்டு, தன் தம்பி மகன்களை அருகில் அழைத்தார்.
“மோளம் அடிக்கிறவனுக்கு சொல்லி வுட்டீங்களா?”
“எல்லாம் நீ வந்ததுக்கப்பறமா சொல்லிக்கலான்னு அம்மா சொல்லிச்சி நைனா”
“ஏன்...எல்லாத்தையும் என்னக் கேட்டுக்கிட்டுதான் செய்யறாளா உங்கம்மா...”
“அனாதையா அந்த வூட்ல கெடக்குதேன்னு பொணத்தை தூக்கினு வந்து வூட்டாண்ட அந்த நேரத்துல போட்டதுக்கு அல்லாத்தையும் எங்க தலையிலதான் கட்னுமா..உனுக்குந்தான சின்னம்மா...ஆகற செலவுக்கு என்னா பண்றதுன்னு மொதல்ல பேசிக்கலாம்”
தூரத்தில் அழுகைப் பெண்களோடு உட்கார்ந்திருந்தாலும்...மகன்களிடம் பெருமாள் பேசத்தொடங்கியதுமே காதுகளை உன்னிப்பாக்கிக்கொண்ட சரோஜா, பெருமாளின் நக்கல் கேள்வியைக் கேட்டதும், பாய்ந்து வந்து சொன்னாள்.
“எனக்கும் சின்னம்மாதான்....ஆனா உன் வூட்டுக்காரனுக்குத்தானே கயனிய எழுதி வெச்சா கெழவி. அவனத்தான கொள்ளிப்போடச் சொன்னா...இப்ப செலவுக்கு மட்டும் என்னைய பங்கு சேத்துக்கிறியா...?”
“அத்தக்கூட நீதான எழுதி வாங்கிக்கின....குடிகாரனுக்கு சாராயத்தை வாங்கிக் குடுத்து அடிமாட்டு வெலைக்கு வாங்குனியே..குடிச்சுக் குடிச்சே எல்லாத்தையும் காலி பண்ணிட்டு என்ன முண்டச்சியாக்கிட்டு போய் சேந்துட்டான்...ஏதோ இந்தப் புள்ளைங்க தலையெடுத்துதான் நாலு காசு சேத்துக்குறானுங்க...அதுகூட பொறுக்கலையா உனக்கு...உங்க சின்னம்மாளுக்குத்தான செய்யுற...”
“இங்க பாரு சரோசா...சாவு வூடாக்குதேன்னு பாக்குறேன்...உன் ஊட்டுக்காரன் குடிக்கறதுக்கு வித்தான். வேற எவனாவது வெளியாளு வந்து எதுக்கு வாங்கனுன்னுதான் பென்ஷன் வந்த பணத்தக் குடுத்து கயனிய வாங்குனேன். என்னவோ அடிச்சு புடிங்கிட்ட மாதிரி பேசற”
“ஏ பெருமாளு இப்ப என்னாத்துக்கு நீங்க ரெண்டுபேரும் அடிச்சிக்கிறீங்க. ஆக வேண்டியத பாருங்கப்பா...உங்க ரெண்டுபேர வுட்டா கெழவிக்கு வேற யாரு இருக்காங்க”
நடுவில் புகுந்து நியாயம் சொன்ன பெருமாக்காளைப் பார்த்து,
“நீ நாயம் பேசாத..கெழவி நல்லாருந்தப்ப காதுலக்கிறத கலட்டி வாங்கிக்கினவதான நீ...ஒருநாளானா அவளுக்கு சோறு போட்டுருக்கியா?”
“இத பாரு சரோசா...அவ பிரியத்தோடத்தான் கம்மலக் குடுத்தா...நீ இப்பிடியெல்லாம் அக்குறும்பா பேசாத...எனக்கென்னா...சாவுக்கு வந்தமா...மூக்க சிந்தனமான்னு போய்ட்டேக்கிறேன். நீங்க பாடையிலயானா கொண்டு போங்க...முனிசிபாலிட்டி வண்டியிலயானா கொண்டு போங்க...எனக்கென்னா...”
கூட்டத்திலிருந்த பெருசு ஒருவர், முண்டாசை அவிழ்த்து, மீண்டும் கட்டிக்கொண்டு வந்து பெருமாளிடம்,
‘பொணத்தை நடுவூட்ல வெச்சுக்குனு..என்னாத்துக்கு ஆளாளுக்கு பேசினு கீறீங்க? ஆளுக்குக் கொஞ்சமா பணத்தப் போட்டு கடைசியா அவள நிம்மதியா அனுப்பி வெய்யுங்க”
“சித்தப்பா...என் கையில காசு இல்ல. சுதா...ஒடம்பு முடியாத புள்ளைய தூக்கிக்கினு வந்திருக்கா...அந்தப் புள்ளைக்கு ஆசுபத்திரி செலவுக்கே காசு பத்தலன்னு அல்லாடின்னு கீறேன்...என்னாண்ட வந்து கேட்டா நான் எங்க போறது”
“என்கிட்ட மட்டும் என்னா கொட்டிக் கெடக்குதா...இப்பதான் முருகனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன்...வடிவேலுக்கு வேலைக்குப் போறதுக்கு செலவு பண்ணிட்டு சுத்தமா தொடச்சி வெச்சுனு கீறேன்”
பெருமாளும், சரோஜாவும் சொல்ல, பெரிசு,
“ஏம்மா...எம்புட்டு காசு ஆயிடும்? உங்கள என்னா பூப்பாடையா கட்ட சொல்றேன்...நாலு மூங்கிலு வாங்கனும்...குழி வேணுன்னாக் கூட நான் வெட்டிக் குடுத்துடறேன், ஒரு கோடித்துணியாவது வாங்கி அவளுக்குப் போடுங்க.மோளக்காரனுக்கு அம்பதோ நூறோ ஆகும்,சனிப்பொணத்துக்கு தொணப்பொணமா ஒரு கோழிய வாங்கிக் கட்டுங்க..”
“உனுக்கு என்னா மாமா..சுளுவா சொல்லிட்ட....கெழவி மாங்காத் தோப்புக் காவலுக்கு இருக்க சொல்லோ நீ கூடத்தான் அவளாண்ட காசு வாங்கிக்கீற...அதுக்கு குழி மட்டும் வெட்னா சரியாப்போச்சா? என்னாண்ட தம்பிடி பைசா இல்ல..”
சரோஜா தீர்மாணமாய் சொன்னதும், பெருமாளும் முறுக்கிக்கொண்டு நின்றார்.
அதற்குள் கணிசமாய் ஆட்கள் சேரத்தொடங்கினார்கள். அதிலிருந்த ஒருவர்...
“பெருமாளு கோடித்துணி வாங்கியாந்துட்டியா..?”
“ம்க்கும்...கெடக்குறது கெடக்குது...கெழவியத்தூக்கி மனையில வெய்யுன்னு சொல்றா மாதிரி கேள்வியப்பாரு...அவளாண்டப் போய்க் கேக்கறதுதான..”
‘ஏம்ப்பா...உனக்கு சின்னம்மாதான...நீ செய்யாம வேற யாரு செய்வாங்க...”
“வேணா...மச்சான்....எதானா சொல்லிடப்போறேன்...உன் வேலையைப் பாத்துக்கிட்டு போ”
“டே...என்னா சொல்லிட்டன்னு இந்த எகிறு எகிறுற...உங்க சின்னாத்தாளுக்கு கோடித்துணி வாங்கிட்டியான்னுதானக் கேட்டேன்...அதுக்கு என்னா பேச்சு பேசற...ஏன் எங்களுக்கு பேசத் தெரியாதா..”
என அவரும் சிலுப்பிக்கொண்டு வர, பெருமாளுக்கு இருந்த எரிச்சலில், இந்த சிலுப்பலும் கோபத்தைத் தூண்டிவிட...சண்டைக்குத் தயாரானபோதுதான்...பிணத்தைச் சுற்றி அழுதுகொண்டிருந்த பெண்களில் ஒருத்தி,
“மாமா....கெழவி இடுப்புல இந்த தோப்பைய சொருகி வெச்சினிருந்திச்சி...மொடமொடன்னுருக்கு...ஏதானா காசு...கீசு..கீதான்னு பாரு”
என அந்த பையை எடுத்துக்கொண்டுவந்து பெருமாளிடம் கொடுக்க, அதைத் திறந்து பார்த்து ஆச்சர்யத்துடன், அதிலிருந்த ஐந்து நூறுரூபாய்த் தாள்களை வெளியில் எடுத்தார். இதைக் கவனித்த சரோஜா..தாவி அருகில் வந்தாள். பணத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
“ம்...உங்கபிரச்சனை தீந்துச்சா....பொணத்தப் போட்டு வெச்சுக்கிட்டு நீங்க அடிச்சுக்குவீங்கன்னு தெரிஞ்சிதானோ என்னவோ கெழவி...அவ கடைசிக் காரியத்துக்கு...காசு சேத்து வெச்சிருந்தா போலருக்கு...அப்புறம் என்னாப்பா...ஆக வேண்டியதப் பாருங்க...”
“மாமா...அந்தப் பணத்த என்கிட்டக் குடுக்கச் சொல்லுங்க...நாங்க பாத்துக்கறோம்”
“வாம்மா மவராசி....இப்ப மட்டும் நீங்க பாத்துக்குவீங்களா? இப்ப மட்டும் கெழவி எனக்கு சின்னம்மா இல்லியா...ஒண்ணும் வேணாம்...நீ கம்முன்னு இரு...நான் பாத்துக்கறேன்”
“அடடா...காசு இல்லன்னாலும் அடிச்சுக்கிறீங்க....காசு இருந்தாலும் அடிச்சுக்கிறீங்க...உங்களோட ஒரே ரோதனையாப் போச்சுப்பா...யாராவது பொறுப்பு எடுத்து செய்யுங்கப்பா...ஏம்மா சரோசா...உங்க மாமனே செய்யட்டுமே..நீ கம்முன்னுதான் இரேன்...”
“நான் எதுக்கு கம்முன்னு இருக்கனும், பொணத்த நாங்கதான எங்க வூட்ல கொண்டு வந்து போட்டுனுக்கிறோம்...பணத்த எங்களாண்ட குடுக்கச் சொல்லு...”
“இதப்பாரு ஜாஸ்தி பேசுனா...நடக்கறதே வேற...ஒழுங்கு மரியாதையா போய் ஒரு எடத்துல ஒக்காரு...எல்லாம் நான் பாத்துக்கறேன்...”
“எனக்கு ஒழுங்கு மரியாதையக் கத்துக்குடுக்க நீ யாருய்யா...?”
“என்னாடி வாய் நீளுது...எங்க வூட்டுக்காரனப் பாத்துக் கேள்விக் கேக்கற அளவுக்கு வந்துட்டியா....”
கமலா களத்தில் இறங்க....நடப்பவற்றைப் பார்த்து நியாயம் தெரிந்தவர்கள்...தலையில் அடித்துக்கொண்டார்கள்...கூட்டத்தில் ஒரு குரல்...
“ஊர் கவுண்டரக் கூப்புடுங்கப்பா....அவருக்குத்தான்...இதுங்க கட்டுப்படும். அவரே வந்து ஒரு நாயத்த சொல்லட்டும்....”
என்றதும்...ஊர்கவுண்டரைக் கூட்டிக்கொண்டுவர சிலர் போனார்கள். அமளி நிற்கவில்லை.
இந்த அமளியிலிருந்து தன் மனைவியைத் தனியேக் கூட்டிக்கொண்டு வந்த நாகன்,அவளைப் பார்த்து,
“ஏண்டி...எரும...மொதல்லயே அந்தக் கெழவி இடுப்புல தோப்பைய பாத்திருக்கறதுதான...ஏதோ நூறோ எரநூறோ செலவு பண்ணி நாமளே தூக்கிப் போட்டுட்டு இருக்கலாம். முன்னூறு நானூறு ரூபாவாவது கெடைச்சிருக்கும்”
“நைனா இல்லியா பெரிம்மா..சின்னப் பாட்டி செத்துடிச்சி...”
பெரிதாக எந்த அதிர்ச்சியையும் காட்டாமல்..எதிர்பார்த்த செய்திதான்...இருந்தாலும் இந்த வேளைகெட்ட வேளையில் எதிர்பார்க்கவில்லையென்பதை மிகச் சிறிய எரிச்சலைக் காட்டிக்கொண்டே கேட்டாள்.
“எப்ப?”
“எப்போன்னு தெரியில....ராத்திரி ஏழு மணிக்கெல்லாம் களியத் திண்ணுட்டு நாகன் வூட்டுக்கு வெளியிலத்தான் படுத்திருக்கு...ராத்திரி கொல்லைக்குப் போறதுக்கு எழுந்த நாகன் வூட்டுக்காரி பாத்துட்டுதான் சொல்லியிருக்கா....அவன் நேரா எங்க வூட்டாண்ட வந்து உங்க பாட்டிய தூக்கினு போங்கடான்னு கத்துனான். நானும் வடிவேலனும்தான் போய் தூக்கினு வந்து வூட்டாண்ட போட்டுனுக்குறோம்...நீ வா பெரிம்மா...பொணத்த வூட்ல போட்டுக்குனு ஒண்டியா இருக்குறதுக்கு பயமாக்குது...போய் பெரிம்மாவ இட்னு வாங்கடான்னு அம்மாதான் சொல்லுச்சி...”
“என்னாடா ரோதனையாக்குது...இந்தக் கெளவிக்கு சாவுறதுக்கு நடுக்கூறுதான் கெடைச்சுதா..உங்க பெரிப்பா வேற டூட்டிக்கு போய்ட்டுக்குது....சரி ஒக்காருங்க வரன்.”
அவிழ்ந்த கூந்தலை முடித்துக்கொண்டே கூடத்தில் படுத்திருந்த தன் மகளை எழுப்பினாள்.
“சுதா...சுதா...எழ்றி...பொட்டப்புள்ள...தொட்டாலே பொசுக்குன்னு எழுந்துக்கத்தாவல...எப்புடி உன் மாமியாக்காரிக்கிட்ட...பேச்சு வாங்காம பொயப்பு நடத்தினுக்கீறியோ...புள்ளையப் பாரு...ஒடம்பு சரியில்லாத புள்ள, ஒண்ணுக்கு போய்ட்டு ஈரத்துலயே கெடக்குது..”
“யாம்மா...என்னாத்துக்கு இந்தக் கூசல் போடற...பொழுது விடிஞ்சிடுச்சா...?”
குழந்தையின் ஈரத்துணியை இழுத்துக்கொண்டேக் கேட்டாள்.
“விடிஞ்ச மாதிரிதான்...உங்க சின்னப்பாட்டி செத்துப்போயிட்டாளாம்...உங்க சித்தப்பன் வூட்லதான் போட்டு வெச்சிக்கிறாங்களாம்...நான் முருகன்கூட போறேன். காத்தால நைனா வந்ததும் சொல்லிக் கூட்டுக்குனு வா”
சுதாவின் நைனா...பக்கத்திலிருக்கும் பால்பண்ணையில் இரவுக்காவலாளியாக இருக்கிறார். முன்னாள் இராணுவவீரர். இறந்துப்போனதாக முருகன் சொன்ன சின்னப்பாட்டிக்கு குழந்தைகள் எதுவுமில்லாமல், முருகனின் அப்பாவைத்தான் தனக்குக் கொள்ளிபோட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு தனக்கிருந்த அரை ஏக்கர் நிலத்தை அவருக்கே எழுதிக் கொடுத்துவிட்டார்.ஆனால்..அவர் கையால் கொள்ளி வாங்க கொடுத்துவைக்காமல் இந்த 90 வயதுவரைக்கும் வாழ்ந்துகொண்டிருந்தார். சின்ன வயதிலேயே கணவர் இறந்துவிட்டார். அந்த கிராமத்திலிருந்த மாந்தோப்புகளுக்குக் காவல் இருந்துகொண்டு அங்கேயே சின்னக் குடிசை போட்டுக்கொண்டு இருந்தார். இருந்த சின்ன குடிசையும், மாந்தோப்புகள் வீட்டுமனைகளாக்கப்பட்டதும், இல்லாமல் போனது. பதினைந்து வருடங்களாக ஒவ்வொரு உறவினர் வீட்டிலும் கொஞ்சக் காலம் என்று வாழ்ந்து...இன்று அதையும் முடித்துக்கொண்டார்.
கமலா அங்கு போய் சேர்ந்தபோது, இன்னும் சில பெண்கள் வந்துவிட்டிருந்தார்கள். முருகனின் அப்பாவுடைய வேட்டியை ஒரு பாயின் மேல் விரித்து பாட்டியை கிடத்தியிருந்தார்கள். விடிய விடியவே அந்த வீடு சாவு வீட்டின் அரிதாரத்தை பூசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. பெரும்பாலும் உறவுக்காரர்களே அக்கம்பக்கத்தில் வசித்து வந்ததால்...செய்திக் கேட்டதும்...வீட்டுப்பெண்களெல்லாம் வரத்தொடங்கிவிட்டார்கள். கண்ணீரே வராத வெறும் அழுகைச் சத்தமும், சம்பிரதாய மூக்கு சிந்தல்களும் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. ஒரு அனாதைக் கிழவியின் பரிதாபச் சாவின் பரிமாணம் தெரியத்தொடங்கியது....
மாலையோடும், ஊதுபத்திகளோடும் வந்த கமலாவின் கணவர் பெருமாள், இரவுப்பணிக்குப் பிறகான இன்றைய தூக்கம் போன எரிச்சலில் கண்கள் சிவக்க, மாலையைப் போட்டுவிட்டு, தன் தம்பி மகன்களை அருகில் அழைத்தார்.
“மோளம் அடிக்கிறவனுக்கு சொல்லி வுட்டீங்களா?”
“எல்லாம் நீ வந்ததுக்கப்பறமா சொல்லிக்கலான்னு அம்மா சொல்லிச்சி நைனா”
“ஏன்...எல்லாத்தையும் என்னக் கேட்டுக்கிட்டுதான் செய்யறாளா உங்கம்மா...”
“அனாதையா அந்த வூட்ல கெடக்குதேன்னு பொணத்தை தூக்கினு வந்து வூட்டாண்ட அந்த நேரத்துல போட்டதுக்கு அல்லாத்தையும் எங்க தலையிலதான் கட்னுமா..உனுக்குந்தான சின்னம்மா...ஆகற செலவுக்கு என்னா பண்றதுன்னு மொதல்ல பேசிக்கலாம்”
தூரத்தில் அழுகைப் பெண்களோடு உட்கார்ந்திருந்தாலும்...மகன்களிடம் பெருமாள் பேசத்தொடங்கியதுமே காதுகளை உன்னிப்பாக்கிக்கொண்ட சரோஜா, பெருமாளின் நக்கல் கேள்வியைக் கேட்டதும், பாய்ந்து வந்து சொன்னாள்.
“எனக்கும் சின்னம்மாதான்....ஆனா உன் வூட்டுக்காரனுக்குத்தானே கயனிய எழுதி வெச்சா கெழவி. அவனத்தான கொள்ளிப்போடச் சொன்னா...இப்ப செலவுக்கு மட்டும் என்னைய பங்கு சேத்துக்கிறியா...?”
“அத்தக்கூட நீதான எழுதி வாங்கிக்கின....குடிகாரனுக்கு சாராயத்தை வாங்கிக் குடுத்து அடிமாட்டு வெலைக்கு வாங்குனியே..குடிச்சுக் குடிச்சே எல்லாத்தையும் காலி பண்ணிட்டு என்ன முண்டச்சியாக்கிட்டு போய் சேந்துட்டான்...ஏதோ இந்தப் புள்ளைங்க தலையெடுத்துதான் நாலு காசு சேத்துக்குறானுங்க...அதுகூட பொறுக்கலையா உனக்கு...உங்க சின்னம்மாளுக்குத்தான செய்யுற...”
“இங்க பாரு சரோசா...சாவு வூடாக்குதேன்னு பாக்குறேன்...உன் ஊட்டுக்காரன் குடிக்கறதுக்கு வித்தான். வேற எவனாவது வெளியாளு வந்து எதுக்கு வாங்கனுன்னுதான் பென்ஷன் வந்த பணத்தக் குடுத்து கயனிய வாங்குனேன். என்னவோ அடிச்சு புடிங்கிட்ட மாதிரி பேசற”
“ஏ பெருமாளு இப்ப என்னாத்துக்கு நீங்க ரெண்டுபேரும் அடிச்சிக்கிறீங்க. ஆக வேண்டியத பாருங்கப்பா...உங்க ரெண்டுபேர வுட்டா கெழவிக்கு வேற யாரு இருக்காங்க”
நடுவில் புகுந்து நியாயம் சொன்ன பெருமாக்காளைப் பார்த்து,
“நீ நாயம் பேசாத..கெழவி நல்லாருந்தப்ப காதுலக்கிறத கலட்டி வாங்கிக்கினவதான நீ...ஒருநாளானா அவளுக்கு சோறு போட்டுருக்கியா?”
“இத பாரு சரோசா...அவ பிரியத்தோடத்தான் கம்மலக் குடுத்தா...நீ இப்பிடியெல்லாம் அக்குறும்பா பேசாத...எனக்கென்னா...சாவுக்கு வந்தமா...மூக்க சிந்தனமான்னு போய்ட்டேக்கிறேன். நீங்க பாடையிலயானா கொண்டு போங்க...முனிசிபாலிட்டி வண்டியிலயானா கொண்டு போங்க...எனக்கென்னா...”
கூட்டத்திலிருந்த பெருசு ஒருவர், முண்டாசை அவிழ்த்து, மீண்டும் கட்டிக்கொண்டு வந்து பெருமாளிடம்,
‘பொணத்தை நடுவூட்ல வெச்சுக்குனு..என்னாத்துக்கு ஆளாளுக்கு பேசினு கீறீங்க? ஆளுக்குக் கொஞ்சமா பணத்தப் போட்டு கடைசியா அவள நிம்மதியா அனுப்பி வெய்யுங்க”
“சித்தப்பா...என் கையில காசு இல்ல. சுதா...ஒடம்பு முடியாத புள்ளைய தூக்கிக்கினு வந்திருக்கா...அந்தப் புள்ளைக்கு ஆசுபத்திரி செலவுக்கே காசு பத்தலன்னு அல்லாடின்னு கீறேன்...என்னாண்ட வந்து கேட்டா நான் எங்க போறது”
“என்கிட்ட மட்டும் என்னா கொட்டிக் கெடக்குதா...இப்பதான் முருகனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன்...வடிவேலுக்கு வேலைக்குப் போறதுக்கு செலவு பண்ணிட்டு சுத்தமா தொடச்சி வெச்சுனு கீறேன்”
பெருமாளும், சரோஜாவும் சொல்ல, பெரிசு,
“ஏம்மா...எம்புட்டு காசு ஆயிடும்? உங்கள என்னா பூப்பாடையா கட்ட சொல்றேன்...நாலு மூங்கிலு வாங்கனும்...குழி வேணுன்னாக் கூட நான் வெட்டிக் குடுத்துடறேன், ஒரு கோடித்துணியாவது வாங்கி அவளுக்குப் போடுங்க.மோளக்காரனுக்கு அம்பதோ நூறோ ஆகும்,சனிப்பொணத்துக்கு தொணப்பொணமா ஒரு கோழிய வாங்கிக் கட்டுங்க..”
“உனுக்கு என்னா மாமா..சுளுவா சொல்லிட்ட....கெழவி மாங்காத் தோப்புக் காவலுக்கு இருக்க சொல்லோ நீ கூடத்தான் அவளாண்ட காசு வாங்கிக்கீற...அதுக்கு குழி மட்டும் வெட்னா சரியாப்போச்சா? என்னாண்ட தம்பிடி பைசா இல்ல..”
சரோஜா தீர்மாணமாய் சொன்னதும், பெருமாளும் முறுக்கிக்கொண்டு நின்றார்.
அதற்குள் கணிசமாய் ஆட்கள் சேரத்தொடங்கினார்கள். அதிலிருந்த ஒருவர்...
“பெருமாளு கோடித்துணி வாங்கியாந்துட்டியா..?”
“ம்க்கும்...கெடக்குறது கெடக்குது...கெழவியத்தூக்கி மனையில வெய்யுன்னு சொல்றா மாதிரி கேள்வியப்பாரு...அவளாண்டப் போய்க் கேக்கறதுதான..”
‘ஏம்ப்பா...உனக்கு சின்னம்மாதான...நீ செய்யாம வேற யாரு செய்வாங்க...”
“வேணா...மச்சான்....எதானா சொல்லிடப்போறேன்...உன் வேலையைப் பாத்துக்கிட்டு போ”
“டே...என்னா சொல்லிட்டன்னு இந்த எகிறு எகிறுற...உங்க சின்னாத்தாளுக்கு கோடித்துணி வாங்கிட்டியான்னுதானக் கேட்டேன்...அதுக்கு என்னா பேச்சு பேசற...ஏன் எங்களுக்கு பேசத் தெரியாதா..”
என அவரும் சிலுப்பிக்கொண்டு வர, பெருமாளுக்கு இருந்த எரிச்சலில், இந்த சிலுப்பலும் கோபத்தைத் தூண்டிவிட...சண்டைக்குத் தயாரானபோதுதான்...பிணத்தைச் சுற்றி அழுதுகொண்டிருந்த பெண்களில் ஒருத்தி,
“மாமா....கெழவி இடுப்புல இந்த தோப்பைய சொருகி வெச்சினிருந்திச்சி...மொடமொடன்னுருக்கு...ஏதானா காசு...கீசு..கீதான்னு பாரு”
என அந்த பையை எடுத்துக்கொண்டுவந்து பெருமாளிடம் கொடுக்க, அதைத் திறந்து பார்த்து ஆச்சர்யத்துடன், அதிலிருந்த ஐந்து நூறுரூபாய்த் தாள்களை வெளியில் எடுத்தார். இதைக் கவனித்த சரோஜா..தாவி அருகில் வந்தாள். பணத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
“ம்...உங்கபிரச்சனை தீந்துச்சா....பொணத்தப் போட்டு வெச்சுக்கிட்டு நீங்க அடிச்சுக்குவீங்கன்னு தெரிஞ்சிதானோ என்னவோ கெழவி...அவ கடைசிக் காரியத்துக்கு...காசு சேத்து வெச்சிருந்தா போலருக்கு...அப்புறம் என்னாப்பா...ஆக வேண்டியதப் பாருங்க...”
“மாமா...அந்தப் பணத்த என்கிட்டக் குடுக்கச் சொல்லுங்க...நாங்க பாத்துக்கறோம்”
“வாம்மா மவராசி....இப்ப மட்டும் நீங்க பாத்துக்குவீங்களா? இப்ப மட்டும் கெழவி எனக்கு சின்னம்மா இல்லியா...ஒண்ணும் வேணாம்...நீ கம்முன்னு இரு...நான் பாத்துக்கறேன்”
“அடடா...காசு இல்லன்னாலும் அடிச்சுக்கிறீங்க....காசு இருந்தாலும் அடிச்சுக்கிறீங்க...உங்களோட ஒரே ரோதனையாப் போச்சுப்பா...யாராவது பொறுப்பு எடுத்து செய்யுங்கப்பா...ஏம்மா சரோசா...உங்க மாமனே செய்யட்டுமே..நீ கம்முன்னுதான் இரேன்...”
“நான் எதுக்கு கம்முன்னு இருக்கனும், பொணத்த நாங்கதான எங்க வூட்ல கொண்டு வந்து போட்டுனுக்கிறோம்...பணத்த எங்களாண்ட குடுக்கச் சொல்லு...”
“இதப்பாரு ஜாஸ்தி பேசுனா...நடக்கறதே வேற...ஒழுங்கு மரியாதையா போய் ஒரு எடத்துல ஒக்காரு...எல்லாம் நான் பாத்துக்கறேன்...”
“எனக்கு ஒழுங்கு மரியாதையக் கத்துக்குடுக்க நீ யாருய்யா...?”
“என்னாடி வாய் நீளுது...எங்க வூட்டுக்காரனப் பாத்துக் கேள்விக் கேக்கற அளவுக்கு வந்துட்டியா....”
கமலா களத்தில் இறங்க....நடப்பவற்றைப் பார்த்து நியாயம் தெரிந்தவர்கள்...தலையில் அடித்துக்கொண்டார்கள்...கூட்டத்தில் ஒரு குரல்...
“ஊர் கவுண்டரக் கூப்புடுங்கப்பா....அவருக்குத்தான்...இதுங்க கட்டுப்படும். அவரே வந்து ஒரு நாயத்த சொல்லட்டும்....”
என்றதும்...ஊர்கவுண்டரைக் கூட்டிக்கொண்டுவர சிலர் போனார்கள். அமளி நிற்கவில்லை.
இந்த அமளியிலிருந்து தன் மனைவியைத் தனியேக் கூட்டிக்கொண்டு வந்த நாகன்,அவளைப் பார்த்து,
“ஏண்டி...எரும...மொதல்லயே அந்தக் கெழவி இடுப்புல தோப்பைய பாத்திருக்கறதுதான...ஏதோ நூறோ எரநூறோ செலவு பண்ணி நாமளே தூக்கிப் போட்டுட்டு இருக்கலாம். முன்னூறு நானூறு ரூபாவாவது கெடைச்சிருக்கும்”