ரங்கராஜன்
01-09-2010, 06:48 PM
நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!! என்ற கதையின் விவாத திரி இது.
தாமரை அண்ணனின் அனுமதியுடன் தான் இந்த திரியை ஆரம்பிக்கிறேன்
தாமரை அவர்களின் சமீபத்திய தொடர்கதையான நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!!.......... என்ற திரியை அனைவரும் படித்து இருப்பீர்கள்.
நான் ஒரு கதை திரியை படிக்கும் சில வினாடிகளுக்கு முன்பாவது அந்த கதைக்கான உறவுகளின் விமர்சனத்தை படிப்பேன்.......... காரணம் அதில் பிரதிபலிக்கும் வாசகர்களின் ஆர்வம் எனக்கும் தொற்றிக் கொள்ளும்..........நானும் இந்த கதையை படித்தேன், அதற்கு முக்கிய காரணம் இந்த கதைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள். இந்த கதையை படிப்பவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. ஆஹா, ஓஹோ, கொன்னுட்டார்யா, பிச்சிட்டார்யா..........
2. நல்லாயிருக்கு...... ஆனால் இந்த கதையை புரிந்துக் கொள்ளும் அளவிற்கு நமக்கு அறிவு பத்தலையோ, இலக்கியதரம் வாய்ந்த கதையாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் படித்து, எதையாவது எழுதி விட்டு போவது.
3. எல்லா வரிகளையும் ஒண்ணு விடாமல் படித்து விட்டு, ஒரு வார்த்தை கூடா பின்னூட்டம் போடாமல் போய்விடுவது, புது பதிப்பு போட்டால் முதல் முதலில் முண்டியடித்துக் கொண்டு வந்து அதை படிப்பது.
இப்படி பட்ட மூன்று வகையான வாசகர்களை தாண்டித் தான் இந்த கதை வளர்ந்து இருக்கிறது. இந்த கதையை விமர்சிப்பதற்கு முன் இந்த கதையை நான் படித்த விதத்தை பற்றி சொல்லி விடுகிறேன்...... மொத்தமாக 5 முறை படித்தேன். 2 முறை கணிணி திரையில், மீதி 3 முறை பிரதி எடுத்து பேப்பரில் படித்தேன்.
சரி நான் என்னுடைய விமர்சனத்தை பதித்து விடுகிறேன், அதன் பின் விவாதத்தை ஆரம்பிப்போம். விமர்சனம் கடுமையாக இருந்தால் படிப்பவர்கள் மன்னிக்கவும், தாமரை அண்ணாவிற்கு என்னை பற்றி தெரியும் அதனால் அவரிடம் மன்னிப்பு அவசியம் இல்லை. நான் கேட்காத கேள்விகள் அனைத்திற்கும் பதிலை ரெடியாக வைத்திருக்கும் அவர், நான் கேட்கும் கேள்விகளுக்கா பதில்லை என்று கூறப்போகிறார்.
என்னை பொறுத்தவரை இந்த கதை நாவலின் கோட்பாடுகள் பலவற்றை மிஞ்சி இருக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நாவலாகி விடும் என்பது போல உள்ளது இந்த கதை.
முதலில் இருந்தே பற்றில்லாமல் சென்றுக் கொண்டு இருக்கிறது கதையின் தொடக்கம். காரணம் தேவையான இடத்தில் இல்லாத வர்ணனைகள் தேவையில்லாத இடத்தில் அதிகமாக இருக்கிறது. எது தேவையான இடம் எது தேவையில்லாத இடம் என்று நீ எப்படி சொல்ல முடியும் என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். உண்மையில் வாசகன் தான் அதை உணர வேண்டும், அல்லாது வாசகனுக்கு அதை உணர்த்தவாவது எழுத்தாளர் செய்து இருக்க வேண்டும்.
நீலவேணி என்ற பெயரில் உள்ள சஸ்பென்ஸ் புரிவதற்குள்ளே, முந்தைய விஷயங்கள், உப செய்திகள் எல்லாம் மறந்து போய்விடுகிறது......... இது கதையை திரும்ப படிக்க வைக்கும் உத்தியாக நீங்கள் கையாண்டாலும், அதில் பிரச்சனை என்னவென்றால், திரும்ப படிக்கவும் மனது ஒத்துழைக்க மறுக்கிறது..... புரிந்த வரை போதும் அப்படியே தொடர்வோம், பின்னாடி வரும் விஷயங்களாவது புரிகிறதா என்று வார்த்தைகளை சீக்கிரமாக முழுங்கி விட்டு செல்ல துடிக்கிறது மனது.
முக்கியமாக சிந்தினைவாதிகள் என்று அவர்களுக்கு சரியான அடையாளங்களை கொடுக்காமல் வெறும் சிந்தினைவாதி 1, 2 , 3, 4 என்று குறிப்பிட்டு இருப்பது, நாவலின் சறுக்கலில் முதல் இடம்.
பின்னர் வித்தியாசம் என்ற பெயரில், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல், மனது போன போக்கில் கருவை மாற்றுவது என்பது கண்டிப்பாக தவறான அணுகுமுறையாக நான் உணர்கிறேன். காரணம் அவை முழுவதும் திரைக்கதை வடிவத்தில் சரியாக வரும். அப்போது தான் வாசகர் சாரி பார்வையாளர்களின் மனதில் நீங்கள் நினைத்த கருவை கொண்டு வர முடியும்.
நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை, படத்தை பார்ப்பதற்கும் நாவலை படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. படத்திற்கு இயக்குனர், எடிட்டர், இசையமைப்பாளர், காமெடி டராக் இயக்குனர் என்று பலர் இருப்பார்கள். அதை பார்ப்பவர்கள் வேறும் ஒரு பார்வையாளன் மட்டுமே அவன் கண்முன்னே நடப்பதை அவன் பார்க்கிறான். அதில் அவனுடைய, அறிவுக்கும், சிந்தனைகளுக்கும் சம்பந்தம் இல்லை.
ஆனால் நாவலை பொறுத்தவரை வாசகன் தான் இயக்குனர், எடிட்டர், இசையமைப்பாளர், காமெடி டராக் இயக்குனர், ஏன் தயாரிப்பாளர் கூட அவன் தான். உதாரணத்திற்கு அமெரிக்காவை பற்றி நாவலில் படித்தால், அங்கு சென்று சுற்றித் திரிந்து விட்டு வருவான். இதில் எழுத்தாளன் என்பவன் அவனுக்கு எழுத்தை படிக்க உதவியவன் மட்டுமே.
உங்கள் நீலவேணி கதை, மனோதத்துவரீதியான கட்டுரை அதுவும் வாழ்வியல், உலக நடப்பு, சகமனித உணர்ச்சி என்று சேரக்கூடாத பல கலவைகள் இதில் சேர்க்கப்பட்டு இருக்கிறது, அதுவும் சொல்லகூடாத விதத்தில். இந்த கதையை புகழ்ந்தவர்களை எல்லாம் இலக்கியவாதிகளாகவும், புகழாதவர்களை கடைநிலை வாசகனாகவும் என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் இதைப் பற்றி சொல்லப்போகிறோம் என்ற தெளிவான முடிவில் நீங்கள் இருப்பதாக நான் உணரவில்லை. காலம் போன போக்கில் கதையையும் அறிவுரையையும் சொல்லி விட்டு போவதாக நான் உணர்கிறேன். அறிவுரைகள் எல்லா நேரத்தில் இனிப்பதில்லை, நாவலுக்கு உண்டான தவிர்க்க முடியாத சிலவற்றை நீங்கள் சேர்த்து தான் ஆகவேண்டும். முக்கியமாக இழையோடும் நகைச்சுவைகள், இல்லை என்றால் அலுப்பு தட்டி விடும். இந்த கதையை படித்து விட்டு பெருத்த ஏமாற்றத்துடன் நான் ஆதனை தொடர்ப்பு கொண்டேன். பின் வரும் வசனங்களில் 1 நான், 2 என்று குறிப்பிடுவது ஆதன்.
1 - என்னடா பண்ற, தாமரை அண்ணாவின் கதையை படிச்சியா.
2 - படிச்சேன்.
1 - எப்படி இருந்தது.
2 - இன்னொரு வாட்டி படிக்கனும் டா.
1 - நான் 3 முறை படிச்சிட்டேன்,
2 - எப்படி இருக்கு,
1 - சின்னதா சொல்லனும்னா, அது வெறும் சொற்களின் குவியலாக தோன்றுகிறது.
2 - ஏன்டா, அது ஒரு புதிய முயற்சி டா, வித்தியாசமான முயற்சி டா. அதில் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும்டா, அதை நாம் ஊக்கமளிக்க வேண்டும்.
1 - டேய் என்னடா தாமரை அண்ணாவோட பிஆர்வோ மாதிரி பேசற, எந்த விஷமாக இருந்தாலும் மக்களிடத்தில் போய் சேரணும் அப்ப தான் புரியும்.
2 - பாரதி வார்த்தைகள் புரியவில்லை என்றால், அதுக்குன்னு பாரதி தப்புனு ஆகிடுமா.
1 - எல்லாருக்கும் பாரதியை புரியுமா, இல்லை கண்ணதாசனை புரியுமா.
2 - இது தப்பான எடுத்துக்காட்டு டா.
1 - சரி எதுவாக இருந்தாலும், தாமரை என்ற மனிதரை உனக்கு தெரியும் எனக்கு தெரியும், அவரின் வார்த்தைகளில் எதாவது நன்மை இருக்கும் என்று அவரை தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனால் அவரைப் பற்றி தெரியாத ஒருவனுக்கு இந்த கதையை படிக்க நாட்டம் வரும்மா வராத, மனதில் கைவைத்து சொல்லவும்.
2 - அப்படியில்லடா வித்தியாசமான முயற்சிடா இது ஒருவேளை நமக்கே கூட அப்புறமா புரியலாம்.
1 - எப்போ குழிக்குள் இறங்கியதுமா, டேய் ஒரு படைப்பை படித்தால் நாம் திக்குமுக்காடி போகவேணடும் என்ற அவசியம் இல்லை, உதட்டோரமாக புன்னகை பூத்தாலே போதும்.......... அறிவுரைகளை எல்லாம் மக்களுக்கு இலை மறைவு காயாக தான்டா கொடுக்கனும், இந்த மாதிரி கையில் குச்சியை வைத்துக் கொண்டு கரும்பலகையில் பாடம் நடத்தினால் புரியவே புரியாது.
2 - அப்ப விமர்சனம் எழுத வேண்டியது தானே.
1- நான் எழுதி விடுவேன், என் மனதில் பட்டதை தான் நான் எழுதுவேன், அதுவும் நான் நம்பும் மனிதர்களுக்கு தான் எழுதுவேன், காரணம் நான் எழுதப்போய் அதை அவர்கள் தப்பாக எடுத்துக் கொண்டால் அது பிரச்சனை இல்லையா. அதனால் தான் அதுவும் இல்லாமல் இந்த தொடர்கதைகள் பக்கம் நான் தலைவைத்து படுப்பதில்லை, காரணம் என் மனதில் பட்டதை எழுதப்போய், திரியின் உரிமையாளருக்கு அது மனகஷ்டத்தை உண்டு செய்து, திரியை தொடரமுடியாமல் போய்விட்டால் எனக்கு கஷ்டமாக ஆகிவிடும் அதனால் தான். நீ போட வேண்டியது தானே.
2 - இரு அவர் இப்ப தானே கொஞ்சம் எழுதி இருக்காறு இன்னும் நிறைய இருக்கே அப்புறம் விமர்சனம் எழுதுவோம்.
1 - கண்டிப்பாக ஒரு நாவலின் முதல் பத்து பக்கங்கள் தான் முக்கியமானது. காரணம் இந்த நாவலை படிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வைப்பது அந்த பக்கங்கள் தான், இந்த கதையை பொறுத்த வரை அதற்கான வாய்ப்பு இல்லை.
2 - பின் வரும் பாகங்களில் சுவாரஸ்யம் கூட வாய்ப்பு இருக்கலாம் இல்லையை.
1 - வாசகன் அந்த பக்கம் வரை வந்தால் தானே அதற்கு வாய்ப்பு இருக்கிறது. 9 பக்கத்தோடு புத்தகத்தை ஓரம் கட்டி விட்டால். என்ன செய்வது. தோ பாரு ஆதி தாமரை என்ற மனிதனை பற்றி தமிழ்மன்றத்தில் இருக்கும் அனைவரும் அறிவார்கள். அவரின் எழுத்துக்கு என்ற ஒரு மரியாதை இருக்கிறது. எதாவது அவர் நல்லது சொல்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால் உலக வாசகர்கள் என்பது தமிழ்மன்றம் மட்டுமல்ல, தாமரை நல்ல விஷயங்களை தான் சொல்வார் என்று குருடாம்போக்கில் நம்பவேண்டிய அவசியம் உலக வாசகனுக்கு கிடையாது. அதே போல தாமரையின் மனது நோகாமல் விமர்சனம் அளிக்க வேண்டும் என்றும் அவன் நினைக்க மாட்டான். அவர்களை பொறுத்த வரை தாமரை ஒரு எழுத்தாளன், அவரின் முதல் நாவல் இது, அதில் இருக்கும் விஷயங்கள் சரியா தப்பா, சுவாரஸ்யமா இருக்கிறதா இல்லையா, படிக்கலாமா வேண்டாமா என்று தான் யோசிப்பானே ஒழிய. அங்கு தாமரையின் பெயர் கூட நினைவுக்கு வராது. இதே போல தாமரை ஒரு கன்னி எழுத்தாளர் என்றால் அவரை நாம் உற்சாம மூட்டி தேத்தி எழுத வைக்கலாம். ஆனால் அவரோ உலக விஷயத்தில் இருந்து ப்ளூட்டோ வரை விவரிப்பவர், அத்தகைய எழுதாளனிடம் இருந்து இந்த மாதிரி ஒரு நாவலோ, தொடர்கதையோ நான் எதிர்பார்க்கவில்லை.
கதையில் வரும் சிந்தனைவாதிகளுக்கு.............. ஒரு வாசகனின் வேண்டுகோள்.
அறிவரைகளை தேனில் நனைத்து கொடுங்கள் சாப்பிடுகிறோம், ஆனால் வேப்பிலையை ஒரு சிந்தனைவாதி அப்படியே சாப்பிட்டான் என்றால் நாங்களும் அதை அப்படியே சாப்பிடுவதற்கு நாங்களும் சிந்தனைவாதிகள் கிடையாது......... அப்படி அது நல்லது என்று நாங்கள் சாப்பிட்டால், நாங்கள் கதை எழுத நீங்கள் அதை படித்துக் கொண்டு இருப்பீர்கள்.......... தேனில் வைத்து கொடுத்தால் சாப்பிட்டுகிறோம் என்பதால் ஊட்டிக் கொண்டே இருக்காதீர்கள்... வாந்தி தான் வரும்...........
தமிழ்மன்ற தாமரை என்ற பர்சனாலிட்டியை தூக்கி எறிந்து விட்டு, அனுபவஸ்தன் தாமரை என்ற எழுத்தாளனை துணைக்கு வைத்துக் கொண்டு எழுதுங்கள்.............. என்னைப் போன்ற கடைநிலை வாசகனும் மனநிறைவோடு உடன் வருவோம்.
வாழ்த்துக்கள்
தம்பி தக்ஸ்
தாமரை அண்ணனின் அனுமதியுடன் தான் இந்த திரியை ஆரம்பிக்கிறேன்
தாமரை அவர்களின் சமீபத்திய தொடர்கதையான நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!!.......... என்ற திரியை அனைவரும் படித்து இருப்பீர்கள்.
நான் ஒரு கதை திரியை படிக்கும் சில வினாடிகளுக்கு முன்பாவது அந்த கதைக்கான உறவுகளின் விமர்சனத்தை படிப்பேன்.......... காரணம் அதில் பிரதிபலிக்கும் வாசகர்களின் ஆர்வம் எனக்கும் தொற்றிக் கொள்ளும்..........நானும் இந்த கதையை படித்தேன், அதற்கு முக்கிய காரணம் இந்த கதைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள். இந்த கதையை படிப்பவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. ஆஹா, ஓஹோ, கொன்னுட்டார்யா, பிச்சிட்டார்யா..........
2. நல்லாயிருக்கு...... ஆனால் இந்த கதையை புரிந்துக் கொள்ளும் அளவிற்கு நமக்கு அறிவு பத்தலையோ, இலக்கியதரம் வாய்ந்த கதையாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் படித்து, எதையாவது எழுதி விட்டு போவது.
3. எல்லா வரிகளையும் ஒண்ணு விடாமல் படித்து விட்டு, ஒரு வார்த்தை கூடா பின்னூட்டம் போடாமல் போய்விடுவது, புது பதிப்பு போட்டால் முதல் முதலில் முண்டியடித்துக் கொண்டு வந்து அதை படிப்பது.
இப்படி பட்ட மூன்று வகையான வாசகர்களை தாண்டித் தான் இந்த கதை வளர்ந்து இருக்கிறது. இந்த கதையை விமர்சிப்பதற்கு முன் இந்த கதையை நான் படித்த விதத்தை பற்றி சொல்லி விடுகிறேன்...... மொத்தமாக 5 முறை படித்தேன். 2 முறை கணிணி திரையில், மீதி 3 முறை பிரதி எடுத்து பேப்பரில் படித்தேன்.
சரி நான் என்னுடைய விமர்சனத்தை பதித்து விடுகிறேன், அதன் பின் விவாதத்தை ஆரம்பிப்போம். விமர்சனம் கடுமையாக இருந்தால் படிப்பவர்கள் மன்னிக்கவும், தாமரை அண்ணாவிற்கு என்னை பற்றி தெரியும் அதனால் அவரிடம் மன்னிப்பு அவசியம் இல்லை. நான் கேட்காத கேள்விகள் அனைத்திற்கும் பதிலை ரெடியாக வைத்திருக்கும் அவர், நான் கேட்கும் கேள்விகளுக்கா பதில்லை என்று கூறப்போகிறார்.
என்னை பொறுத்தவரை இந்த கதை நாவலின் கோட்பாடுகள் பலவற்றை மிஞ்சி இருக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நாவலாகி விடும் என்பது போல உள்ளது இந்த கதை.
முதலில் இருந்தே பற்றில்லாமல் சென்றுக் கொண்டு இருக்கிறது கதையின் தொடக்கம். காரணம் தேவையான இடத்தில் இல்லாத வர்ணனைகள் தேவையில்லாத இடத்தில் அதிகமாக இருக்கிறது. எது தேவையான இடம் எது தேவையில்லாத இடம் என்று நீ எப்படி சொல்ல முடியும் என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். உண்மையில் வாசகன் தான் அதை உணர வேண்டும், அல்லாது வாசகனுக்கு அதை உணர்த்தவாவது எழுத்தாளர் செய்து இருக்க வேண்டும்.
நீலவேணி என்ற பெயரில் உள்ள சஸ்பென்ஸ் புரிவதற்குள்ளே, முந்தைய விஷயங்கள், உப செய்திகள் எல்லாம் மறந்து போய்விடுகிறது......... இது கதையை திரும்ப படிக்க வைக்கும் உத்தியாக நீங்கள் கையாண்டாலும், அதில் பிரச்சனை என்னவென்றால், திரும்ப படிக்கவும் மனது ஒத்துழைக்க மறுக்கிறது..... புரிந்த வரை போதும் அப்படியே தொடர்வோம், பின்னாடி வரும் விஷயங்களாவது புரிகிறதா என்று வார்த்தைகளை சீக்கிரமாக முழுங்கி விட்டு செல்ல துடிக்கிறது மனது.
முக்கியமாக சிந்தினைவாதிகள் என்று அவர்களுக்கு சரியான அடையாளங்களை கொடுக்காமல் வெறும் சிந்தினைவாதி 1, 2 , 3, 4 என்று குறிப்பிட்டு இருப்பது, நாவலின் சறுக்கலில் முதல் இடம்.
பின்னர் வித்தியாசம் என்ற பெயரில், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல், மனது போன போக்கில் கருவை மாற்றுவது என்பது கண்டிப்பாக தவறான அணுகுமுறையாக நான் உணர்கிறேன். காரணம் அவை முழுவதும் திரைக்கதை வடிவத்தில் சரியாக வரும். அப்போது தான் வாசகர் சாரி பார்வையாளர்களின் மனதில் நீங்கள் நினைத்த கருவை கொண்டு வர முடியும்.
நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை, படத்தை பார்ப்பதற்கும் நாவலை படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. படத்திற்கு இயக்குனர், எடிட்டர், இசையமைப்பாளர், காமெடி டராக் இயக்குனர் என்று பலர் இருப்பார்கள். அதை பார்ப்பவர்கள் வேறும் ஒரு பார்வையாளன் மட்டுமே அவன் கண்முன்னே நடப்பதை அவன் பார்க்கிறான். அதில் அவனுடைய, அறிவுக்கும், சிந்தனைகளுக்கும் சம்பந்தம் இல்லை.
ஆனால் நாவலை பொறுத்தவரை வாசகன் தான் இயக்குனர், எடிட்டர், இசையமைப்பாளர், காமெடி டராக் இயக்குனர், ஏன் தயாரிப்பாளர் கூட அவன் தான். உதாரணத்திற்கு அமெரிக்காவை பற்றி நாவலில் படித்தால், அங்கு சென்று சுற்றித் திரிந்து விட்டு வருவான். இதில் எழுத்தாளன் என்பவன் அவனுக்கு எழுத்தை படிக்க உதவியவன் மட்டுமே.
உங்கள் நீலவேணி கதை, மனோதத்துவரீதியான கட்டுரை அதுவும் வாழ்வியல், உலக நடப்பு, சகமனித உணர்ச்சி என்று சேரக்கூடாத பல கலவைகள் இதில் சேர்க்கப்பட்டு இருக்கிறது, அதுவும் சொல்லகூடாத விதத்தில். இந்த கதையை புகழ்ந்தவர்களை எல்லாம் இலக்கியவாதிகளாகவும், புகழாதவர்களை கடைநிலை வாசகனாகவும் என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் இதைப் பற்றி சொல்லப்போகிறோம் என்ற தெளிவான முடிவில் நீங்கள் இருப்பதாக நான் உணரவில்லை. காலம் போன போக்கில் கதையையும் அறிவுரையையும் சொல்லி விட்டு போவதாக நான் உணர்கிறேன். அறிவுரைகள் எல்லா நேரத்தில் இனிப்பதில்லை, நாவலுக்கு உண்டான தவிர்க்க முடியாத சிலவற்றை நீங்கள் சேர்த்து தான் ஆகவேண்டும். முக்கியமாக இழையோடும் நகைச்சுவைகள், இல்லை என்றால் அலுப்பு தட்டி விடும். இந்த கதையை படித்து விட்டு பெருத்த ஏமாற்றத்துடன் நான் ஆதனை தொடர்ப்பு கொண்டேன். பின் வரும் வசனங்களில் 1 நான், 2 என்று குறிப்பிடுவது ஆதன்.
1 - என்னடா பண்ற, தாமரை அண்ணாவின் கதையை படிச்சியா.
2 - படிச்சேன்.
1 - எப்படி இருந்தது.
2 - இன்னொரு வாட்டி படிக்கனும் டா.
1 - நான் 3 முறை படிச்சிட்டேன்,
2 - எப்படி இருக்கு,
1 - சின்னதா சொல்லனும்னா, அது வெறும் சொற்களின் குவியலாக தோன்றுகிறது.
2 - ஏன்டா, அது ஒரு புதிய முயற்சி டா, வித்தியாசமான முயற்சி டா. அதில் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும்டா, அதை நாம் ஊக்கமளிக்க வேண்டும்.
1 - டேய் என்னடா தாமரை அண்ணாவோட பிஆர்வோ மாதிரி பேசற, எந்த விஷமாக இருந்தாலும் மக்களிடத்தில் போய் சேரணும் அப்ப தான் புரியும்.
2 - பாரதி வார்த்தைகள் புரியவில்லை என்றால், அதுக்குன்னு பாரதி தப்புனு ஆகிடுமா.
1 - எல்லாருக்கும் பாரதியை புரியுமா, இல்லை கண்ணதாசனை புரியுமா.
2 - இது தப்பான எடுத்துக்காட்டு டா.
1 - சரி எதுவாக இருந்தாலும், தாமரை என்ற மனிதரை உனக்கு தெரியும் எனக்கு தெரியும், அவரின் வார்த்தைகளில் எதாவது நன்மை இருக்கும் என்று அவரை தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனால் அவரைப் பற்றி தெரியாத ஒருவனுக்கு இந்த கதையை படிக்க நாட்டம் வரும்மா வராத, மனதில் கைவைத்து சொல்லவும்.
2 - அப்படியில்லடா வித்தியாசமான முயற்சிடா இது ஒருவேளை நமக்கே கூட அப்புறமா புரியலாம்.
1 - எப்போ குழிக்குள் இறங்கியதுமா, டேய் ஒரு படைப்பை படித்தால் நாம் திக்குமுக்காடி போகவேணடும் என்ற அவசியம் இல்லை, உதட்டோரமாக புன்னகை பூத்தாலே போதும்.......... அறிவுரைகளை எல்லாம் மக்களுக்கு இலை மறைவு காயாக தான்டா கொடுக்கனும், இந்த மாதிரி கையில் குச்சியை வைத்துக் கொண்டு கரும்பலகையில் பாடம் நடத்தினால் புரியவே புரியாது.
2 - அப்ப விமர்சனம் எழுத வேண்டியது தானே.
1- நான் எழுதி விடுவேன், என் மனதில் பட்டதை தான் நான் எழுதுவேன், அதுவும் நான் நம்பும் மனிதர்களுக்கு தான் எழுதுவேன், காரணம் நான் எழுதப்போய் அதை அவர்கள் தப்பாக எடுத்துக் கொண்டால் அது பிரச்சனை இல்லையா. அதனால் தான் அதுவும் இல்லாமல் இந்த தொடர்கதைகள் பக்கம் நான் தலைவைத்து படுப்பதில்லை, காரணம் என் மனதில் பட்டதை எழுதப்போய், திரியின் உரிமையாளருக்கு அது மனகஷ்டத்தை உண்டு செய்து, திரியை தொடரமுடியாமல் போய்விட்டால் எனக்கு கஷ்டமாக ஆகிவிடும் அதனால் தான். நீ போட வேண்டியது தானே.
2 - இரு அவர் இப்ப தானே கொஞ்சம் எழுதி இருக்காறு இன்னும் நிறைய இருக்கே அப்புறம் விமர்சனம் எழுதுவோம்.
1 - கண்டிப்பாக ஒரு நாவலின் முதல் பத்து பக்கங்கள் தான் முக்கியமானது. காரணம் இந்த நாவலை படிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வைப்பது அந்த பக்கங்கள் தான், இந்த கதையை பொறுத்த வரை அதற்கான வாய்ப்பு இல்லை.
2 - பின் வரும் பாகங்களில் சுவாரஸ்யம் கூட வாய்ப்பு இருக்கலாம் இல்லையை.
1 - வாசகன் அந்த பக்கம் வரை வந்தால் தானே அதற்கு வாய்ப்பு இருக்கிறது. 9 பக்கத்தோடு புத்தகத்தை ஓரம் கட்டி விட்டால். என்ன செய்வது. தோ பாரு ஆதி தாமரை என்ற மனிதனை பற்றி தமிழ்மன்றத்தில் இருக்கும் அனைவரும் அறிவார்கள். அவரின் எழுத்துக்கு என்ற ஒரு மரியாதை இருக்கிறது. எதாவது அவர் நல்லது சொல்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால் உலக வாசகர்கள் என்பது தமிழ்மன்றம் மட்டுமல்ல, தாமரை நல்ல விஷயங்களை தான் சொல்வார் என்று குருடாம்போக்கில் நம்பவேண்டிய அவசியம் உலக வாசகனுக்கு கிடையாது. அதே போல தாமரையின் மனது நோகாமல் விமர்சனம் அளிக்க வேண்டும் என்றும் அவன் நினைக்க மாட்டான். அவர்களை பொறுத்த வரை தாமரை ஒரு எழுத்தாளன், அவரின் முதல் நாவல் இது, அதில் இருக்கும் விஷயங்கள் சரியா தப்பா, சுவாரஸ்யமா இருக்கிறதா இல்லையா, படிக்கலாமா வேண்டாமா என்று தான் யோசிப்பானே ஒழிய. அங்கு தாமரையின் பெயர் கூட நினைவுக்கு வராது. இதே போல தாமரை ஒரு கன்னி எழுத்தாளர் என்றால் அவரை நாம் உற்சாம மூட்டி தேத்தி எழுத வைக்கலாம். ஆனால் அவரோ உலக விஷயத்தில் இருந்து ப்ளூட்டோ வரை விவரிப்பவர், அத்தகைய எழுதாளனிடம் இருந்து இந்த மாதிரி ஒரு நாவலோ, தொடர்கதையோ நான் எதிர்பார்க்கவில்லை.
கதையில் வரும் சிந்தனைவாதிகளுக்கு.............. ஒரு வாசகனின் வேண்டுகோள்.
அறிவரைகளை தேனில் நனைத்து கொடுங்கள் சாப்பிடுகிறோம், ஆனால் வேப்பிலையை ஒரு சிந்தனைவாதி அப்படியே சாப்பிட்டான் என்றால் நாங்களும் அதை அப்படியே சாப்பிடுவதற்கு நாங்களும் சிந்தனைவாதிகள் கிடையாது......... அப்படி அது நல்லது என்று நாங்கள் சாப்பிட்டால், நாங்கள் கதை எழுத நீங்கள் அதை படித்துக் கொண்டு இருப்பீர்கள்.......... தேனில் வைத்து கொடுத்தால் சாப்பிட்டுகிறோம் என்பதால் ஊட்டிக் கொண்டே இருக்காதீர்கள்... வாந்தி தான் வரும்...........
தமிழ்மன்ற தாமரை என்ற பர்சனாலிட்டியை தூக்கி எறிந்து விட்டு, அனுபவஸ்தன் தாமரை என்ற எழுத்தாளனை துணைக்கு வைத்துக் கொண்டு எழுதுங்கள்.............. என்னைப் போன்ற கடைநிலை வாசகனும் மனநிறைவோடு உடன் வருவோம்.
வாழ்த்துக்கள்
தம்பி தக்ஸ்