த.ஜார்ஜ்
01-09-2010, 05:47 PM
அந்த கூட்டத்தில் தெரியாதனமாக மாட்டிக்கொண்டேன்.
மாலை நேரத்தில் ஜான்சன் தொலைபேசியில் கூப்பிட்டான். “வீட்டுலதானே இருக்க”
“ஆமா. “ என்று தெரியாதனமாக சொல்லிவிட்டேன்.
“அங்கேயே இரு.இப்ப வரேன்.”
விளக்கு வைக்கிற நேரத்தில் புத்தம் புதிய காரில் வந்து தெருவை மிரள விட்டான். காரில் அலறிய பாட்டுக்கு போட்டியாக நாய்கள் குரைத்தன.
அவன் நண்பன் புதிய கார் வாங்கியிருக்கிறானாம். அதை ‘கொண்டாடி’ விட்டு வந்திருக்கிறார்கள். என் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டுமாம். மெனக்கெட்டு வந்திருக்கிறான்.
வந்தவர்கள் வீட்டை இரண்டாக்கினார்கள்.
அவன் நண்பன் வெளிநாட்டில் வேலையிருப்பதாகச் சொன்னான். அவன் என் மனைவியைப் பார்த்து உங்கள் பெயர் A யிலிருந்து C க்குள் தொடங்கும் சரியா? என்று கேட்டு அசத்தினான். முகத்தைப் பார்த்தே அவன் கணித்தவைகளைக் கேட்டு எல்லோருக்குமே இலவச ஆரூடம் கேட்கும் ஆசை வந்துவிட்டது.
நண்பர்களின் உற்சாக [பான] கலகலப்பில் நேரம் போனதே தெரியவில்லை. தெரு கலைத்து போட்ட மாதிரி ஆகிவிட்டது. பக்கத்து வீடுகள் தொந்தரவு பொறுக்க முடியாமல் எட்டிப் பார்த்தன.
“சரி. நேரமாயிட்டது. கிளம்பு. சாரைக் கொண்டு அவர் வீட்டில விட்டுட்டு வந்திருவோம்.” ஜான்சன் விரட்டினான். அவன் சொன்ன ஊருக்கு போக இருபது கிலோமீட்டர்களாவது போகவேண்டியிருக்கும்.
மணி பதினொன்று. தயங்கினேன்.
“இங்க இருந்து என்ன பண்ணப் போற. வா சும்மா ஜாலியா..”
இப்படிதான் மாட்டிக்கொண்டேன்.
வெளியே நல்ல இருட்டு. லேசான சாரல் மழை.
வெர்சா காரில் 6 பேர் இருந்தோம்.
அந்த நண்பனின் நண்பன் செல்பேசி எடுத்து யாரையோ கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தான். பத்து நிமிசம் பேசியதில் பாலன்ஸ் தீர்ந்ததும் நிறுத்தினான். வெளி நாட்டுக்கு பேசினானாம்.
திடீரென்று கூடவந்த மற்றோரு நண்பன் உற்சாகத்தைக் காட்டுவதற்காக ‘-------‘ என்று கெட்ட வார்த்தையை கூவினான்.
வெளி நாட்டு நண்பருக்கு வந்ததே கோபம். “எனக்கு இப்படி கெட்ட வார்த்தையெல்லாம் பேசுறது பிடிக்காது.” என்றார். முதலில் கூவியவர் மறுபடியும் வேண்டுமென்றே கத்தினார்.
“லேய்.அறிவு இருக்கால உனக்கு. குடிச்சா இப்படிதான் கெட்டவார்த்தை பேசணுமா. அதான் பிடிக்காதுன்னு சொல்றேன்ல.. நான் சொன்ன பிறகும் நீ எப்படி பேசலாம். நிறுத்து நிறுத்து. வண்டிய நிறுத்து.”
ஓட்டிக் கொண்டிருந்த ஜான்சன் ஓரமாய் நிப்பாட்டினான்.’ யேய் இவனே பேசாமா இருக்க மாட்டியா” என்று கத்தியவனை திட்டிக்கொண்டு நண்பரை சமாதானப் படுத்த திரும்பினான்.
நண்பரோ அதற்குள் கார் கதவை திறந்துகொண்டு வெளியே இறங்கினார்.” நீங்க போங்க நான் இந்த வண்டியில வரல..”
நொந்தபடி வெளியே இறங்கினோம். வெளியே ஒருவரை ஒருவர் தெரியாத அளவுக்கு இருட்டு. இவன் எங்கே போனானோ. கார் வெளிச்சத்தில் பக்கத்தில் குளம் என்பது தெரிந்தது. தாமரை படர்ந்திருந்தது.
ஜான்சன் கூப்பிட்டுப் பார்த்தான். பதிலில்லை. பின்னால் வந்த லாறி வெளிச்சத்தில் சாலையை கவனித்ததில் மனித உருவமே தென்படவில்லை. “இவன் எங்கல போய் தொலஞ்சான். தண்ணி வாங்கி தந்துட்டு ராத்திரி பூரா வேலை வாங்கிருவான் போல இருக்கே.”
கெட்ட வார்த்தை சொன்னவனை ஆளாளுக்கு வறுத்தெடுக்க அவன் போதை இறங்கினான்.
இரண்டு பேர் சாலையின் வலதும் இடப்பக்கமுமாக சிறிது தூரம் நடந்து போய் தேடியாயிற்று. ம்ஹூம்.. அதற்குள் எங்கே போயிருப்பான்.
ஒருவேளை காரில் இருந்து இறங்கியதில் தடுமாறி விழுந்து குளத்துக்குள் விழுந்திருப்பானோ.. அந்த நினைப்பிற்கே ஒரு நிமிடம் மூச்சே நின்றது..
வேறு வழியில்லை. குளத்தில் இறங்கி பார்த்து விட வேண்டியதுதான்.
காரை சற்று பின்னால் நகர்த்தி ஹெட்லைட்டை போட்டு.. குளத்தில் லேசாக வெளிச்சம் விழ... ஒருவன் பான்ட் சட்டையை கழற்றி குளத்தில் இறங்க தயாரான போது-
கார் கதவைத் திறக்கும் ஓசைக் கேட்டது.
திடுக்கிட்டுத் திரும்பினால் காரருகே ஒரு உருவம். ஒருவரையொருவர் கையை பிடித்துக் கொண்டோம். பயம் எல்லொருக்குள்ளும் இருப்பது நடுக்கத்தில் தெரிந்தது.
“அங்க என்னல பண்ணிட்டு இருக்கீங்க வாங்க போவோம்” குரல் அவன்தான் என்று உறுதிபடுத்திய பிறகுதான் நிம்மதி வந்தது.
பாவி ஓசைப்படாமல் குளக்கரையை நாறடித்து விட்டு வந்திருப்பது பிறகுதான் தெரிய வந்தது..
மாலை நேரத்தில் ஜான்சன் தொலைபேசியில் கூப்பிட்டான். “வீட்டுலதானே இருக்க”
“ஆமா. “ என்று தெரியாதனமாக சொல்லிவிட்டேன்.
“அங்கேயே இரு.இப்ப வரேன்.”
விளக்கு வைக்கிற நேரத்தில் புத்தம் புதிய காரில் வந்து தெருவை மிரள விட்டான். காரில் அலறிய பாட்டுக்கு போட்டியாக நாய்கள் குரைத்தன.
அவன் நண்பன் புதிய கார் வாங்கியிருக்கிறானாம். அதை ‘கொண்டாடி’ விட்டு வந்திருக்கிறார்கள். என் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டுமாம். மெனக்கெட்டு வந்திருக்கிறான்.
வந்தவர்கள் வீட்டை இரண்டாக்கினார்கள்.
அவன் நண்பன் வெளிநாட்டில் வேலையிருப்பதாகச் சொன்னான். அவன் என் மனைவியைப் பார்த்து உங்கள் பெயர் A யிலிருந்து C க்குள் தொடங்கும் சரியா? என்று கேட்டு அசத்தினான். முகத்தைப் பார்த்தே அவன் கணித்தவைகளைக் கேட்டு எல்லோருக்குமே இலவச ஆரூடம் கேட்கும் ஆசை வந்துவிட்டது.
நண்பர்களின் உற்சாக [பான] கலகலப்பில் நேரம் போனதே தெரியவில்லை. தெரு கலைத்து போட்ட மாதிரி ஆகிவிட்டது. பக்கத்து வீடுகள் தொந்தரவு பொறுக்க முடியாமல் எட்டிப் பார்த்தன.
“சரி. நேரமாயிட்டது. கிளம்பு. சாரைக் கொண்டு அவர் வீட்டில விட்டுட்டு வந்திருவோம்.” ஜான்சன் விரட்டினான். அவன் சொன்ன ஊருக்கு போக இருபது கிலோமீட்டர்களாவது போகவேண்டியிருக்கும்.
மணி பதினொன்று. தயங்கினேன்.
“இங்க இருந்து என்ன பண்ணப் போற. வா சும்மா ஜாலியா..”
இப்படிதான் மாட்டிக்கொண்டேன்.
வெளியே நல்ல இருட்டு. லேசான சாரல் மழை.
வெர்சா காரில் 6 பேர் இருந்தோம்.
அந்த நண்பனின் நண்பன் செல்பேசி எடுத்து யாரையோ கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தான். பத்து நிமிசம் பேசியதில் பாலன்ஸ் தீர்ந்ததும் நிறுத்தினான். வெளி நாட்டுக்கு பேசினானாம்.
திடீரென்று கூடவந்த மற்றோரு நண்பன் உற்சாகத்தைக் காட்டுவதற்காக ‘-------‘ என்று கெட்ட வார்த்தையை கூவினான்.
வெளி நாட்டு நண்பருக்கு வந்ததே கோபம். “எனக்கு இப்படி கெட்ட வார்த்தையெல்லாம் பேசுறது பிடிக்காது.” என்றார். முதலில் கூவியவர் மறுபடியும் வேண்டுமென்றே கத்தினார்.
“லேய்.அறிவு இருக்கால உனக்கு. குடிச்சா இப்படிதான் கெட்டவார்த்தை பேசணுமா. அதான் பிடிக்காதுன்னு சொல்றேன்ல.. நான் சொன்ன பிறகும் நீ எப்படி பேசலாம். நிறுத்து நிறுத்து. வண்டிய நிறுத்து.”
ஓட்டிக் கொண்டிருந்த ஜான்சன் ஓரமாய் நிப்பாட்டினான்.’ யேய் இவனே பேசாமா இருக்க மாட்டியா” என்று கத்தியவனை திட்டிக்கொண்டு நண்பரை சமாதானப் படுத்த திரும்பினான்.
நண்பரோ அதற்குள் கார் கதவை திறந்துகொண்டு வெளியே இறங்கினார்.” நீங்க போங்க நான் இந்த வண்டியில வரல..”
நொந்தபடி வெளியே இறங்கினோம். வெளியே ஒருவரை ஒருவர் தெரியாத அளவுக்கு இருட்டு. இவன் எங்கே போனானோ. கார் வெளிச்சத்தில் பக்கத்தில் குளம் என்பது தெரிந்தது. தாமரை படர்ந்திருந்தது.
ஜான்சன் கூப்பிட்டுப் பார்த்தான். பதிலில்லை. பின்னால் வந்த லாறி வெளிச்சத்தில் சாலையை கவனித்ததில் மனித உருவமே தென்படவில்லை. “இவன் எங்கல போய் தொலஞ்சான். தண்ணி வாங்கி தந்துட்டு ராத்திரி பூரா வேலை வாங்கிருவான் போல இருக்கே.”
கெட்ட வார்த்தை சொன்னவனை ஆளாளுக்கு வறுத்தெடுக்க அவன் போதை இறங்கினான்.
இரண்டு பேர் சாலையின் வலதும் இடப்பக்கமுமாக சிறிது தூரம் நடந்து போய் தேடியாயிற்று. ம்ஹூம்.. அதற்குள் எங்கே போயிருப்பான்.
ஒருவேளை காரில் இருந்து இறங்கியதில் தடுமாறி விழுந்து குளத்துக்குள் விழுந்திருப்பானோ.. அந்த நினைப்பிற்கே ஒரு நிமிடம் மூச்சே நின்றது..
வேறு வழியில்லை. குளத்தில் இறங்கி பார்த்து விட வேண்டியதுதான்.
காரை சற்று பின்னால் நகர்த்தி ஹெட்லைட்டை போட்டு.. குளத்தில் லேசாக வெளிச்சம் விழ... ஒருவன் பான்ட் சட்டையை கழற்றி குளத்தில் இறங்க தயாரான போது-
கார் கதவைத் திறக்கும் ஓசைக் கேட்டது.
திடுக்கிட்டுத் திரும்பினால் காரருகே ஒரு உருவம். ஒருவரையொருவர் கையை பிடித்துக் கொண்டோம். பயம் எல்லொருக்குள்ளும் இருப்பது நடுக்கத்தில் தெரிந்தது.
“அங்க என்னல பண்ணிட்டு இருக்கீங்க வாங்க போவோம்” குரல் அவன்தான் என்று உறுதிபடுத்திய பிறகுதான் நிம்மதி வந்தது.
பாவி ஓசைப்படாமல் குளக்கரையை நாறடித்து விட்டு வந்திருப்பது பிறகுதான் தெரிய வந்தது..