PDA

View Full Version : என்னுள்ளே



சுடர்விழி
31-08-2010, 01:27 AM
ஏதோ ஒரு இறுக்கம்...
கதறி அழத் தோன்றும் துக்கம்
யாருமே இல்லை போன்றதொரு ஏக்கம்......
இசையில் கரைக்க முயல்கிறேன்
வென்றது என்னை
புத்தகத்தில் மறக்க நினைக்கிறேன்
புதைத்தது என்னை
தூக்கத்தில் கூட விடுவதில்லை
கனவாக மிரட்டல்
அடிக்கடி அடிவயிற்றை
அழுத்தும் சோகம்
என்ன செய்தாலும் எதுவோ
என்னை தொல்லை செய்கிறது
எங்கு சென்றாலும் நிழல்சுமையாய்
தலையில் இறங்கும் பாரம்
அழ வைப்பதா உன் நோக்கம் ??
இதில் மட்டும் தோற்று விடுவாய்...
கண்ணீர் சுரப்பிகள்
வேலைப் பளு மிகுதியால்
பழுதாகி கட்டாய ஒய்வெடுத்துச்
சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது
இன்றோடு ஒரு முடிவு செய்தே தீருவது
என்ற தீர்மானத்துடன்
என்னுள் வலை வீசுகிறேன்..
எத்தனையோ குப்பைகளுக்கு மத்தியில்
அழிந்தே விட்டது என்று நான்
நம்பத் துணிந்த என் ”சுயம்”
எங்கோ ஒட்டிக் கொண்ட மிச்சத்தின் துகளாய்
ஏக்கப் பார்வை பார்க்கிறது என்னை.....


--சுடர்விழி

"பொத்தனூர்"பிரபு
31-08-2010, 02:48 AM
அழ வைப்பதா உன் நோக்கம் ??
இதில் மட்டும் தோற்று விடுவாய்...
கண்ணீர் சுரப்பிகள்
வேலைப் பளு மிகுதியால்
பழுதாகி கட்டாய ஒய்வெடுத்துச்
சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது
/////

ஆழமான சோகம் ..

கீதம்
31-08-2010, 03:50 AM
சுயம் தொலைந்த (தொலைத்த?) துக்கம்,
ஆற்றாமையாய் மாறி வெளிப்படுகிறது, கவி வரிகளில்!

மிச்சத்தின் துகளாயேனும் கண்ணில் தட்டுப்பட்டதே! அதுவரைக்கும் மகிழ்ச்சிதான்!

பாராட்டுகள், சுடர்விழி.

சிவா.ஜி
31-08-2010, 07:28 AM
துக்கத்தில் பெரிது சுயம் தொலைந்துபோதல். ஆனால்...அதனை அத்தனை சுலபமாய் தொலைய விட்டுவிடக்கூடாது. மிச்சமிருக்கும் சிறு துகளைக் கொண்டே முழுதையும் மீட்டெடுக்க வேண்டும்.

வாழ்த்துக்கள் சுடர்விழி.

சுடர்விழி
31-08-2010, 07:41 AM
அழ வைப்பதா உன் நோக்கம் ??
இதில் மட்டும் தோற்று விடுவாய்...
கண்ணீர் சுரப்பிகள்
வேலைப் பளு மிகுதியால்
பழுதாகி கட்டாய ஒய்வெடுத்துச்
சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது
/////

ஆழமான சோகம் ..

சுயம் தொலைத்தல் மிகவும் கொடுமையான விஷயம்..

சுடர்விழி
31-08-2010, 07:42 AM
சுயம் தொலைந்த (தொலைத்த?) துக்கம்,
ஆற்றாமையாய் மாறி வெளிப்படுகிறது, கவி வரிகளில்!

மிச்சத்தின் துகளாயேனும் கண்ணில் தட்டுப்பட்டதே! அதுவரைக்கும் மகிழ்ச்சிதான்!

பாராட்டுகள், சுடர்விழி.

நன்றி கீதம் !! முழுதும் தொலையாதது மகிழ்ச்சி தான்..

சுடர்விழி
31-08-2010, 07:44 AM
துக்கத்தில் பெரிது சுயம் தொலைந்துபோதல். ஆனால்...அதனை அத்தனை சுலபமாய் தொலைய விட்டுவிடக்கூடாது. மிச்சமிருக்கும் சிறு துகளைக் கொண்டே முழுதையும் மீட்டெடுக்க வேண்டும்.

வாழ்த்துக்கள் சுடர்விழி.

நீங்கள் சொல்வது மிகவும் சரி சிவா அண்ணா..அத்தனை சுலபமாய் தொலைய விடக்கூடாது..சிறு துகளைக் கொண்டு மீட்டு விடலாம்...உங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா !

பிரேம்
31-08-2010, 08:14 AM
எங்கேயாவது கடன் வாங்கிட்டீங்களா..?
ஹி..ஹி..

நல்ல கவிதை...

சுடர்விழி
31-08-2010, 08:20 AM
பாராட்டுக்கு நன்றி நண்பரே !