சசிதரன்
30-08-2010, 04:00 PM
புன்னகையோ கண்ணீரோ
ஏதோவொன்று எப்பொழுதும்
தேவையாயிருக்கிறது
என் முகம் மறைக்கும் முகமூடியாய்.
வேண்டாத விருப்பங்களில்
திணிக்கப்படும் போதெல்லாம்..
போலியாய் புன்னகைத்து
பிறரறியாமல் அழுகிறேன்.
எனக்கான காரணங்கள்
எதுவுமின்றி
அழவும் சிரிக்கவும்
பழகிவிட்டேன்.
என் முகமூடியை
அடையாளம் காணும் உங்களுக்கு
என் முகம்
தெரிவதே இல்லை.
போலியாய் புன்னகைத்து
போலியாய் அழுது
போலியாய் வாழ்கிறேன்..
நீங்கள் பார்க்கும் நான்
உண்மையில் நானில்லை.
உண்மையான நான்...
உங்களுக்கு அவசியமேயில்லை.
உங்கள் புன்னகைகளை
என் உதடுகளில்
பொறுத்தி விட்டீர்கள்..
உங்கள் கண்ணீரை
என் கண்களில்
வழிய விட்டீர்கள்...
நீங்கள் முகம் பார்க்கும்
நிலைக் கண்ணாடியென
என்னை மாற்றி விட்டீர்கள்.
உங்கள் இரவுகளின்
குளிர் போக்க..
என் கனவுகள்
எரிக்கபடுகிறது.
எரியும் கனவுகளோடு
கொஞ்சம் கொஞ்சமாய்
எரிந்துக் கொண்டிருக்கிறேன்
நானும்.
ஏதோவொன்று எப்பொழுதும்
தேவையாயிருக்கிறது
என் முகம் மறைக்கும் முகமூடியாய்.
வேண்டாத விருப்பங்களில்
திணிக்கப்படும் போதெல்லாம்..
போலியாய் புன்னகைத்து
பிறரறியாமல் அழுகிறேன்.
எனக்கான காரணங்கள்
எதுவுமின்றி
அழவும் சிரிக்கவும்
பழகிவிட்டேன்.
என் முகமூடியை
அடையாளம் காணும் உங்களுக்கு
என் முகம்
தெரிவதே இல்லை.
போலியாய் புன்னகைத்து
போலியாய் அழுது
போலியாய் வாழ்கிறேன்..
நீங்கள் பார்க்கும் நான்
உண்மையில் நானில்லை.
உண்மையான நான்...
உங்களுக்கு அவசியமேயில்லை.
உங்கள் புன்னகைகளை
என் உதடுகளில்
பொறுத்தி விட்டீர்கள்..
உங்கள் கண்ணீரை
என் கண்களில்
வழிய விட்டீர்கள்...
நீங்கள் முகம் பார்க்கும்
நிலைக் கண்ணாடியென
என்னை மாற்றி விட்டீர்கள்.
உங்கள் இரவுகளின்
குளிர் போக்க..
என் கனவுகள்
எரிக்கபடுகிறது.
எரியும் கனவுகளோடு
கொஞ்சம் கொஞ்சமாய்
எரிந்துக் கொண்டிருக்கிறேன்
நானும்.