எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-08-2010, 07:26 AM
அன்றைய ஆதவன்
அறவே எழவில்லை
இருளை இறுத்திப் பிடித்தமர்ந்திருந்தது
அவ்விரக்கமன்ற இரவொன்று,
அவரவர் முற்றச் சாளரங்களினூடே
அந்நிலவெளிச்சம் ஒழுகிக்கொண்டிருந்தது
ஓயார நீளிரைச்சலில்
சுரமற்றதொரு வெற்றுக் காற்றை
வெளித் துப்பிக்கொண்டிருந்தன
சூழ் வாழ் இரவு ஜந்துக்கள்
காலம் கடந்த கதிரவன் நோக்கி
கிழக்கு நோக்கி தவம் கிடந்தன
கூவல்களற்ற சேவல்கள்
உலக மொத்தக் குழுமத்தினொரு பகுதி
கோயில் மசூதி தேவாலயங்களில்
குழுமிக்கிடந்தனர் பகல் வேண்டி
ஒற்றைக் குழந்தை வேண்டும்
உற்ற மலடி போல்
எப்படியிருக்கும் அந்த உலகு?
அப்படித்தானிருந்தது அத்தார்ச்சாலை -
அவளின்றிய அஞ்ஞாயிறில்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
அறவே எழவில்லை
இருளை இறுத்திப் பிடித்தமர்ந்திருந்தது
அவ்விரக்கமன்ற இரவொன்று,
அவரவர் முற்றச் சாளரங்களினூடே
அந்நிலவெளிச்சம் ஒழுகிக்கொண்டிருந்தது
ஓயார நீளிரைச்சலில்
சுரமற்றதொரு வெற்றுக் காற்றை
வெளித் துப்பிக்கொண்டிருந்தன
சூழ் வாழ் இரவு ஜந்துக்கள்
காலம் கடந்த கதிரவன் நோக்கி
கிழக்கு நோக்கி தவம் கிடந்தன
கூவல்களற்ற சேவல்கள்
உலக மொத்தக் குழுமத்தினொரு பகுதி
கோயில் மசூதி தேவாலயங்களில்
குழுமிக்கிடந்தனர் பகல் வேண்டி
ஒற்றைக் குழந்தை வேண்டும்
உற்ற மலடி போல்
எப்படியிருக்கும் அந்த உலகு?
அப்படித்தானிருந்தது அத்தார்ச்சாலை -
அவளின்றிய அஞ்ஞாயிறில்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ