கலையரசி
22-08-2010, 02:40 PM
பண்பட்ட நிலமென
நம் மனமிருந்தால்
அம்மண்ணுக் குள்ளே
வீழ்கின்ற விதைகள்,
விண்ணைத் தொடும்
விருட்சங்களாகலாம்!
தன்னகத்தே துளியேனும்
ஈரமெனும் இரக்கமிருந்தால்,
கருணை மழை பொழிந்து
இரந்தோர் துயர் துடைத்து
இறவாப் புகழ் எய்தலாம்!
பொறாமை எனும் நெருப்புக்கு
மனதில் இடங் கொடுத்தால்,
பொன் விளையும் பூமியைக்கூட
காட்டுத் தீயாய்ப் பொசுக்கி
கட்டாந்தரை ஆக்கி விடும்!
கோபம் எனும் சூறாவளிக்குள்
நாம் அகப்பட்டுக் கொண்டால்,
கண் மண் தெரியாமல்
சுழன்றடிக்கும் பேய்க்காற்றில்,
குடும்பம் எனும் ஆலமரமே
ஆணி வேரறுபட்டுச் சாயக்கூடும்!
திக்குத் தெரியாத காட்டில்
திசை மாறிய பறவைகளாய்ச்
கூடியிருந்த சுற்றமும் நட்பும்!
காட்டாற்று வெள்ளம் போல்
தறி கெட்டோடும் எண்ணங்களைக்
கரையெனும் நல்லொழுக்கத்தால்
கட்டுக்குள் கொண்டு வந்து
அமைதியான நதியினிலே
வாழ்க்கையெனும் ஓடத்தைச்
செலுத்துவோமாயின்
இனிய பூஞ்சோலையாகும்
நம் இல்லம்!
வாழ்வில் என்றென்றும் வீசும்
குளிர் தென்றல்!
நம் மனமிருந்தால்
அம்மண்ணுக் குள்ளே
வீழ்கின்ற விதைகள்,
விண்ணைத் தொடும்
விருட்சங்களாகலாம்!
தன்னகத்தே துளியேனும்
ஈரமெனும் இரக்கமிருந்தால்,
கருணை மழை பொழிந்து
இரந்தோர் துயர் துடைத்து
இறவாப் புகழ் எய்தலாம்!
பொறாமை எனும் நெருப்புக்கு
மனதில் இடங் கொடுத்தால்,
பொன் விளையும் பூமியைக்கூட
காட்டுத் தீயாய்ப் பொசுக்கி
கட்டாந்தரை ஆக்கி விடும்!
கோபம் எனும் சூறாவளிக்குள்
நாம் அகப்பட்டுக் கொண்டால்,
கண் மண் தெரியாமல்
சுழன்றடிக்கும் பேய்க்காற்றில்,
குடும்பம் எனும் ஆலமரமே
ஆணி வேரறுபட்டுச் சாயக்கூடும்!
திக்குத் தெரியாத காட்டில்
திசை மாறிய பறவைகளாய்ச்
கூடியிருந்த சுற்றமும் நட்பும்!
காட்டாற்று வெள்ளம் போல்
தறி கெட்டோடும் எண்ணங்களைக்
கரையெனும் நல்லொழுக்கத்தால்
கட்டுக்குள் கொண்டு வந்து
அமைதியான நதியினிலே
வாழ்க்கையெனும் ஓடத்தைச்
செலுத்துவோமாயின்
இனிய பூஞ்சோலையாகும்
நம் இல்லம்!
வாழ்வில் என்றென்றும் வீசும்
குளிர் தென்றல்!