அமரன்
13-08-2010, 07:28 PM
அன்பர்களே..
இதை எழுதலாமா வேண்டாமா என்று பலத்த போராட்டம், சில நாட்களாக.. வேண்டாம் என்ற பக்கம் போகப் பல வலுவான காரணங்கள் இருந்தாலும் ஏதோ ஒன்று எழுது என்று கட்டளை இட்டது. இன்னது என்று தெரியாத அதுவே இத்தால் விளையும் அனைத்தும் காரணம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சூழ்ந்து கொண்ட சூன்யம் அண்மையில்தான் விலகியதாகத் தெரிகிறது.
அதென்ன கடந்த ஆண்டு மார்ச் மாதம்? என்ற கேள்வி உங்களைப் போலவே எனக்கும் எழுகிறது. பதில்தான் தெரியவில்லை. ஆனால் மேலே சொன்னது உண்மை என்பதில் உறுதியாக உள்ளேன். ஏனெனில் மார்ச் மாதத்துக்கு முந்திய மன்றப் பதிவுகள் பல செந்தனற் பூக்களாக நெஞ்சில் நிற்க அதுக்குப் பிந்திய மன்றம் கண்ட பதிவுகள் எதுவும் மனசில் பதியவில்லை. இத்தனைக்கும் சில பதிப்புகளைத் தவிர அத்தனையும் படித்திருக்கிறேன். இதைப் படித்திருக்கிறேனா என்பதைக் கூட படித்தவர் பட்டியலைப் பார்த்து அறிந்து கொள்ளும் நிலையில் கடந்த 17 மாதங்கள் இருந்திருக்கிறேன் என்பது நானே வியக்கும் உண்மை.
அதுக்காக நான் அபாரமான ஞாபகத் திறன் கொண்டவன் என்று அர்த்தமல்ல. ஏதோ ஒரு அளவுக்கு ஞாபக ஆற்றல் கொண்டவன் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
மன்றத்தின் பதிவுகள் மட்டுமல்லாது, பார்த்த திரைப்படங்களும் மறந்து விட்டிருந்தன. இன்ன காட்சி இன்ன படத்தில் என்று அச்சொட்டாகச் சொல்லும் திறனையும் எங்கோ தொலைத்திருந்தேன். நடந்து முடிந்த நிகழ்வுகள் சிலதை, நடத்தி முடித்த நிகழ்ச்சிகள் சிலதை, எப்படி நடந்தது, எப்படி நடத்தினேன் என்று கூடத் தெரியாமல் இருக்கிறேன்.
ஏன்.....?
இந்தக் கேள்வியின் விடையும் வெறுமையாகத்தான் கிடக்கிறது. அந்த வெறுமைக்குள் நுழைந்து வெறுமையை விரட்ட முயன்றபோது, குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சில அசம்பாவிதங்களும் சந்தித்த பிரச்சினைகள் சிலவும் மங்கலாகத் தெரிகின்றன. ஆனால், அவை முற்றும் முடிந்திடவில்லை. ஜூலைக் கடைசியில் கூட உச்சமேறி மிச்சம் இருக்கின்றன, அப்படியே....
அப்படி இருக்க இப்ப கொஞ்ச நாளாக பழைய நிலைக்கு திரும்பியதாக எண்ணம். முன்பிருந்த என்னை எனக்குள் கண்டு பிடித்து மீட்டெடுத்து வந்ததாக உணர்வு. இதுக்கான மூலம் என்ன மாயம் என்பது இந்நொடி வரைக்கும் புரியவில்லை.
ஒரு வேளை, பிரச்சினைகளுக்குள் உள்நுழைந்து உலகத்தைப் பார்க்கும் தாமரை அண்ணா சொல்லும் நிலையை அடைந்து விட்டேனோ?
இதை எழுதலாமா வேண்டாமா என்று பலத்த போராட்டம், சில நாட்களாக.. வேண்டாம் என்ற பக்கம் போகப் பல வலுவான காரணங்கள் இருந்தாலும் ஏதோ ஒன்று எழுது என்று கட்டளை இட்டது. இன்னது என்று தெரியாத அதுவே இத்தால் விளையும் அனைத்தும் காரணம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சூழ்ந்து கொண்ட சூன்யம் அண்மையில்தான் விலகியதாகத் தெரிகிறது.
அதென்ன கடந்த ஆண்டு மார்ச் மாதம்? என்ற கேள்வி உங்களைப் போலவே எனக்கும் எழுகிறது. பதில்தான் தெரியவில்லை. ஆனால் மேலே சொன்னது உண்மை என்பதில் உறுதியாக உள்ளேன். ஏனெனில் மார்ச் மாதத்துக்கு முந்திய மன்றப் பதிவுகள் பல செந்தனற் பூக்களாக நெஞ்சில் நிற்க அதுக்குப் பிந்திய மன்றம் கண்ட பதிவுகள் எதுவும் மனசில் பதியவில்லை. இத்தனைக்கும் சில பதிப்புகளைத் தவிர அத்தனையும் படித்திருக்கிறேன். இதைப் படித்திருக்கிறேனா என்பதைக் கூட படித்தவர் பட்டியலைப் பார்த்து அறிந்து கொள்ளும் நிலையில் கடந்த 17 மாதங்கள் இருந்திருக்கிறேன் என்பது நானே வியக்கும் உண்மை.
அதுக்காக நான் அபாரமான ஞாபகத் திறன் கொண்டவன் என்று அர்த்தமல்ல. ஏதோ ஒரு அளவுக்கு ஞாபக ஆற்றல் கொண்டவன் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
மன்றத்தின் பதிவுகள் மட்டுமல்லாது, பார்த்த திரைப்படங்களும் மறந்து விட்டிருந்தன. இன்ன காட்சி இன்ன படத்தில் என்று அச்சொட்டாகச் சொல்லும் திறனையும் எங்கோ தொலைத்திருந்தேன். நடந்து முடிந்த நிகழ்வுகள் சிலதை, நடத்தி முடித்த நிகழ்ச்சிகள் சிலதை, எப்படி நடந்தது, எப்படி நடத்தினேன் என்று கூடத் தெரியாமல் இருக்கிறேன்.
ஏன்.....?
இந்தக் கேள்வியின் விடையும் வெறுமையாகத்தான் கிடக்கிறது. அந்த வெறுமைக்குள் நுழைந்து வெறுமையை விரட்ட முயன்றபோது, குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சில அசம்பாவிதங்களும் சந்தித்த பிரச்சினைகள் சிலவும் மங்கலாகத் தெரிகின்றன. ஆனால், அவை முற்றும் முடிந்திடவில்லை. ஜூலைக் கடைசியில் கூட உச்சமேறி மிச்சம் இருக்கின்றன, அப்படியே....
அப்படி இருக்க இப்ப கொஞ்ச நாளாக பழைய நிலைக்கு திரும்பியதாக எண்ணம். முன்பிருந்த என்னை எனக்குள் கண்டு பிடித்து மீட்டெடுத்து வந்ததாக உணர்வு. இதுக்கான மூலம் என்ன மாயம் என்பது இந்நொடி வரைக்கும் புரியவில்லை.
ஒரு வேளை, பிரச்சினைகளுக்குள் உள்நுழைந்து உலகத்தைப் பார்க்கும் தாமரை அண்ணா சொல்லும் நிலையை அடைந்து விட்டேனோ?