kulirthazhal
12-08-2010, 02:12 PM
நிலவில் பேசும்
மொழிகள் உந்தன்
நிழலில் கிடைத்தடி...,
நெருப்பும் மலரும்
கலவி உந்தன்
நிறமாய் பிறந்ததடி....,
சிறிதாய் வளையும்
உதட்டில் எந்தன்
ரேகை அலையுதடி...,
நிஜமும் கனவும்
விழியில் ஒன்றாய்
கலவரம் செய்யுதடி....,
வழக்கம் இழந்த
பாதைகளில் என்
பார்வை சுழலுதடி.....,
விருப்பம் திமிறி
மறைவை எதிர்த்து
வெளியே புரளுதடி....,
செருக்காய் நடக்கும்
சிந்தனையெல்லாம்
கருப்பாய் போனதடி...,
ஒற்றை ரோஜா
கனவினில் வந்து
பேயாய் ஆடுதடி...,
சிறிதாய் கிடைத்த
தரிசனத்தில் உனை
நினைவில் பதித்தேனே...,
போர்வை தொலைத்த
மனதில் உன்னை
அனலாய் அணைத்தேனே...,
சிற்பிகள்கூட
தொட்டுனை ஏங்க
சிலையாய் செய்யட்டுமா...,
சிறிதாய் குழப்பம்
இரண்டாம் விரலில்
மெட்டி இருந்திடுமோ...,
-குளிர்தழல்...
மொழிகள் உந்தன்
நிழலில் கிடைத்தடி...,
நெருப்பும் மலரும்
கலவி உந்தன்
நிறமாய் பிறந்ததடி....,
சிறிதாய் வளையும்
உதட்டில் எந்தன்
ரேகை அலையுதடி...,
நிஜமும் கனவும்
விழியில் ஒன்றாய்
கலவரம் செய்யுதடி....,
வழக்கம் இழந்த
பாதைகளில் என்
பார்வை சுழலுதடி.....,
விருப்பம் திமிறி
மறைவை எதிர்த்து
வெளியே புரளுதடி....,
செருக்காய் நடக்கும்
சிந்தனையெல்லாம்
கருப்பாய் போனதடி...,
ஒற்றை ரோஜா
கனவினில் வந்து
பேயாய் ஆடுதடி...,
சிறிதாய் கிடைத்த
தரிசனத்தில் உனை
நினைவில் பதித்தேனே...,
போர்வை தொலைத்த
மனதில் உன்னை
அனலாய் அணைத்தேனே...,
சிற்பிகள்கூட
தொட்டுனை ஏங்க
சிலையாய் செய்யட்டுமா...,
சிறிதாய் குழப்பம்
இரண்டாம் விரலில்
மெட்டி இருந்திடுமோ...,
-குளிர்தழல்...