View Full Version : இடுக்கண் வருங்கால்..!
பூமகள்
12-08-2010, 11:30 AM
http://img02.imagefra.me/img/img02/8/8/12/poomagal/f_14nb1xkkt8om_327f4d3.jpg
இடுக்கண் வருங்கால்..!
வெட்ட வெட்ட
வளரும் நகமாக
வளர்ந்து கீறும் நினைவுகள்..
அதிகம் வலித்த
தருணம் அனைத்தும்
ஒருங்கே கூறும் அவை..
உறவு தரும் வார்த்தை
உளியடியாய் இறங்கி
ஆறுதலுக்கு பதில்..
ஆறா வடுவாக்கும் நெஞ்சில்..
கதறி அழ நினைத்தும்
காய்ச்சல் குழந்தை முகம்
கலக்கமாய் நினைவூட்டும்
கசந்து வற்றும்
அம்மா பால்..!
மருத்துவர் சொல்படி
மென்று முழுங்கி
ஜீரணிக்க முயலும்
ஜீரணமாகாத நினைவுகளோடு
புதியதாய்
புதிய தாய்..!
Nivas.T
12-08-2010, 12:47 PM
அதை உணர்ந்தால் தான் எந்த பிரச்னையும் இராதே?
அழகான கவிதை
சுகந்தப்ரீதன்
12-08-2010, 04:31 PM
இடுக்கண் வருங்கால் நகுப்பதை விட இடுக்கண் வராமல் நடப்பது நன்றுதானே பூ..!!
அமரன் கட்சியில் அம்மணியும் சேந்தாச்சு போல... பின்ன இப்படி எளிதில் புரியாத ரீதியில் உருக்கமா எழுதுனா என்ன சொல்லுறதாம்..?!
வாழ்த்துக்கள்.. புதிய தாய்க்கு..!!:D
கீதம்
12-08-2010, 11:10 PM
'அதிகம் வலித்த தருணம் அனைத்தும் ஒருங்கே' என்பதில் பிதுங்கித் தெரிகிறது கவிதையின் மொத்த வலியும். அதைக் கலவரத்துடன் எடுத்தியம்புகிறன, கவிவரிகள்.
பிரச்சனையும், தீர்வும் பிணைந்திருக்கும் கவிதைக்கு என் பாராட்டுகள், பூமகள்.
குணமதி
13-08-2010, 03:31 AM
தலைப்பில் உள்ள தவற்றைத் திருத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
பூமகள்
13-08-2010, 03:41 AM
@நிவாஸ்,
பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் நிவாஸ் அண்ணா.
--
@சுகந்தவாசன்,
இடுக்கண் தாமே வருவதில்லை.. பல சமயம் தாமே வரும்.. அதை சமாளிப்பது தான் நம் சாமர்த்தியம் இல்லையா சுவா?? அந்த இக்கட்டான சூழலைக் கடக்கும் வரையிலும் "இதுவும் கடந்து போகும்!" என்று பொறுமையாய் இருப்பது தான் ஒரே வழி. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.
ஹா ஹா.. நானும் அமர் அண்ணாவின் தங்கை அல்லவா?? கொஞ்சமாச்சும் அந்த அடையாளம் இருக்கும் தானே.. அப்படியொன்றும் மறைபொருள் வைத்து கவிதை எழுதவில்லையே. என்ன சுவா.. நிஜமாவே புரியலையா?? :sprachlos020::sprachlos020:
பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சுவா.
பூமகள்
13-08-2010, 03:42 AM
@கீதம்,
சரியா பிடிச்சிட்டீங்க கவிதைக் கருவை.. நன்றிங்கள் கீதம் சகோதரி.
--
தலைப்பை மாற்றியாகிவிட்டது.. சுட்டியமைக்கு நன்றிகள் குணமதி சகோதரி. :)
வியாசன்
13-08-2010, 05:09 AM
உறவு தரும் வார்த்தை
உளியடியாய் இறங்கி
ஆறுதலுக்கு பதில்..
ஆறா வடுவாக்கும் நெஞ்சில்..
அதை தருவதற்குதானே உறவுகள் காத்திருக்கின்றன.
நச்சென்று உங்கள் வரிகள் மனிதில் படிந்துவிட்டது வாழ்த்தக்குள் பூமகள்
அமரன்
08-10-2010, 09:38 PM
இடுக்கண் வருங்கால்
வலக்கண் துடிக்கும்..
வலக்கண் துடிக்குங்கால்
இடக்கண் கலங்கும்..
இடரடக்கலில்
இடுக்கண் இடறும்..