கீதம்
12-08-2010, 04:15 AM
அலுவலகம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் அம்மாவின் வழக்கமான நெஞ்சுவலி மாத்திரையை வாங்கிக்கொண்டு திரும்பும்போதுதான் நீலாவைப் பார்த்தேன். அவள்தானா என்ற சந்தேகம் அவள் அருகில் வந்ததும் உறுதியானது.
"நீலா!" என்னையறியாமல் கூப்பிட்டுவிட்டேன்.
சட்டென திரும்பியவள், ஒருகணம் திகைத்துப் பின் சிநேகமாய் மலர்ந்தாள்.
"ஹே….வேதா! நீங்களா? நம்பவே முடியல. எவ்வளவு நாளாச்சு உங்களைப் பார்த்து!"
"ரெண்டு வருஷம் இருக்கும், இல்லே?" நான் சொல்லவும் அவள் ஆமோதித்தாள்.
"சந்தியா எப்படி இருக்கா? ஏதாவது விவரம் தெரியுமா?" அவள் என்னைக் கேட்க, நான் அதிர்ந்தேன்.
"நான் உன்னைக் கேட்கலாம்னு நினைச்சேன். நீ என்னைக் கேக்கறே? எனக்குத் தங்கைன்னாலும் என்னை விட உனக்குதானே நெருக்கமான தோழி. உனக்கு எதுவும் தெரியாதா?"
நான் ஏமாற்றத்துடன் கேட்டேன்.
"ப்ச்! நீங்களும் உங்க அம்மாவும் ஊரை விட்டுப் போனதுக்கப்புறம் நானும் கல்யாணமாகிப் போய்ட்டேன். எனக்கும் பல பிரச்சனைகள். அதுக்குப் பிறகு அந்த ஊர்பக்கமே தலை வச்சுப் படுக்கலை. எந்தத் தொடர்பும் இல்ல."
என்ன சொல்கிறாள்? ஊர்ப்பக்கமே போகவில்லை என்கிறாளே? நீலாவை எனக்கு மிகவும் பிடிக்கும். சந்தியாவுக்கு இவள் எப்படி தோழியானாள் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால் சந்தியாவின் காதல் நாடகம் அரங்கேறியபின் அம்மா இவளை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டார்கள்.
"நீயும் உடந்தைதானேடீ? எனக்குத் தெரியாதுன்னு சும்மா கதையளக்காதே. நீ மட்டும் உங்க அப்பா அம்மா சொல்றவனைக் கல்யாணம் பண்ணிகிட்டு சுகமா இருப்பே! என் மகள் ஒண்ணுமில்லாதவனோட ஓடிப்போய் சீரழியணுமா?"
எனக்கே சீ என்றிருந்தது. அம்மாவை அடக்கவும் முடியவில்லை. அம்மாவை மட்டுமல்ல, எவரையுமே எதிர்கொள்ளும் சக்தி எனக்கில்லை.
குனிந்த தலை நிமிராமல் செல்லும் என்னைப் பரிச்கசிக்கவென்றே ஒரு கூட்டம் எங்கள் தெருவில் இருந்தது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் யார் யாரென்று எனக்குத் தெரியாது. சந்தியாவுக்கு அவர்கள் எல்லோர் பெயரும் அத்துப்படி. சரியான துடுக்கு. எனக்காக அவர்களிடம் வம்புக்கும் செல்லத் தயங்கமாட்டாள்.
ஆனால் வீட்டுக்குள் என்னை ஒரு எதிரியாகவே பார்ப்பாள். ஒருநாளும் அன்பாய் ஆசையாய் பேசியது கிடையாது. இவ்வளவு ஏன்? என்னோடு சேர்ந்து நடக்கவும் விரும்ப மாட்டாள் என்றால் எந்த அளவுக்கு என்மீது அவளுக்கு வெறுப்பு என்பது புரியும்.
அப்பாவுக்குப் பின் இந்தக் குடும்பத்தை நான் தான் துக்கி நிறுத்துகிறேன் என்றாலும் அம்மாவை மறுத்து இதுவரை ஒரு வார்த்தை பேசியதில்லை. அதனாலேயே எப்போதும் நான் தான் அம்மாவின் செல்லம். சந்தியா என்னை வெறுக்க இதுவே முக்கியக் காரணம்.
என்னுடைய அமைதியான அடங்கிப்போகும் குணமும், சந்தியாவின் ஆர்ப்பாட்டமான துடுக்குத்தனமும் எப்போதும் எல்லோராலும் ஒப்பீடு செய்யப்பட்டு விமர்சனத்துக்குள்ளாவது எங்கள் இருவருக்குமே பிடிக்காத ஒன்று. இதுவும் எங்களுக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி உடன்பிறந்தவர்களுக்கிடையில் ஒரு பிளவை உண்டாக்கியிருந்தது.
எனக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருந்த சமயம், சந்தியா எங்கள் தெரு தையற்கடைப் பையனுடன் ஓடிப்போனாள். திடுதிப்பென்று நிகழ்ந்த நிகழ்வென்று சொல்லிவிடமுடியாது. ஜாக்கெட் தைக்கப்போகிறேன் என்று அடிக்கடி அங்கு போவாள். ஆனால் இப்படி இருக்குமோ என்ற சந்தேகம் யாருக்கும் துளியும் எழவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
ஓடிப்போவதற்கு முதல் நாள் என்னிடம் பேசினாளே! நான் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியுமோ? வழக்கம்போலவே என் கோழைத்தனம் என்னைக் கட்டிப்போட்டுவிட்டது.
"வேதா! நீ மட்டும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்தா போதும், பல பிரச்சனை தீர்ந்திடும். சம்பாதிச்சுக் கொடுக்கறதோட உன் கடமை தீர்ந்ததுன்னு நினைக்கிறே! யார் என்ன சொன்னாலும் உனக்குப் பிடிக்கலைன்னாலும் நீ தலையாட்டிட்டே இருந்தா ஒருநாள் உன் தலையிலேயே மிளகா அரைச்சிடுவாங்க."
"என்னை என்ன பண்ண சொல்றே?"
"நாளைக்கு நான் கேசவனோட புறப்படறேன். அவன் கையில் தொழில் இருக்கு. எங்க போனாலும் நாங்க பிழைச்சுக்குவோம்! ஆனா இது சரியில்லைன்னு நீ நினைச்சா இப்பவே அம்மாகிட்ட பேசி என் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிக்கொடு."
"நான் எப்படி சந்தியா...அம்மாகிட்ட....?"
"அப்ப…விடு! நான் போறதைப் பத்தி அம்மாகிட்ட மூச்சுவிடாதே. உனக்குப் புண்ணியமாப் போவும்!”
எதுவும் செய்யத்தோன்றாமல் விழித்தேன்.
"அப்புறம் இன்னொரு விஷயம். உன் கல்யாணத்தில் உனக்கு இஷ்டமில்லைன்னும் எனக்குத் தெரியும். அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிக்காம உனக்காகப் பண்ணிக்கோ. வாயைத் திறந்து உன் வாழ்க்கையையாவது காப்பாத்திக்கோ!"
என்னை நினைத்து எனக்கே பரிதாபம் உண்டானது. எனக்குப் பின் பிறந்தவள் எனக்கு புத்தி சொல்லிப் போகிறாள். நான் என்ன செய்வேன்? வாய் பேசும் துணிவு இருந்திருந்தால்தான் அன்றைக்கே அம்மாவிடம் சொல்லியிருப்பேனே!
நான் வாயைத் திறக்காமலேயே அந்த வரன் முறிந்துபோனது. எல்லாம் சந்தியாவின் கைங்கர்யம்தான். பின்னே? ஓடிப்போன பெண்ணின் வீட்டுடன் சம்பந்தம் செய்துகொள்ள எவர்தான் முன்வருவார்கள்?
நான் மனதளவில் சந்தியாவுக்கு நன்றி சொன்னேன். இருந்தாலும் அவள் எங்கு இருக்கிறாளோ? என்ன துன்பப்படுகிறாளோ? என்ற கவலை இருந்தது. கேசவன் எப்படிப்பட்டவன் என்று எனக்குத் தெரியாது. ஜாக்கெட் தைப்பதில் கெட்டிக்காரன் என்பது மட்டும் தான் தெரியும்.
சந்தியா ஓடிப்போனதும், என் திருமணம் தடைபட்டதும் அம்மாவுக்கு இரட்டை அதிர்ச்சி. எனக்கோ வெளியில் தலைகாட்டமுடியவில்லை. தெருவில் போகும்போதும் வரும்போதும் யாரோ யாருடனோ என்னைப் பற்றி, என் தங்கையைப் பற்றி, கிசுகிசுப்பதை உணரமுடிந்தது.
சந்தியா ஓடிப்போனதால் எங்கள் தெருவிலிருந்த பிரமாதமான ஒரு தையற்கலைஞரை இழந்த வருத்தம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. அம்மா உருக்குலைந்து போனார்கள். அம்மாவைத் தேற்றும் பொருட்டும் ‘உச்’ கொட்டும் ஊர்சனங்களிடமிருந்து என்னைத் தற்காக்கும் பொருட்டும் அவசர அவசரமாக மாற்றல் வாங்கி இந்த ஊருக்கு வந்தேன்.
எப்படியோ இரண்டு வருடம் ஓடிவிட்டது. அம்மாவுக்கும் பழகிவிட்டது. சந்தியாவின் நிலைதான் தெரியவில்லை. நீலாவுக்குத் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையும் அவளைச் சந்தித்த இந்த நொடியில் பொய்த்துப்போனது.
"என்ன வேதா, என்ன யோசிக்கிறீங்க?"
"பழசையெல்லாம் நினைச்சுகிட்டேன். அன்னைக்கு எங்க அம்மா உன்னைத் தவறாப் பேசினதையெல்லாம் மனசில் வச்சுக்காதே, நீலா. அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அம்மா இப்ப முன்னாடி மாதிரி இல்ல. நீ அவசியம் வீட்டுக்கு வரணும்."
"அம்மா பேசினதையெல்லாம் அப்பவே மறந்திட்டேன். நீங்க வருத்தப்படாதீங்க."
"நீலா, நீ எப்படி இருக்கே? உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார்? என்ன இந்தப் பக்கம்?"
"ரெண்டாவது கேள்வி தவிர்த்து மத்த ரெண்டுக்கும் பதில் என்கிட்ட இருக்கு. நான் நல்லா இருக்கேன். இங்கதான் வேலை பாக்கறேன்." பக்கத்து கடையை கண்களால் சுட்டினாள்.
"வாங்களேன், காப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாம்.."
நீலா அழைக்க, மறுக்க முடியாமல் தொடர்ந்தேன்.
கடைத்தெருவிலிருந்த பிரபல உணவகத்தில் நுழைந்தோம். எனக்கும் சேர்த்து அவளே ஆர்டர் செய்தாள்.
நீலாவின் கதையைக் கேட்பதா தவிர்ப்பதா ஒன்றும் புரியவில்லை. என் பிறவிக்குணம் என்னைக் கேட்கவிடாமல் தடுத்தது. கேட்பேனென்று எதிர்பார்த்திருப்பாள். கடைசியில் அவளாகவே சொல்லத் தொடங்கினாள்.
நீலாவின் கணவனுக்கு அவளுடனான திருமணத்தில் உடன்பாடு இல்லையாம். வேறு ஒரு பெண்ணை மணக்க விரும்பியிருந்தானாம். அவனுடைய பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் இவளைத் திருமணம் செய்தவன் ஒரு வாரத்துக்குள்ளாகவே தன் காதலியுடன் ஓடிவிட்டானாம். இரண்டு தரப்புப் பெற்றோரும் ஒருவரை ஒருவர் தூற்றிப் பழிசுமத்தி சண்டையிட்டுக்கொண்டனரே தவிர இவள் நிலை என்ன என்பதை யோசிக்க மறந்தே போனார்களாம். வெறுத்துப்போனவள், வேலை தேடிக்கொண்டு தனியே வந்துவிட்டாளாம்.
இதையெல்லாம் அவள் சிரித்துக்கொண்டே சொன்னாலும் உள்ளூர ஊறியிருக்கும் சோகத்தை என்னால் உணரமுடிந்தது. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல மனம் ஏங்கியது.
சந்தியா மட்டும் ஓடிப்போகாமல் இருந்திருந்தால்.... அம்மாவுக்கு இவள்மேல் வெறுப்புண்டாகாமல் இருந்திருந்தால்…….என் காதலை அன்றே அம்மாவிடம் சொல்லி இவளைக் கைப்பிடித்திருப்பேனே என்று தோன்றியது.
‘ஆனால் அதற்கெல்லாம் மூலகாரணமான நீ முதலில் தைரியம் நிறைந்த ஒரு ஆண்மகனாகவும் பொறுப்புள்ள ஒரு அண்ணனாகவும், இருந்திருக்கவேண்டுமேயடா, வேதாசலம்!’ என்று என் மனசாட்சி உள்ளுக்குள் உரைத்தது.
"நீலா!" என்னையறியாமல் கூப்பிட்டுவிட்டேன்.
சட்டென திரும்பியவள், ஒருகணம் திகைத்துப் பின் சிநேகமாய் மலர்ந்தாள்.
"ஹே….வேதா! நீங்களா? நம்பவே முடியல. எவ்வளவு நாளாச்சு உங்களைப் பார்த்து!"
"ரெண்டு வருஷம் இருக்கும், இல்லே?" நான் சொல்லவும் அவள் ஆமோதித்தாள்.
"சந்தியா எப்படி இருக்கா? ஏதாவது விவரம் தெரியுமா?" அவள் என்னைக் கேட்க, நான் அதிர்ந்தேன்.
"நான் உன்னைக் கேட்கலாம்னு நினைச்சேன். நீ என்னைக் கேக்கறே? எனக்குத் தங்கைன்னாலும் என்னை விட உனக்குதானே நெருக்கமான தோழி. உனக்கு எதுவும் தெரியாதா?"
நான் ஏமாற்றத்துடன் கேட்டேன்.
"ப்ச்! நீங்களும் உங்க அம்மாவும் ஊரை விட்டுப் போனதுக்கப்புறம் நானும் கல்யாணமாகிப் போய்ட்டேன். எனக்கும் பல பிரச்சனைகள். அதுக்குப் பிறகு அந்த ஊர்பக்கமே தலை வச்சுப் படுக்கலை. எந்தத் தொடர்பும் இல்ல."
என்ன சொல்கிறாள்? ஊர்ப்பக்கமே போகவில்லை என்கிறாளே? நீலாவை எனக்கு மிகவும் பிடிக்கும். சந்தியாவுக்கு இவள் எப்படி தோழியானாள் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால் சந்தியாவின் காதல் நாடகம் அரங்கேறியபின் அம்மா இவளை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டார்கள்.
"நீயும் உடந்தைதானேடீ? எனக்குத் தெரியாதுன்னு சும்மா கதையளக்காதே. நீ மட்டும் உங்க அப்பா அம்மா சொல்றவனைக் கல்யாணம் பண்ணிகிட்டு சுகமா இருப்பே! என் மகள் ஒண்ணுமில்லாதவனோட ஓடிப்போய் சீரழியணுமா?"
எனக்கே சீ என்றிருந்தது. அம்மாவை அடக்கவும் முடியவில்லை. அம்மாவை மட்டுமல்ல, எவரையுமே எதிர்கொள்ளும் சக்தி எனக்கில்லை.
குனிந்த தலை நிமிராமல் செல்லும் என்னைப் பரிச்கசிக்கவென்றே ஒரு கூட்டம் எங்கள் தெருவில் இருந்தது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் யார் யாரென்று எனக்குத் தெரியாது. சந்தியாவுக்கு அவர்கள் எல்லோர் பெயரும் அத்துப்படி. சரியான துடுக்கு. எனக்காக அவர்களிடம் வம்புக்கும் செல்லத் தயங்கமாட்டாள்.
ஆனால் வீட்டுக்குள் என்னை ஒரு எதிரியாகவே பார்ப்பாள். ஒருநாளும் அன்பாய் ஆசையாய் பேசியது கிடையாது. இவ்வளவு ஏன்? என்னோடு சேர்ந்து நடக்கவும் விரும்ப மாட்டாள் என்றால் எந்த அளவுக்கு என்மீது அவளுக்கு வெறுப்பு என்பது புரியும்.
அப்பாவுக்குப் பின் இந்தக் குடும்பத்தை நான் தான் துக்கி நிறுத்துகிறேன் என்றாலும் அம்மாவை மறுத்து இதுவரை ஒரு வார்த்தை பேசியதில்லை. அதனாலேயே எப்போதும் நான் தான் அம்மாவின் செல்லம். சந்தியா என்னை வெறுக்க இதுவே முக்கியக் காரணம்.
என்னுடைய அமைதியான அடங்கிப்போகும் குணமும், சந்தியாவின் ஆர்ப்பாட்டமான துடுக்குத்தனமும் எப்போதும் எல்லோராலும் ஒப்பீடு செய்யப்பட்டு விமர்சனத்துக்குள்ளாவது எங்கள் இருவருக்குமே பிடிக்காத ஒன்று. இதுவும் எங்களுக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி உடன்பிறந்தவர்களுக்கிடையில் ஒரு பிளவை உண்டாக்கியிருந்தது.
எனக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருந்த சமயம், சந்தியா எங்கள் தெரு தையற்கடைப் பையனுடன் ஓடிப்போனாள். திடுதிப்பென்று நிகழ்ந்த நிகழ்வென்று சொல்லிவிடமுடியாது. ஜாக்கெட் தைக்கப்போகிறேன் என்று அடிக்கடி அங்கு போவாள். ஆனால் இப்படி இருக்குமோ என்ற சந்தேகம் யாருக்கும் துளியும் எழவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
ஓடிப்போவதற்கு முதல் நாள் என்னிடம் பேசினாளே! நான் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியுமோ? வழக்கம்போலவே என் கோழைத்தனம் என்னைக் கட்டிப்போட்டுவிட்டது.
"வேதா! நீ மட்டும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்தா போதும், பல பிரச்சனை தீர்ந்திடும். சம்பாதிச்சுக் கொடுக்கறதோட உன் கடமை தீர்ந்ததுன்னு நினைக்கிறே! யார் என்ன சொன்னாலும் உனக்குப் பிடிக்கலைன்னாலும் நீ தலையாட்டிட்டே இருந்தா ஒருநாள் உன் தலையிலேயே மிளகா அரைச்சிடுவாங்க."
"என்னை என்ன பண்ண சொல்றே?"
"நாளைக்கு நான் கேசவனோட புறப்படறேன். அவன் கையில் தொழில் இருக்கு. எங்க போனாலும் நாங்க பிழைச்சுக்குவோம்! ஆனா இது சரியில்லைன்னு நீ நினைச்சா இப்பவே அம்மாகிட்ட பேசி என் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிக்கொடு."
"நான் எப்படி சந்தியா...அம்மாகிட்ட....?"
"அப்ப…விடு! நான் போறதைப் பத்தி அம்மாகிட்ட மூச்சுவிடாதே. உனக்குப் புண்ணியமாப் போவும்!”
எதுவும் செய்யத்தோன்றாமல் விழித்தேன்.
"அப்புறம் இன்னொரு விஷயம். உன் கல்யாணத்தில் உனக்கு இஷ்டமில்லைன்னும் எனக்குத் தெரியும். அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிக்காம உனக்காகப் பண்ணிக்கோ. வாயைத் திறந்து உன் வாழ்க்கையையாவது காப்பாத்திக்கோ!"
என்னை நினைத்து எனக்கே பரிதாபம் உண்டானது. எனக்குப் பின் பிறந்தவள் எனக்கு புத்தி சொல்லிப் போகிறாள். நான் என்ன செய்வேன்? வாய் பேசும் துணிவு இருந்திருந்தால்தான் அன்றைக்கே அம்மாவிடம் சொல்லியிருப்பேனே!
நான் வாயைத் திறக்காமலேயே அந்த வரன் முறிந்துபோனது. எல்லாம் சந்தியாவின் கைங்கர்யம்தான். பின்னே? ஓடிப்போன பெண்ணின் வீட்டுடன் சம்பந்தம் செய்துகொள்ள எவர்தான் முன்வருவார்கள்?
நான் மனதளவில் சந்தியாவுக்கு நன்றி சொன்னேன். இருந்தாலும் அவள் எங்கு இருக்கிறாளோ? என்ன துன்பப்படுகிறாளோ? என்ற கவலை இருந்தது. கேசவன் எப்படிப்பட்டவன் என்று எனக்குத் தெரியாது. ஜாக்கெட் தைப்பதில் கெட்டிக்காரன் என்பது மட்டும் தான் தெரியும்.
சந்தியா ஓடிப்போனதும், என் திருமணம் தடைபட்டதும் அம்மாவுக்கு இரட்டை அதிர்ச்சி. எனக்கோ வெளியில் தலைகாட்டமுடியவில்லை. தெருவில் போகும்போதும் வரும்போதும் யாரோ யாருடனோ என்னைப் பற்றி, என் தங்கையைப் பற்றி, கிசுகிசுப்பதை உணரமுடிந்தது.
சந்தியா ஓடிப்போனதால் எங்கள் தெருவிலிருந்த பிரமாதமான ஒரு தையற்கலைஞரை இழந்த வருத்தம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. அம்மா உருக்குலைந்து போனார்கள். அம்மாவைத் தேற்றும் பொருட்டும் ‘உச்’ கொட்டும் ஊர்சனங்களிடமிருந்து என்னைத் தற்காக்கும் பொருட்டும் அவசர அவசரமாக மாற்றல் வாங்கி இந்த ஊருக்கு வந்தேன்.
எப்படியோ இரண்டு வருடம் ஓடிவிட்டது. அம்மாவுக்கும் பழகிவிட்டது. சந்தியாவின் நிலைதான் தெரியவில்லை. நீலாவுக்குத் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையும் அவளைச் சந்தித்த இந்த நொடியில் பொய்த்துப்போனது.
"என்ன வேதா, என்ன யோசிக்கிறீங்க?"
"பழசையெல்லாம் நினைச்சுகிட்டேன். அன்னைக்கு எங்க அம்மா உன்னைத் தவறாப் பேசினதையெல்லாம் மனசில் வச்சுக்காதே, நீலா. அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அம்மா இப்ப முன்னாடி மாதிரி இல்ல. நீ அவசியம் வீட்டுக்கு வரணும்."
"அம்மா பேசினதையெல்லாம் அப்பவே மறந்திட்டேன். நீங்க வருத்தப்படாதீங்க."
"நீலா, நீ எப்படி இருக்கே? உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார்? என்ன இந்தப் பக்கம்?"
"ரெண்டாவது கேள்வி தவிர்த்து மத்த ரெண்டுக்கும் பதில் என்கிட்ட இருக்கு. நான் நல்லா இருக்கேன். இங்கதான் வேலை பாக்கறேன்." பக்கத்து கடையை கண்களால் சுட்டினாள்.
"வாங்களேன், காப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாம்.."
நீலா அழைக்க, மறுக்க முடியாமல் தொடர்ந்தேன்.
கடைத்தெருவிலிருந்த பிரபல உணவகத்தில் நுழைந்தோம். எனக்கும் சேர்த்து அவளே ஆர்டர் செய்தாள்.
நீலாவின் கதையைக் கேட்பதா தவிர்ப்பதா ஒன்றும் புரியவில்லை. என் பிறவிக்குணம் என்னைக் கேட்கவிடாமல் தடுத்தது. கேட்பேனென்று எதிர்பார்த்திருப்பாள். கடைசியில் அவளாகவே சொல்லத் தொடங்கினாள்.
நீலாவின் கணவனுக்கு அவளுடனான திருமணத்தில் உடன்பாடு இல்லையாம். வேறு ஒரு பெண்ணை மணக்க விரும்பியிருந்தானாம். அவனுடைய பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் இவளைத் திருமணம் செய்தவன் ஒரு வாரத்துக்குள்ளாகவே தன் காதலியுடன் ஓடிவிட்டானாம். இரண்டு தரப்புப் பெற்றோரும் ஒருவரை ஒருவர் தூற்றிப் பழிசுமத்தி சண்டையிட்டுக்கொண்டனரே தவிர இவள் நிலை என்ன என்பதை யோசிக்க மறந்தே போனார்களாம். வெறுத்துப்போனவள், வேலை தேடிக்கொண்டு தனியே வந்துவிட்டாளாம்.
இதையெல்லாம் அவள் சிரித்துக்கொண்டே சொன்னாலும் உள்ளூர ஊறியிருக்கும் சோகத்தை என்னால் உணரமுடிந்தது. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல மனம் ஏங்கியது.
சந்தியா மட்டும் ஓடிப்போகாமல் இருந்திருந்தால்.... அம்மாவுக்கு இவள்மேல் வெறுப்புண்டாகாமல் இருந்திருந்தால்…….என் காதலை அன்றே அம்மாவிடம் சொல்லி இவளைக் கைப்பிடித்திருப்பேனே என்று தோன்றியது.
‘ஆனால் அதற்கெல்லாம் மூலகாரணமான நீ முதலில் தைரியம் நிறைந்த ஒரு ஆண்மகனாகவும் பொறுப்புள்ள ஒரு அண்ணனாகவும், இருந்திருக்கவேண்டுமேயடா, வேதாசலம்!’ என்று என் மனசாட்சி உள்ளுக்குள் உரைத்தது.