PDA

View Full Version : மெய்யா? பொய்யா?



சொ.ஞானசம்பந்தன்
10-08-2010, 01:07 AM
நான்காம் வகுப்பு மாணவனாய் நானிருந்தபோது நெருங்கிய உறவினர் வீட்டில் கருமாதிக்கு என்னையும் அழைத்துச் சென்றனர். காலை வகுப்புக்குப் போகவில்லை. பிற்பகலாவது போகலாம் என்றால் முடியாது போலிருந்தது. சாப்பிட்டு விட்டுக் கிளம்பவேண்டும். துறையிலிருந்து எல்லாரும் வந்தபின்புதான் உண்ணலாமாம். ஆவலுடன் அவர்களின் வருகையை எதிர்பார்த்திருந்தேன். நேரம் ஆனதேயொழிய அவர்கள் வருவதாய்த் தெரியவில்லை.

இனிக் காத்திருக்க நேரமில்லை என்ற நிலையில், 'சாப்பிடாமலே போகிறேன்' எனச் சொல்லிவிட்டுப் புறப்பட்டு வழியிலிருந்த என் வீட்டில் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாய் விரைந்தேன். அப்படியும் தாமதமாகிவிட்டது.

மதிப்புக்குரிய ஆசிரியர் கட்சிராயரை எனக்கு மிகப் பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும்.

"ஏன் தாமதம்?" என்று கேட்ட அவரிடம் காரணத்தைச் சொன்னேன்.

மகிழ்ச்சியுடன் அவர் கூறினார். "பார்த்தீர்களா? சாப்பாட்டைவிடப் படிப்பு முக்கியம் என்று நினைத்திருக்கிறான்."

ஒரு மாணவன் அதை ஏற்காமல், "பொய் சொல்கிறான்" என மறுத்தபோது என் பிஞ்சு மனம் வாடிற்று. பொய் சொல்லி எனக்குப் பழக்கமில்லை. உண்மை செல்லாமற் போய்விடுமோ?

ஆசிரியர் என் கண் கீழிமையை இழுத்துப் பார்த்துவிட்டு, "சாப்பிடாமல்தான் வந்திருக்கிறான்" என்று உறுதியாய்க் கூறி என்னை ஆதரித்தபோது உள்ளம் பூரித்தேன். ஒரு கணந்தான். மீண்டும் எதிர்ப்பு!

"அவனுக்கு எப்போதும் கண் அப்படித்தான் இருக்கும்!"

அடப்பாவி! என்னவோ என் இமைகளை அடிக்கடி விலக்கிப் பார்த்து அனுபவப்பட்டவன் போல் பேசுகிறானே! எப்படி நிரூபிப்பேன்? ஒரே தவிப்பு!

மீண்டும் ஆசிரியர் உதவிக்கு வந்தார். என் உள்ளங்கையை முகர்ந்து பார்த்துவிட்டு, "மெய்யாகத்தான் சொல்கிறான்" என்று சான்றளித்ததும் எதிர்ப்பு ஓய்ந்தது. மன ஆறுதலுடன் இருக்கைக்குச் சென்றேன்.

(இமையைப் பிதுக்கிப் பார்த்தால் சாப்பிட்டது சாப்பிடாதது தெரியுமா என்று இன்றுவரை எனக்கு ஐயம்தான்!!)

சில ஆண்டுகளுக்குப் பின்பு அதே போன்ற நிகழ்ச்சி.

12 வயது இருக்கும். தொலைக்காட்சியில்லாத காலமாதலால் வீட்டுக்குள் முடங்கி சேனலில் மொய்த்து நேரம் போக்குகிற துர்பாக்கியம் ஏற்படவில்லை! மாலையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து தெருவில் ஓடியாடி விளையாடி மகிழ வாய்ப்பிருந்தது.

ஒருநாள் ஆட்டத்துக்குப் பின்பு இரு நண்பர்களும் நானும் கோவிலுக்குப் போவதென்று திடீர் முடிவு செய்து செயலிலும் இறங்கினோம். திரும்பி வருகையில் விளக்கு வைத்துவிட்டது. தாமதத்துக்குக் காரணத்தைத் தாயார் கேட்டபோது உண்மையைச் சொன்னேன்.

உடனே என் அண்னன் (12 வயது மூத்தவர்), "பொய்! சினிமாக் கொட்டகைக்குப் பாட்டுக் கேட்கப் போயிருப்பான்" என்றார்.

நான்காம் வகுப்பு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தெரிந்தமாதிரி பேசுகிறாரே! என்ன அநியாயம்!

"கோவிலுக்குத் தான் போனேன், குஞ்சிதபாதத்தைக் கேட்டுப்பாருங்கள், அவனும் வந்தான்"

அண்ணன் வாய் அடைத்தது. தாயார் நம்பினார்.

(சினிமாப் பாட்டுக் கேட்கக் கொட்டகைக்குப் போகலாம் என்ற புதிய தகவலை அன்றுதான் அறிந்துகொண்டேன். அண்ணன் தம்மையறியாமலே தவறான வழியொன்றைக் காட்டினார். எனக்கு அதில் நாட்டம் இல்லாமையால் தப்பித்தேன்!)

இந்த இரு நிகழ்ச்சிகளிலிருந்தும் நான் படிப்பினை பெற்று ஒரு முடிவுக்கு வந்தேன். குடும்பத்திலாகட்டும், வெளியிலாகட்டும், யாராவது என்னிடம் ஒன்றைச் சொன்னால் அது பொய் என மறுப்பதற்குத் தக்க ஆதாரம் இல்லாதவரைக்கும் மெய் என்றே கொள்ளவேண்டும் என்பதுதான் அந்த முடிவு.

குற்றவாளிகள் பலர் தப்பித்தாலும் பரவாயில்லை, ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது சட்டத்தின் அடிப்படையல்லவா? அதுபோலப் பொய் சொல்லி எத்தனை பேர் ஏமாற்றினாலும் சரி, ஒரு மெய்யரைப் பொய்யர் என்று நான் தவறாக நினைத்துவிடக்கூடாது.

அந்த முடிவின்படிதான் ஒழுகிவருகிறேன்.

(நிலாச்சாரலில் வெளியான என் கட்டுரை.)

அன்புரசிகன்
10-08-2010, 02:40 AM
இன்றய இளம் சமுதாயத்துக்கு நல் நீதி சொல்லும் சம்பவம் இது. சில நேரங்களில் உண்மையை நிரூபிப்பது எவ்வளவு கடினம். வாழ்த்துக்கள் ஐயா.

சொ.ஞானசம்பந்தன்
10-08-2010, 09:36 AM
இன்றய இளம் சமுதாயத்துக்கு நல் நீதி சொல்லும் சம்பவம் இது. சில நேரங்களில் உண்மையை நிரூபிப்பது எவ்வளவு கடினம். வாழ்த்துக்கள் ஐயா.

வாழ்த்துக்கும் பின்னூட்டத்துக்கும் உளமார்ந்த நன்றி.

வியாசன்
10-08-2010, 11:19 AM
ஞானசம்மந்தன்
பலர் மற்றவர்களை மட்டம் தட்டுவதற்குதான் முயல்கின்றனர். மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் விதவையாகவேணும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

அமரன்
11-08-2010, 08:15 PM
சந்தேகப்படனும், ஆனால் சந்தேகப்படுவதைக் காட்டிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதுவே சில சமயம் தவறான பாதைகளைக் காட்டி விடும்.

நீங்கள் சொன்ன நிகழ்வுகளில் உங்களுக்குத் தெரியாத தவறான செய்கையை உற்றவர்கள் உரைத்துள்ளார்கள். நல்ல வேளை நீங்கள் தடம் புரளவில்லை.

மற்றவர்களுக்கு என்னை நிரூபிக்க வேண்டும் என்று என்றும் நான் எண்ணியதில்லை. நான் தவறு செய்யவில்லை. இந்தளவுதான் என் பேச்சு. இதனால் நானடைந்த பாதிப்புகளும் உண்டு. நன்மையும் உண்டு. அண்மைக்காலமாக ஒரு சிலருக்கு நிரூபிக்க வேண்டியது யதார்த்தத் தேவை என்பதையும் பட்டறிந்தேன்.

அழகான நடையில் அந்த நாள் ஞாபகம்.

பாராட்டுகள் அய்யா.

சுகந்தப்ரீதன்
12-08-2010, 07:47 PM
நல்லதொரு படிப்பினை..!!

பகிர்வுக்கு நன்றி ஐயா..!!:p

சொ.ஞானசம்பந்தன்
22-08-2010, 05:59 AM
ஞானசம்மந்தன்
பலர் மற்றவர்களை மட்டம் தட்டுவதற்குதான் முயல்கின்றனர். மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் விதவையாகவேணும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

கருத்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
22-08-2010, 06:00 AM
சந்தேகப்படனும், ஆனால் சந்தேகப்படுவதைக் காட்டிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதுவே சில சமயம் தவறான பாதைகளைக் காட்டி விடும்.

நீங்கள் சொன்ன நிகழ்வுகளில் உங்களுக்குத் தெரியாத தவறான செய்கையை உற்றவர்கள் உரைத்துள்ளார்கள். நல்ல வேளை நீங்கள் தடம் புரளவில்லை.

மற்றவர்களுக்கு என்னை நிரூபிக்க வேண்டும் என்று என்றும் நான் எண்ணியதில்லை. நான் தவறு செய்யவில்லை. இந்தளவுதான் என் பேச்சு. இதனால் நானடைந்த பாதிப்புகளும் உண்டு. நன்மையும் உண்டு. அண்மைக்காலமாக ஒரு சிலருக்கு நிரூபிக்க வேண்டியது யதார்த்தத் தேவை என்பதையும் பட்டறிந்தேன்.

அழகான நடையில் அந்த நாள் ஞாபகம்.

பாராட்டுகள் அய்யா.

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
22-08-2010, 06:04 AM
நல்லதொரு படிப்பினை..!!

பகிர்வுக்கு நன்றி ஐயா..!!:p

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

Nivas.T
22-08-2010, 08:01 AM
இந்த முடிவு அனைவராலும் எடுக்க்கப்பட வேண்டிய ஒன்று

நன்றி ஐயா

பாரதி
23-08-2010, 07:28 AM
பகிர்வுக்கு நன்றி ஐயா.

சிவா.ஜி
23-08-2010, 08:42 AM
உண்மையை உண்மையென்று நிரூபிக்க சில நேரங்களில் சிரமமேற்பட்டுவிடுகிறது. அதனால்...நீங்கள் சொல்வதைப் போல பொய் என்று நிரூபிக்க ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் நம்புவதே நல்லது.

பகிர்வுக்கு நன்றி ஐயா.

சொ.ஞானசம்பந்தன்
31-08-2010, 05:31 AM
இந்த முடிவு அனைவராலும் எடுக்க்கப்பட வேண்டிய ஒன்று

நன்றி ஐயா

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
31-08-2010, 05:33 AM
உண்மையை உண்மையென்று நிரூபிக்க சில நேரங்களில் சிரமமேற்பட்டுவிடுகிறது. அதனால்...நீங்கள் சொல்வதைப் போல பொய் என்று நிரூபிக்க ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் நம்புவதே நல்லது.

பகிர்வுக்கு நன்றி ஐயா.

பின்னூட்டத்துக்கு அகமார் நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
31-08-2010, 05:34 AM
பகிர்வுக்கு நன்றி ஐயா.

பின்னூட்டத்துக்கு நன்றி.

விகடன்
05-10-2010, 01:40 PM
உண்மை சொல்லியபோதும் அதை பொய் என பிறர் உரைக்கையில் குமுறிய மனத்தினால் ஏற்பட்ட வைராக்கியம்தானே ஐயா!

காலத்திற்கு தவறமாட்டார்கள்.

சுவையான கதை.

சொ.ஞானசம்பந்தன்
11-10-2010, 04:58 AM
உண்மை சொல்லியபோதும் அதை பொய் என பிறர் உரைக்கையில் குமுறிய மனத்தினால் ஏற்பட்ட வைராக்கியம்தானே ஐயா!

காலத்திற்கு தவறமாட்டார்கள்.

சுவையான கதை.

ஆம். கெட்ட பட்டறிவும் நற்பயன் விளைக்கும். பாராட்டுக்கு நன்றி.

வல்லம் தமிழ்
20-10-2010, 04:42 PM
நல்ல கட்டுரை!தீர்ப்புகள் தீர்வுகளையும்,திருந்துதல்களையும் தர வேண்டுமே தவிர தண்டனைகளை தரக்கூடாது

issa
21-10-2010, 09:36 AM
பரஸ்பரம் நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் நடந்தால் என்றும் உண்மைகள் சாவதில்லை

சொ.ஞானசம்பந்தன்
24-10-2010, 06:23 AM
நல்ல கட்டுரை!தீர்ப்புகள் தீர்வுகளையும்,திருந்துதல்களையும் தர வேண்டுமே தவிர தண்டனைகளை தரக்கூடாது

பின்னூட்டத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி.

sures
17-11-2010, 03:44 PM
உங்கள் வாழ்வில் நிகழ்த்த சம்பவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

மேலே சிலர் கூறியது போல், உண்மையான நிகழ்வுகளை புரிய வைப்பது கஷ்டம் தான். ஏதாவது காரியம் செய்யும் போது சாட்சிகள் வைத்தா செய்ய முடியும்?
பொய் என்று சொல்வதற்கு சிலர் இருப்பார்கள்.

சொ.ஞானசம்பந்தன்
20-11-2010, 08:55 AM
உங்கள் வாழ்வில் நிகழ்த்த சம்பவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

மேலே சிலர் கூறியது போல், உண்மையான நிகழ்வுகளை புரிய வைப்பது கஷ்டம் தான். ஏதாவது காரியம் செய்யும் போது சாட்சிகள் வைத்தா செய்ய முடியும்?
பொய் என்று சொல்வதற்கு சிலர் இருப்பார்கள்.

விரிவான விமர்சனத்துக்கு உளமார்ந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
20-11-2010, 08:57 AM
பரஸ்பரம் நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் நடந்தால் என்றும் உண்மைகள் சாவதில்லை

பின்னூட்டத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி