Vel Tharma
09-08-2010, 03:59 PM
இருளே வழியானது
துயரே துணையானது
எங்கும் அவலங்கள்
கூக்குரல்களே இசையானது
ஆனாலும் அவன் நடக்கிறான்.
.
துணைக்கென வந்தோர்
துரோகிகளாயினர்
தீர்க்கவென வந்தோர்
தீர்த்துக் கட்டினர்
ஆனாலும் அவன் நடக்கிறான்.
.
பாரா முகங்களே
பழக்கங்கள் ஆயின
அள்ளி வைப்போரே
அருகில் நின்றனர்
ஆனாலும் அவன் நடக்கிறான்.
.
அடுத்துக் கெடுப்போரே
அயலவர் ஆகினர்.
தடுக்க வேண்டியோரே
தண்டம் கொடுத்தனர்.
ஆனாலும் அவன் நடக்கிறான்.
.
பொய்களை பலவற்றை
திருப்பி திருப்பிச் சொல்லி
உண்மையாக்கினர்.
ஆனாலும் அவன் நடக்கிறான்.
.
உண்மைகளை எல்லாம்
திருப்பி திருப்பி தாக்கிப்
பொய்களாக்கினர்.
ஆனாலும் அவன் நடக்கிறான்.
.
எல்லாமே இழந்தாலும்
நம்பிக்கை இழக்காததால்
கீழ்த்திசையில் ஒரு ஒளிக்கீற்றை
நோக்கி அவன் நடக்கின்றான்
துயரே துணையானது
எங்கும் அவலங்கள்
கூக்குரல்களே இசையானது
ஆனாலும் அவன் நடக்கிறான்.
.
துணைக்கென வந்தோர்
துரோகிகளாயினர்
தீர்க்கவென வந்தோர்
தீர்த்துக் கட்டினர்
ஆனாலும் அவன் நடக்கிறான்.
.
பாரா முகங்களே
பழக்கங்கள் ஆயின
அள்ளி வைப்போரே
அருகில் நின்றனர்
ஆனாலும் அவன் நடக்கிறான்.
.
அடுத்துக் கெடுப்போரே
அயலவர் ஆகினர்.
தடுக்க வேண்டியோரே
தண்டம் கொடுத்தனர்.
ஆனாலும் அவன் நடக்கிறான்.
.
பொய்களை பலவற்றை
திருப்பி திருப்பிச் சொல்லி
உண்மையாக்கினர்.
ஆனாலும் அவன் நடக்கிறான்.
.
உண்மைகளை எல்லாம்
திருப்பி திருப்பி தாக்கிப்
பொய்களாக்கினர்.
ஆனாலும் அவன் நடக்கிறான்.
.
எல்லாமே இழந்தாலும்
நம்பிக்கை இழக்காததால்
கீழ்த்திசையில் ஒரு ஒளிக்கீற்றை
நோக்கி அவன் நடக்கின்றான்