சசிதரன்
08-08-2010, 04:51 PM
http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-98/po-sasi.jpg
நீ எதிர்பார்ப்பது மிக பத்திரமாய்
என்னிடம் இருக்கிறது.
கதவுகள் திறப்பதற்கென
காத்துக் கொண்டிருக்கிறாய்..
அதன் சாவி என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.
மௌனம் உன்னைக் கொல்வதாய்
கவலை கொள்கிறாய்..
உனக்கான வார்த்தைகள்
என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.
ரசமிழந்த நிலைக் கண்ணாடியில்
நம் பிம்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறாய்..
பிரியங்களின் பாதரசம்
என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.
வெற்றுக் காகிதங்களை
வெறித்துக் கொண்டிருக்கிறாய்..
நிலவினை முகமெனவும்
நட்சத்திரங்களைப் புன்னகையெனவும்
உருவகப்படுத்தும் ஓர் கவிதை
என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.
கனவின் நீள்பாதையில் நீ பூக்கள் விரும்பிக் காத்திருக்கிறாய்
நான் இரவின் வேர்களைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறேன்..
அதுவரை...
நீ எதிர்பார்ப்பது மிக பத்திரமாய்
என்னிடமே இருக்கும்.
நீ எதிர்பார்ப்பது மிக பத்திரமாய்
என்னிடம் இருக்கிறது.
கதவுகள் திறப்பதற்கென
காத்துக் கொண்டிருக்கிறாய்..
அதன் சாவி என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.
மௌனம் உன்னைக் கொல்வதாய்
கவலை கொள்கிறாய்..
உனக்கான வார்த்தைகள்
என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.
ரசமிழந்த நிலைக் கண்ணாடியில்
நம் பிம்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறாய்..
பிரியங்களின் பாதரசம்
என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.
வெற்றுக் காகிதங்களை
வெறித்துக் கொண்டிருக்கிறாய்..
நிலவினை முகமெனவும்
நட்சத்திரங்களைப் புன்னகையெனவும்
உருவகப்படுத்தும் ஓர் கவிதை
என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.
கனவின் நீள்பாதையில் நீ பூக்கள் விரும்பிக் காத்திருக்கிறாய்
நான் இரவின் வேர்களைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறேன்..
அதுவரை...
நீ எதிர்பார்ப்பது மிக பத்திரமாய்
என்னிடமே இருக்கும்.