சசிதரன்
04-08-2010, 03:03 PM
குளிர் இரவு முடிந்துவிட்டது...
உன் பிரியங்களின் கதகதப்பு இனி தேவைப்படாது.
நீ பரிசளித்த நிலைக்கண்ணாடியை
திரும்ப பெற்றுக் கொள்
அது என்னை என்னிலிருந்து வேறாய் காட்டுகிறது.
இனி ஒருபோதும் பௌர்ணமிகளின் வெளிச்சம்
தேவைப்படப் போவதில்லையென்பதால் எந்நேரமும்
துண்டு துண்டாய் உடைக்கபடலாம் நிலா.
தேநீர் குடிப்பதை நிறுத்தி விட்டேன்...
மழைநாளின் மாலைக்காய் இனி காத்திருக்காதே.
என் வீட்டின் அழைப்புமணியை
எடுத்துவிடப் போகிறேன்.
உன் காத்திருப்புகள் இனி வீண்தான்.
நான்தான் சொல்ல வேண்டுமென்பதில்லை
நீயும் கூட முதலில் சொல்லிவிடலாம்...
குளிர் இரவு முடிந்துவிட்டது...
உன் பிரியங்களின் கதகதப்பு இனி தேவைப்படாதென்று.
உன் பிரியங்களின் கதகதப்பு இனி தேவைப்படாது.
நீ பரிசளித்த நிலைக்கண்ணாடியை
திரும்ப பெற்றுக் கொள்
அது என்னை என்னிலிருந்து வேறாய் காட்டுகிறது.
இனி ஒருபோதும் பௌர்ணமிகளின் வெளிச்சம்
தேவைப்படப் போவதில்லையென்பதால் எந்நேரமும்
துண்டு துண்டாய் உடைக்கபடலாம் நிலா.
தேநீர் குடிப்பதை நிறுத்தி விட்டேன்...
மழைநாளின் மாலைக்காய் இனி காத்திருக்காதே.
என் வீட்டின் அழைப்புமணியை
எடுத்துவிடப் போகிறேன்.
உன் காத்திருப்புகள் இனி வீண்தான்.
நான்தான் சொல்ல வேண்டுமென்பதில்லை
நீயும் கூட முதலில் சொல்லிவிடலாம்...
குளிர் இரவு முடிந்துவிட்டது...
உன் பிரியங்களின் கதகதப்பு இனி தேவைப்படாதென்று.