PDA

View Full Version : நாயைப் போன்ற நடத்தைகளுடன் உக்ரேன் பெண்



அன்புரசிகன்
04-08-2010, 10:55 AM
வீரகேசரி இணையம் 8/2/2010 12:42:53 PM (http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=25991)

http://www.virakesari.lk/news/admin/images/dog_3.jpg
உக்ரேன் நாட்டைச் சேர்ந்த ‘ஒசானா மலய' என்ற பெண் மனித நடத்தையை மறந்து நாய்களுக்கேயுரிய நடத்தைப் பாங்குடன் நடந்து கொள்கிறார். அவரது செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நாயின் நடத்தைகளைப் போன்று அமைந்துள்ளது.

இவர் குழந்தையாக இருக்கும் போது குடிகாரப் பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் நாய் வளர்க்கும் இடமொன்றில் நாய்களுடன் 6 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து இருக்கின்றார். இதனால் இப்பெண் முற்றுமுழுதாக நாயின் நடத்தைகளை கொண்டுள்ளாள்.

நாய்களைப் போன்று குறைப்பது, நடப்பது, உணவு உண்ணுவது, நீர் பருகுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறாள். 6 வருடங்களுக்குப் பின் இப் பெண்ணை சமூக ஆர்வலர்கள் தத்தெடுத்துள்ளனர். விஞ்ஞானிகளின் உதவியுடன் அப்பெண்ணை மீண்டும் மனித இயல்புக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை அவை பலனளிக்கவில்லை. இவருக்கு தற்போது 27 வயதாகியும் இன்றுவரை நாய்களைப் போன்று வாழ்ந்து வருகின்றார்.

மனிதனாக பிறந்தாலும் அவன் வளரும் சூழலைக் கொண்டே அவனது நடத்தைகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதற்கு இப்பெண் சான்று பகர்கிறாள்.

http://www.youtube.com/watch?v=qyqbnDjId7g

நன்றி: வீரகேசரி இணையம்

பா.ராஜேஷ்
10-08-2010, 12:29 PM
பாவம் என்று வருந்துவதை விட வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை...

ரங்கராஜன்
10-08-2010, 03:50 PM
கொடுமையிலும் கொடுமை.......

Narathar
10-08-2010, 06:21 PM
நாராயணா!!!!!
இது என்ன கொடுமை?????

அமரன்
10-08-2010, 09:22 PM
இதுலேந்து என்ன புரியுதுன்னா, நாம நல்லவங்களா நடந்தால் சுத்தி இருக்கிறவங்களும் அப்படியே ஆவாங்க.

மச்சான்
10-08-2010, 09:47 PM
27 வயதாகியும் அவளை இதுவரை மனித இயல்புக்கு மாற்ற இயலவில்லையாமே....? பாவம்.... இதனை என்ன சொல்லி வேதனைப்பட.....?

அன்புரசிகன்
10-08-2010, 09:48 PM
இதுலேந்து என்ன புரியுதுன்னா, நாம நல்லவங்களா நடந்தால் சுத்தி இருக்கிறவங்களும் அப்படியே ஆவாங்க.
யோவ். அது மறுதலை...


ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ........ இல்ல இவர் இப்படி நடக்குறதால தான் நாய்களும் அப்படி நடக்குதா???

கீதம்
10-08-2010, 10:07 PM
மனம் கனக்கவைக்கும் பதிவு. எப்போதோ படித்த 'ஓநாய்க்குழந்தைகள்' பற்றிய நினைவு வருகிறது. அப்பெண் முற்றிலும் குணமடைய வேண்டும். குணமடைந்தபின் ஏன்தான் குணமடைந்தேனோ என்று நினைக்கவைக்காமல் அவரைச் சுற்றியுள்ளவர்கள் வாழவைத்தால்தான் உண்மையில் அவருக்கு மறுபிறவி கிடைக்கும்.

govindh
10-08-2010, 10:58 PM
மனம் கனத்து விட்டது.
‘ஒசானா மலய' நலம் பெற
இறைவனை வேண்டுவோம்.

mojahun
16-08-2010, 12:52 AM
படிக்கும் போதே மனம் கனக்கின்றது! ஓசானா மலய விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறை அருள் புரியட்டும்!

மயூ
17-08-2010, 03:33 PM
இந்தப் பெண் பற்றி இணையத்தில் எங்கேயோ படித்தேன். இவரின் பெற்றோர்கள் எவளவு முயன்றும் இவரை திருத்த முடியவில்லையாம். மனிதர்களைப் போல செயற்பட முடியாது என்று விடாப்பிடியாக இருந்தாராம்.

கடும் போராட்டத்தின் பின்னர் சிறிது மாறினாலும் ஒரு நாள் வீட்டை விட்டே மீளவும் ஓடிப் போய்விட்டாராம் என்று வாசித்தேன். இணைப்பு கிடைத்தால் மன்றத்தில் பகிர்கின்றேன்.

சசிதரன்
17-08-2010, 03:50 PM
அந்த பெண் குணமடைய வேண்டுகிறேன்...