PDA

View Full Version : முதல் குரல்...



kulirthazhal
28-07-2010, 12:00 PM
சுற்றிவரும் காற்று
மோதி சுகந்துபோயின..,

சுட்டுவிரல் நகங்கள்
ஏங்கி சிவந்துபோயின..,

சுற்றும் துறு கருவிழிகள்
மயங்கிபோயின..,

சுவைமிகுந்து எச்சில்
வாயில் பெருகிதேங்கின..,

வட்டமிடும் நேரமுட்கள்
வளைந்து ஓய்ந்தன..,

வக்கிரமும் கோப வீரம்
ஒழிந்துபோயின..,

சித்திரமும் கற்பனையும்
சேர்ந்து ஓங்கின..,

செவிலியர்க்கு முன்னேவந்த
அழுகை! அழுகை!!.....

-குளிர்தழல்

மச்சான்
28-07-2010, 12:02 PM
அருமையான கவிதை குளிர்தழல்.... வாழ்த்துக்கள்.

.